நவராத்திரி வழிபாடு: இன்று முதல் நாள் - வழிபாட்டு முறை By Sriram Senkottai
முதலாம் நாள்:-
அம்பாள்: சாமுண்டி
உருவ அமைப்பு: தெத்துப்பல் வாய், முண்டன் என்ற அசுரனை வதம் செய்து மாலையாக கொண்டவள்
குணம்: குரூரம் (நீதியைக் காக்க)
சிறப்பு: சப்த கன்னியர்களில் ஏழாம் கன்னி
நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல், எள்ளோதரை
பூஜை செய்ய சிறந்த நேரம்: காலை 10.30 - 12; மாலை: 6 - 7.30
பூஜைக்கு உகந்த மலர்: மல்லிகை
சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டிய தாம்பூலங்களின் எண்ணிக்கை: குறைந்தது 7
பாட வேண்டிய ராகம்: காம்போதி
யார் யாரெல்லாம் வணங்க வேண்டும்:
வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
எண் ஜோதிடப்படி: 8ம் எண்ணில் பிறந்தவர்கள் (பிறவி எண், விதி எண், பெயர் எண், பிரமிட் எண்)
திசை, புத்தி நடப்பவர்கள்: சனி அல்லது ராகு - திசை அல்லது புத்தி, அல்லது அந்தரம் நடப்பவர்கள்
ஜாதக அமைப்பு உடையவர்கள்: லக்னம், கேந்திரம், திரிகோணம் ஆகியவற்றில் சனி அல்லது ராகு உடையவர்கள்
சொல்ல வேண்டிய பாடல்:
[1] மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு--கதித்த கப்பு
வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.
[2] மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - சாமுண்டி - ஆசனாயயாய - நம:
[3] காயத்ரி: ஓம் பிசாசத்வஜாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தந்நோ சாமுண்டி ப்ரசோதயாத் |
No comments:
Post a Comment