அன்பின் தேவை உணரப்படும் போது...!
மகன் : அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?
தந்தை : கண்டிப்பா.. என்ன கேளு..?
மகன் : 1 மணி நேரத்திற்கு எவ்ளோ சம்பாரிப்பிங்க ?
தந்தை : அது உனக்கு தேவை இல்லாத விஷயம்,
நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?
மகன் : சும்மா தெரிஞ்சிக்கத்தான் சொல்லுப்பா
தந்தை : "உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன்
மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன்
மகன் : "ஓ (தலைகுனிந்தவாறே) அப்பா நா
அதுல 50 ருபாய் எடுத்துக்கவா?"
தந்தைக்கு கோபம் வந்தது ...
தந்தை : "நீ இவளோ பணம் கேக்குறது ஒரு நாய்
பொம்மையை வாங்கி விளையாடத்தானே ??
ஒழுங்கா போய் படுத்து தூங்கு நான் இங்க உங்களுக்காக நாய் போல
உழைக்குறேன்..."
அந்த சின்னப்பையன் அமைதியா அவன்
படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டான் ..
அவன் தந்தை மகனின் கேள்விகளை எண்ணி மிகுந்த
கோபம் அடைந்திருந்தார்.
1 மணிநேரம் சாந்தம் அடைந்து யோசித்தார் மகன் ஏன்
இப்படி கேள்வி கேட்டானென்று ..
ஒருவேளை அவனுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய தேவை இருந்தால் என்ன செய்வதென்று முடிவுக்கு வந்து மகனிடம் சென்றார் ...
தந்தை : "தூங்கிட்டியாடா ?"
மகன் : "இல்லப்பா,. முழிச்சிட்டுதான்
இருக்கேன் ..."
தந்தை : "நா உன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துகிட்டேன் ..
நாள் பூரா வேலை செஞ்சதுல இருந்த கோவத்துல திட்டிட்டேன் ...
இந்தா நீ கேட்ட 50 ரூபாய் .."
அந்த சிறுவன் புன்னகையுடன் படுக்கையில் இருந்து எழுந்தான் ..
மகன் : "ரொம்ப தேங்க்ஸ் ப்பா... "
அப்புறம் அந்த பணத்தை எடுத்து தலையணை அடியில்
வைக்க போகும் போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள்
இருந்தன ..
அதைக்கண்ட தந்தை மறுபடியும் கோபமடைந்தார் ..
அந்த சிறுவன் மெதுவாக பணத்தை எண்ணி சரிப்பார்தான் ...
பிறகு அவன் தந்தையை பார்த்தான் ...
தந்தை : "உனக்கு எதுக்கு இவ்வளவு பணம் ....
அதுதான் ஏற்கனவே இவ்வளவு சேத்து வச்சி இருக்குயே ..."
மகன் : "ஏன்னா தேவையான பணம் என் கிட்ட இல்ல ...
இப்போ இருக்கு ....கேளுங்கப்பா இப்போ என்கிட்டே
100 ரூபாய் இருக்கு
இதை நீங்களே வச்சிக்கோங்க இப்போ நான் உங்களோட 1 மணிநேரத்தை வாங்கிக்கலாமா ?
நாளைக்கு 1 மணிநேரம் முன்னாடியே வீட்டுக்கு வாங்க
நான் உங்ககூட சேர்ந்து இரவு உணவு சாப்பிட விரும்புறேன் ...
அதைக் கேட்டு ஒரே ஷாக்... விறைத்துப் போய் நின்றார்.
அப்போது தான் உணர்ந்தார், மேலும் ஒரு கடமை மீதமிருந்தது,
தன் குடும்பத்திற்காக. அன்புக்கு அங்கு தேவை இருந்தது.
தனது குடும்பத்திற்காக ஒரு சில நிமிடங்களை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
வாழ்வதன் அர்த்தம் புரியவரும்,
உழைப்பின் பெறுமானம் தெரியவரும்,
அன்பின் தேவை உணரப்படும் போது.
......
மகன் : அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?
தந்தை : கண்டிப்பா.. என்ன கேளு..?
மகன் : 1 மணி நேரத்திற்கு எவ்ளோ சம்பாரிப்பிங்க ?
தந்தை : அது உனக்கு தேவை இல்லாத விஷயம்,
நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?
மகன் : சும்மா தெரிஞ்சிக்கத்தான் சொல்லுப்பா
தந்தை : "உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன்
மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன்
மகன் : "ஓ (தலைகுனிந்தவாறே) அப்பா நா
அதுல 50 ருபாய் எடுத்துக்கவா?"
தந்தைக்கு கோபம் வந்தது ...
தந்தை : "நீ இவளோ பணம் கேக்குறது ஒரு நாய்
பொம்மையை வாங்கி விளையாடத்தானே ??
ஒழுங்கா போய் படுத்து தூங்கு நான் இங்க உங்களுக்காக நாய் போல
உழைக்குறேன்..."
அந்த சின்னப்பையன் அமைதியா அவன்
படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டான் ..
அவன் தந்தை மகனின் கேள்விகளை எண்ணி மிகுந்த
கோபம் அடைந்திருந்தார்.
1 மணிநேரம் சாந்தம் அடைந்து யோசித்தார் மகன் ஏன்
இப்படி கேள்வி கேட்டானென்று ..
ஒருவேளை அவனுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய தேவை இருந்தால் என்ன செய்வதென்று முடிவுக்கு வந்து மகனிடம் சென்றார் ...
தந்தை : "தூங்கிட்டியாடா ?"
மகன் : "இல்லப்பா,. முழிச்சிட்டுதான்
இருக்கேன் ..."
தந்தை : "நா உன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துகிட்டேன் ..
நாள் பூரா வேலை செஞ்சதுல இருந்த கோவத்துல திட்டிட்டேன் ...
இந்தா நீ கேட்ட 50 ரூபாய் .."
அந்த சிறுவன் புன்னகையுடன் படுக்கையில் இருந்து எழுந்தான் ..
மகன் : "ரொம்ப தேங்க்ஸ் ப்பா... "
அப்புறம் அந்த பணத்தை எடுத்து தலையணை அடியில்
வைக்க போகும் போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள்
இருந்தன ..
அதைக்கண்ட தந்தை மறுபடியும் கோபமடைந்தார் ..
அந்த சிறுவன் மெதுவாக பணத்தை எண்ணி சரிப்பார்தான் ...
பிறகு அவன் தந்தையை பார்த்தான் ...
தந்தை : "உனக்கு எதுக்கு இவ்வளவு பணம் ....
அதுதான் ஏற்கனவே இவ்வளவு சேத்து வச்சி இருக்குயே ..."
மகன் : "ஏன்னா தேவையான பணம் என் கிட்ட இல்ல ...
இப்போ இருக்கு ....கேளுங்கப்பா இப்போ என்கிட்டே
100 ரூபாய் இருக்கு
இதை நீங்களே வச்சிக்கோங்க இப்போ நான் உங்களோட 1 மணிநேரத்தை வாங்கிக்கலாமா ?
நாளைக்கு 1 மணிநேரம் முன்னாடியே வீட்டுக்கு வாங்க
நான் உங்ககூட சேர்ந்து இரவு உணவு சாப்பிட விரும்புறேன் ...
அதைக் கேட்டு ஒரே ஷாக்... விறைத்துப் போய் நின்றார்.
அப்போது தான் உணர்ந்தார், மேலும் ஒரு கடமை மீதமிருந்தது,
தன் குடும்பத்திற்காக. அன்புக்கு அங்கு தேவை இருந்தது.
தனது குடும்பத்திற்காக ஒரு சில நிமிடங்களை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
வாழ்வதன் அர்த்தம் புரியவரும்,
உழைப்பின் பெறுமானம் தெரியவரும்,
அன்பின் தேவை உணரப்படும் போது.
......
![]() |
परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

No comments:
Post a Comment