Tuesday 23 September 2014

தன்னை நம்பியவரைத் தாய் போல் காப்பது காயத்ரி மந்திரம்.

தன்னை நம்பியவரைத் தாய் போல் காப்பது காயத்ரி மந்திரம்.
அருணன் என்ற அசுரன் சகல தேவர்களையும் ஜெயிக்க நினைத்து இமாலயத்தில் கங்காஸ்நானம் செய்து தவமிருந்து காயத்ரி ஜபம் செய்து வந்தான். அவனது உகர தவம் மூலம் ஏற்பட்ட தீ உலகை வாட்டிற்று. ப்ரும்மா அவன் முன் தோன்றி யாது வரம் வேண்டும் என்று கேட்டார். ஒப்பற்ற பலம் வேண்டும். இரு கால் உள்ளவர்களாலும், நான்கு கால் உள்ளவர்களாலும் ஆயுதத்தாலும் மரணம் ஏற்படா வண்ணம் வரம் வேண்டும் என்றான். வரம் வாங்கியவுடன், தேவர்களை விரட்டி அடித்து இந்தர பதவியை கைப்பற்றினான். அவன் கொடுமை தாங்காது தவித்த போது தேவர்களுக்கு ஒரு அசிரீரி கேட்டது.
அம்பிகையை சரணடையுங்கள். அவன் காயத்ரி மந்திரத்தை சொல்வதை கைவிட்டாலே இறப்பான். என்றது.
தேவ குரு ப்ருஹஸ்பதி அருணனிடம் வந்தார்.
இங்கு எதற்கு வந்தீர்கள் ? நான் உங்கள் விரோதியல்லவா என்றான் அசுரன்.
"நாங்கள் உபாசிக்கும் காயத்ரி மந்திரத்தை நீயும் உபாசிககிறாய். எனவே நீ எங்களுக்கு உறவினன் ஆவாய் " என்றார் தேவகுரு.
இதைக் கேட்டு அசுரன் " ஓ அப்படி ஒரு உறவு கொண்டாட வருகிறீர்களா ? இனி நான் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பதில்லை என்று சொல்லி அன்று முதல் காயத்ரி சொல்வதை நிறுத்தினான். இதனால் அவன் பலத்தை இழந்தான். தேவர்கள் சந்தோஷம் அடைந்து தேவியை உபாசித்தனர். அவள் கருணை கொண்டு வண்டாக மாறினாள். மற்ற சக்தி கணங்களும் வண்டு வடிவமாகி "ஹ்ரீம்" எனும் மந்திர ஒலியை ரீங்காரம் செய்து கோடிக் கணக்கான வண்டுகள் ஒன்று சேர்ந்து அருணனை தாக்கிக் கொன்றன. இரண்டு, நான்கு கால்கள் உள்ள உயிர்களால் அழிவு வரக் கூடாது எனக் கேட்ட அருணன் ஆறு கால்கள் உள்ள வண்டுகளால் மாய்ந்தான்.
நீதி தவறியவனானாலும் அவன் ஜபிப்பதைக கைவிடாத வரை காப்பாற்றியது காயத்ரி மந்திரம்.

மறையொலிக்குமிடமெல்லாம் மஹேசன் இருந்தருள்வான் என்பது சான்றோர் வாக்கு.

அதாவது எங்கெல்லாம் வேதம் ஒலிக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் இறைவன் ப்ரத்யக்ஷமாவான் என்பதாகும்.

அத்தகைய வேதஞானம் இன்றளவும் நமக்குக் கிடைக்கின்றதானால் அது நம் மஹாஸ்வாமிகள் தந்த வரமல்லவோ!

மறை நாதனாம் மஹாபெரியவாளை அனுதினமும் போற்றுவதால் நம் வாழ்வில் நன்மைகள் ஏராளமாய் கிட்டுமன்றோ!


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator