Showing posts with label maha Periyava. Show all posts
Showing posts with label maha Periyava. Show all posts

Sunday, 6 September 2015

அவளை யாரும் தொடவேணாம்!

IndiBlogger - The Largest Indian Blogger Community 
அவளை யாரும் தொடவேணாம்!
அது ஒரு சாதுர்மாஸ்யம். பெரியவா காஞ்சியில் இருந்தார்.
ஒரு அம்மா தன்னுடைய இரண்டு பெண்களில், இளையவளோடு பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தாள்.
மூத்தவளுக்கு கல்யாணமாகி நல்லபடிஸெட்டில் ஆகிவிட்டாள்.
சின்னப்பெண் M A படித்துவிட்டு வேலை பார்த்து வந்தாள். அவளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தாள் அபயங்கரமான ஸோதனை அப்போதுதான் ஆரம்பித்தது!
நன்றாக இருந்த அந்தப் பெண், திடீரென்று ஏதோ ஒருமாதிரி பேசவும், சிரிக்கவும் ஆரம்பித்தாள். அந்த சிரிப்பில் ஏனோ ஒருவித அமானுஷ்யம் கலந்திருக்கும்!
வயஸுக்கேத்த பேச்சோ, பழக்கமோ எதுவுமே இல்லாமல், ஸம்பந்தாஸம்பந்தம் இல்லாமல் பேச ஆரம்பித்தாள்.
அக்கம் பக்கம் இருப்பவர்கள், பயந்த கோளாறு, காத்து கருப்பு வேலை, மூளைக் கோளாறு என்று சொல்லி, தங்களுக்கு தெரிந்த உபாயங்களை சொல்ல ஆரம்பித்தனர்.
டாக்டர்கள் எக்கச்சக்க ஸோதனைகளுக்குப் பிறகு "வேலூருக்கு கூட்டிகிட்டு போயி மூளையில ஒரு ஆபரேஷன் பண்ணினா எல்லாம் ஸரியாயிடும்" என்றனர்.
அம்மாவுக்கோ ஏகக் கவலை! கல்யாணம் பண்ணப்போற ஸமயத்தில் இப்படி ஒரு கஷ்டமா?
திக்கற்றவற்கு ஒரே கதியான பெரியவாளைத் தேடி, பெண்ணைக் கூட்டிக் கொண்டு, காஞ்சிக்கு வந்தாள்.
ஆனால், வந்த அன்று ஸாயங்காலம் பெரியவாளை தர்ஶிக்க முடியவில்லை.
இரவு முழுவதும் அவர்கள் தங்கியிருந்த இடத்தில், அந்தப் பெண்ணை வைத்துக் கொண்டு "ஜய ஜய ஶங்கர, ஹர ஹர ஶங்கர" என்று ஜபித்த வண்ணம் இருந்தாள். அந்தப் பெண்ணோ, பயங்கரமாக கத்திக் கத்தி மயக்கம் அடைந்து விட்டாள்.
மறுநாள் காலையில் மடத்துக்கு சென்று பெரியவாளிடம் கதறி விட்டாள் அந்த அம்மா.
"பெரியவாதான் காப்பாத்தணும்! திடீர்னு புத்தி பேதலிச்ச மாதிரி ஆயிட்டா! ...நல்ல கொழந்தை! கல்யாணத்துக்கு பாத்துண்டு இருக்கறச்சே, இப்படி ஆயிடுத்தே!காப்பாத்துங்கோ! "....
பெரியவா முன் பெட்டிப்பாம்பாக அடங்கி ஒடுங்கி நின்று கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
பெரியவாளுடைய அருட்கடாக்ஷம் அவள் மேல் விழுந்தது.
தொடர்ந்து மூன்று நாட்கள் மடத்துக்கு வந்து பெரியவாளை தர்ஶனம் பண்ணினார்கள்.
மூன்றாவது நாள், பெரியவா அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்துக் கொண்டே,
"அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி!..." என்று உத்தரவிட்டார்.
பெரியவாளுடைய கமலத் திருவடிகளை பார்த்துக் கொண்டே அந்த பெண்ணும்,
"தாரமர்க் கொன்றையும் ஷண்பக மாலையும் சாற்றும், தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே!.." என்று கணீரென்று சொல்ல ஆரம்பித்தாள் !
அப்போதுதான் அந்த அதிஸயம் நடந்தது!
வரிஸையாக பாடிக் கொண்டிருக்கும்போதே நடுவில் மயக்கமடைந்தாள்!
அம்மாவும் பக்கத்திலிருந்த பெண்களும் அவளைத் தொடப் போனார்கள். பெரியவா,
" யாரும் தொட வேணாம்! அவ அப்டியே இருக்கட்டும்"
என்று சொல்லிவிட்டார்.
கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தவள், முற்றிலும் பூரணமாக குணமடைந்திருந்தாள்!
"பரமேஶ்வரா! என் அம்மா! பகவதீ!...."
அம்மாவும், பெண்ணும் பெரியவாளின் திருவடிகளில் கண்ணீரைக் காணிக்கையாகினார்கள்.
மஹான்களின் கருணாகடாக்ஷம் ஒரு முறை நம் மேல் விழுந்தாலே போதும்! கோடி கோடி ஜன்ம வினைகளை பொசுக்கிவிடும்! அது நமக்கு ப்ரத்யக்ஷத்தில் தெரியக்கூட தெரியாது. நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் "அவர் இஷ்டம்" என்று இருந்துவிட்டால், தாயின் கர்ப்பத்தில் இருக்கும் ஶிஶுவைப் போல், நாம் நிஸ்சிந்தையாக இருக்க, அவர் தாயுமான ஸ்வாமியாக இருந்து நம்மை ரக்ஷிப்பார்! இது ஸத்யம்!

Wednesday, 7 August 2013

Sri Sri maha Periyava

mobile casino
" } Google+


ஒரு சமயம் பெரியவாளுக்கு” உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. சாத்துக்குடிப் பழச்சாறு கொருக்கும்படி கூறியிருந்தார் வைத்தியர்.
ஒரு பக்தருக்கு இந்தச் செய்தி தெரிந்தது. தினம்தோறும், சுவையும் சாறும் மிக்க சாத்துக்குடிப் பழங்களைத் தேடிக் கண்டுப்பிடித்து கொண்டு வந்து கொடுத்தார். அவற்றை பிழிந்து, பெரியவாளுக்குக் கொடுத்து வந்தார்கள் தொண்டர்கள்.

ஒரு நாள், வழக்கமாக சாத்துக்குடிப் பழங்களை வைக்கும் இடத்தில் அவற்றைக் காணோம். பல இடங்களில் தேடியும் ஒரு பழம் கூட கிடைக்கவில்லை. யாரோ எடுத்து சென்று விட்டார்கள என்று புரிந்தது.

பிறது, வேறு வழியின்றி மாதுளம் பழச்சாறு கொடுக்கப் பட்டது பெரியவாளுக்கு. சாத்துக்குடி காணாமற்போன விஷயம் மெல்லக் கசிந்து பெரியவா” செவிகளுக்குப் போய்விட்டது.

”அவன் (பெயரைச் சொல்லி) வீட்டில் குழந்தைகளுக்கு அம்மை போட்டிருக்கு. பழம் வாங்கிக் கொடுக்க வசதி போதாது. அதனாலே சாத்துக்குடியை எடுத்துப் போயிருக்கான். குழந்தைகளிடம் பாசம், வேற என்ன செய்வான்? அவனை கேட்க வேண்டாம் என்று சொல்லியதோடு, ”நாளைலேர்ந்து தினமும் அவன் வீட்டுக்கு ஆறு சாத்துக்குடி, ஆறு மாதுளை, இரண்டு இளநீர் அனுப்பி விடு” என்றார்.

ஒரு வாரம் சென்றது.

“அம்மை இறங்கிவிட்டது. குழந்தைகளுக்கு ஸ்நானம் செய்து வைத்து விட்டோம்” என்று இள்கிய குரலில் விண்ணப்பித்துக் கொண்டார் அந்த தொண்டர்.

காவி அம்மை தான், மாரி அம்மையைக் கட்டுப் படுத்தினாள் என்பது மிக நெருக்கமான கைங்கர்யபரர்களுக்கு மட்டுமே தெரியும் !!! உம்மாச்சி தாத்தா தானே அம்பாள் !!!

by: Sri Sri Sri Maha Periyava















http://www.facebook.com/pages/Khariharan/115524648579725


Ranjani Geethalaya(Regd.) (Registered under Societies Registration Act XXI of 1860. Regn No S/28043 of 1995) A society for promotion of traditional values through,  Music, Dance, Art , Culture, Education and Social service. REGD OFFICE A-73 Inderpuri, New Delhi-110012, INDIA Email: ranjanigeethalaya@gmail.com  web: http://ranjanigeethalaya.webs.com (M)9868369793 all donations/contributions may be sent to Ranjani Geethalaya ( Regd) A/c no 3063000100374737, Punjab National Bank, ER 14, Inder Puri, New Delhi-110012, MICR CODE 110024135  IFSC CODE PUNB00306300

power by BLOGSPOT-PING






My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator