Thursday, 18 September 2014

ஏற்கனவே 40000 ஏக்கர் கோவில் இடம்கொள்ளை போய் விட்டது. இனியும் தாமதித்தால் கோவில் நிலங்கள் அனைத்தும் கொள்ளை போய்விடும்

நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் அருள் பாலித்துவிட்டார். சிவ சிவ சிவ. 1978 ல் அந்த கோவிலின் தர்மகர்த்தா ஏதோ கோல் மால் செய்து 657 சதுர அடி கோவில் நிலத்தை தனியாருக்கு விற்றுவிட்டார். தர்மகர்த்தா பல இடங்களை விற்று இருக்கிறார்.

1959 இந்து சமய மற்றும் அறநிலையக்கொடைகள் சட்டத்தின் பிரிவு 34 (1) ந் கீழ் கோவில் சொத்துக்களை அறநிலையதுறை ஆணையர் அனுமதியில்லாமல் விற்கமுடியாது, சொத்துக்கள் விற்கபட்டால் அதன் பலன் கோ...வில் மற்றும் அறஞ்சார்ந்த செயல்களுக்கு பயன்படும் விதத்தில் இருக்கவேண்டும் என்று சொல்லுகிறது.

1978 ல் விற்கபட்ட கோவில் இடம் ஆணையரின் ஒப்புதலோடு விற்கபட்டதா இல்லையா என்று ஒரே ஒரு கேள்வியோடு ஆணையர் அலுவலகத்துக்கு மார்ச் மாதம் மனு ஒன்றினை அனுப்பினேன். விசாரித்து அறிக்கை அளிக்கிறோம் என்ற ஒரு வரி பதில் வந்தது. அரசு சட்டங்களின் படி எந்த ஒரு மனுவுக்கும் இரண்டு மாதத்துக்கள் பதில் அனுப்பவேண்டும் என்று இருக்கிறது.

பிரிவு 34 மற்றும் கால அவகாச சட்டத்தை சுட்டிக்காட்டி என் மனுவுக்கு பதில் தர உத்திரவிட வேண்டும் என்ற கோரிக்கையோடு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்து இருந்தேன். இன்று விசாரணைக்கு வந்தது.வழக்கம் போல் தள்ளுபடி செய்வார்கள் என எதிர்பார்த்தேன். 

என் வாதத்தின் போது நான் விவரம் கேட்டது ஒரே ஒரு இடம் குறித்து.அதுவும் 1978 விவகாரம். நான் சுட்டி காட்டி இருப்பது TIP OF A MONSTROUS CANCEROUS ICE BERG ,ஏற்கனவே 40000 ஏக்கர் கோவில் இடம்கொள்ளை போய் விட்டது. இனியும் தாமதித்தால் கோவில் நிலங்கள் அனைத்தும் கொள்ளை போய்விடும் என்றேன். மேலும் என் மனுவுக்கு பதில் அளித்தால் போதும் இடத்தை மீட்ப்பது குறித்து எனக்கு கவலை இல்லை என்றேன்.

தலைமை நீதிபதி கவுலுக்கு நன் ராஜீவ் வழக்கில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தது நினைவுக்கு வந்து இருக்கவேண்டும். 
ஒரு மாதத்துக்குள் என் மனுவுக்கு பதில் அளிக்க உத்திரவிட்டார். 

ஆக அகஸ்தீஸ்வரர் இன்று அருள் பாலித்து விட்டார். ஓம் நமஷிவாய. posted by Mohan Jebamani

__._,_.___



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator