பாலிதீன் பைகளில் அடைக்கப்படும் உணவு பொருள்
(ஒரு எச்சரிக்கை செய்தி)
வன உயிரினங்களுக்கும், இயற்கை வளங்களுக்கும் ஆதாரமாக இருக்கும் காடுகள் இன்று, பொதுமக்களால் அழிவுப்பாதைக்கு சென்றுக்கொண்டிருக்கின்றன. இதற்கு மூலக்காரணம் பாலிதீன் பைகள்.
குஜராத் முதல் கன்னியாகுமரி வரை 1600 கி.மீ., தூரமுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், பாலூட்டிகள் 63, பறவைகள் 323, ஊர்வன 45, மீன்கள் 38, தவளை 27, வண்ணத்துப்பூச்சிகள் 160, 3800 செடி வகைகள் உள்ளன. இதில் 50க்கும் மேற்பட்டவை இங்கு மட்டுமே காணப்படும் அரிய வகைகள். இதில் அதிகம் பாதிக்கப்படுவது சபரிமலை. இங்கு சீசனுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், உணவுப்பொருட்களை பாலிதீன் பைகளில் கொண்டு வருகின்றனர். சாப்பிட்ட பின், அப்படியே போட்டுவிட்டுச் செல்கின்றனர். அதில் ஒட்டியிருக்கும் உணவுப் பொருட்களை உண்ணும் யானை, மான் போன்ற விலங்குகளின் இரைப்பையில் சிக்கி, ஜீரணம் ஆகாமல், மூன்று மாதங்களுள், வயிறு உப்பி இறக்கும் கொடுமை இன்றும் நடக்கிறது.
ஏன் ஆபத்து?: பொதுவாக 18 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் மறுசுழற்சி செய்ய முடியாது. காரணம் நீர் நிலைகள், நிலத்தடி நீர், மண் படிவ நீரை தடுத்து, நீர் ஆதார வழிகளின் 'நெட்வொர்க்கையும்' பாதிக்கிறது. இந்த வகையில் 'கேரிபேக்' எனும் பாலிதீன் பைகள், 'யூஸ் அண்ட் த்ரோ' பிளாஸ்டிக் கப்புகள், இயற்கையை அழிப்பதில் முன்னணியில் உள்ளன. ஒரு 'கேரி பேக்' மண்ணோடு மண்ணாகி அழிய 400 ஆண்டுகள் ஆகுமாம். மேலும் மண்ணில் புதைவதால் மரங்களுக்கு நீர் எடுத்துச் செல்லும் வேர்களை பாதிக்கிறது. தண்ணீரில் மிதக்கும் பாலிதீன் பைகளால் குப்பைகள் பெருகுவதோடு, விலங்குகளுக்கும் தொற்றுநோய் ஏற்படுகிறது.
மனிதர்களுக்கு ஆபத்து : சமீபகாலமாக, 'கேரிபேக்'கில் சுடச்சுட உணவுகளை பார்சல் பண்ணி கொடுக்கின்றனர். சாம்பார் போன்றவைகளையும் சிறிய பாலிதீன் பைகளில் கட்டிக் கொடுக்கின்றனர். சூடாக இருந்தால், பாலதீன் பை இளகி, அதில் உள்ள ரசாயனம் உணவுப்பொருட்களுடன் கலக்கிறது. அதை உண்பவர்களுக்கு குறிப்பாக, கர்ப்பிணிகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் போது, குழந்தைகளையும் பாதிக்கிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் கேடு விளைவிக்கும் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை புறக்கணித்து, இயற்கை வளங்களுக்கும், உயிரினங்களுக்கும் ஆபத்து இல்லாத, மட்கும் தன்மையுடைய, துணிப்பைகள், பேப்பர் பைகளை பயன்படுத்த இப்போதே உறுதிக்கொள்வோம்.
(ஒரு எச்சரிக்கை செய்தி)
வன உயிரினங்களுக்கும், இயற்கை வளங்களுக்கும் ஆதாரமாக இருக்கும் காடுகள் இன்று, பொதுமக்களால் அழிவுப்பாதைக்கு சென்றுக்கொண்டிருக்கின்றன. இதற்கு மூலக்காரணம் பாலிதீன் பைகள்.
குஜராத் முதல் கன்னியாகுமரி வரை 1600 கி.மீ., தூரமுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், பாலூட்டிகள் 63, பறவைகள் 323, ஊர்வன 45, மீன்கள் 38, தவளை 27, வண்ணத்துப்பூச்சிகள் 160, 3800 செடி வகைகள் உள்ளன. இதில் 50க்கும் மேற்பட்டவை இங்கு மட்டுமே காணப்படும் அரிய வகைகள். இதில் அதிகம் பாதிக்கப்படுவது சபரிமலை. இங்கு சீசனுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், உணவுப்பொருட்களை பாலிதீன் பைகளில் கொண்டு வருகின்றனர். சாப்பிட்ட பின், அப்படியே போட்டுவிட்டுச் செல்கின்றனர். அதில் ஒட்டியிருக்கும் உணவுப் பொருட்களை உண்ணும் யானை, மான் போன்ற விலங்குகளின் இரைப்பையில் சிக்கி, ஜீரணம் ஆகாமல், மூன்று மாதங்களுள், வயிறு உப்பி இறக்கும் கொடுமை இன்றும் நடக்கிறது.
ஏன் ஆபத்து?: பொதுவாக 18 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் மறுசுழற்சி செய்ய முடியாது. காரணம் நீர் நிலைகள், நிலத்தடி நீர், மண் படிவ நீரை தடுத்து, நீர் ஆதார வழிகளின் 'நெட்வொர்க்கையும்' பாதிக்கிறது. இந்த வகையில் 'கேரிபேக்' எனும் பாலிதீன் பைகள், 'யூஸ் அண்ட் த்ரோ' பிளாஸ்டிக் கப்புகள், இயற்கையை அழிப்பதில் முன்னணியில் உள்ளன. ஒரு 'கேரி பேக்' மண்ணோடு மண்ணாகி அழிய 400 ஆண்டுகள் ஆகுமாம். மேலும் மண்ணில் புதைவதால் மரங்களுக்கு நீர் எடுத்துச் செல்லும் வேர்களை பாதிக்கிறது. தண்ணீரில் மிதக்கும் பாலிதீன் பைகளால் குப்பைகள் பெருகுவதோடு, விலங்குகளுக்கும் தொற்றுநோய் ஏற்படுகிறது.
மனிதர்களுக்கு ஆபத்து : சமீபகாலமாக, 'கேரிபேக்'கில் சுடச்சுட உணவுகளை பார்சல் பண்ணி கொடுக்கின்றனர். சாம்பார் போன்றவைகளையும் சிறிய பாலிதீன் பைகளில் கட்டிக் கொடுக்கின்றனர். சூடாக இருந்தால், பாலதீன் பை இளகி, அதில் உள்ள ரசாயனம் உணவுப்பொருட்களுடன் கலக்கிறது. அதை உண்பவர்களுக்கு குறிப்பாக, கர்ப்பிணிகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் போது, குழந்தைகளையும் பாதிக்கிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் கேடு விளைவிக்கும் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை புறக்கணித்து, இயற்கை வளங்களுக்கும், உயிரினங்களுக்கும் ஆபத்து இல்லாத, மட்கும் தன்மையுடைய, துணிப்பைகள், பேப்பர் பைகளை பயன்படுத்த இப்போதே உறுதிக்கொள்வோம்.
![]() |
परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

No comments:
Post a Comment