Monday, 16 December 2013

தயிர் சாதம்

தயிர் சாதம்

சாத வகைகளில் புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், மாங்காய் சாதம், எள் சாதம், கத்தரிக்காய் சாதம், தக்காளி சாதம் என்று பல வகைகள் உண்டென்றாலும் தயிர் சாதத்தை கடைசியில் ஒரு விழுங்கு விழுங்கினால்தான் நிறைய பேருக்கு ஆத்ம திருப்தியே ஏற்படும். அந்தத் தயிர்சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள ஏற்ற பக்கத்துணை மாவடு ஊறுகாயா, மாங்காய்த்தொக்கா, நச்சென்ற காரத்துவையலா அல்லது வெறும் சின்ன வெங்காயமா என்ற ஒரு debate எப்போதும் சாப்பாட்டுப்பிரியர்களிடையே நடக்கும் வழக்கம் இருக்கிறது. மாங்காயை சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி அதில் பச்சை மிளகாய், இஞ்சியைத் துருவிப்போட்டு உப்பும் சிறிது கலந்து சிறிது நேரம் வைத்திருந்து தயிர் சாதத்துடன் சாப்பிட்டால் வேறு பக்கத்துணையே வேண்டாமென்பார்கள் சிலர். என் ஓட்டு எப்போதுமே மாங்காய் தொக்கிற்குத்தான்!

நல்ல வெயில் கொளுத்தும் இந்த ஆனி மாதத்தில் தயிர் சாதம் போன்றதொரு அருமையான, ஆரோக்கியமான உணவு வேறேதுமில்லை. 

தயிர் சாதம் என்பது வெறும் தயிரை மட்டும் கிளறி, கடுகு காயம் தாளித்து வைப்பதல்ல. அதை சுவை படச் செய்வதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. 

தயிர் சாதத்திற்கு தேவையான பொருள்கள்:

பச்சரிசி- 1 கப்

பால்- 1 கப்

தயிர்- 1 1/2 கப்
நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்

பெருங்காயத்துண்டு- சிறியது

கடுகு- 1 ஸ்பூன்

பச்சை மிளகாய்-2

இஞ்சி- ஒரு சிறு துண்டு

கறிவேப்பிலை- 1 கொத்து

தேவையான உப்பு

செய்முறை:

பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி ஆற வைக்கவும். நல்ல பால் கிடைக்காதவர்கள் ஒரு கப் தண்ணீரில் 5 ஸ்பூன் பால் பவுடர் சேர்த்துக் கரைத்து காய்ச்சலாம். சுவையில் எந்த மாற்றமும் இருக்காது. தமிழ்நாட்டில் அமுல்யா பால் பவுடர் நன்றாக இருக்கும். வெளி நாட்டில் இருப்பவர்கள் நிடோ, ரெயின்போ, டானா என்று எந்த பால் பவுடர் வேண்டுமானாலும் சேர்த்துக் காய்ச்சலாம்.

பச்சரிசியை நன்கு கழுவி பாலும் 2 கப் நீரும் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.

ஆறியதும் உப்பு, தயிர் கால் கப் சேர்த்து நன்கு குழையக் கலக்கவும். 

சாதம் குழைவாகவும் தளர்வாகவும் இருக்க வேண்டும்.
சாதத்தை இரவு அப்படியே வைக்கவும்.

காலையில் சாதத்தில் எல்லா தயிரையும் கலந்து கிளறவும்.
பச்சை மிளகாயையும் இஞ்சியையும் சற்று பெரிய துண்டுகளாக அரிந்து சேர்க்கவும்.

கறிவேப்பிலையைக் கிள்ளிப்போடவும்.

போதிய உப்பை சேர்த்துக் கிளறவும்.

ஒரு சிறிய வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்கவும். 

எண்ணெய் சூடானதும் கடுகைப்போடவும்.

கடுகு வெடித்ததும் காயம் போட்டுப் பொரிந்ததும் தயிரில் இந்தத் தாளிதத்தைக்கொட்டவும்.

நன்கு கலந்து சிறிது நேரம் வத்திருந்து பிறகு உபயோகிக்கவும். 

பின்குறிப்பு:

பொதுவாய் தயிர் சாதத்தில் காரட், சிறிய வெங்காயம், மாதுளை முத்துக்கள் சேர்ப்பதுண்டு. அவைகளை சேர்ப்பது தயிர் சாதத்தின் சுவையை சிறிது மாற்றி விடும்.
மாங்காய்த்துண்டுகள் மட்டுமே சுவையை மாற்றாமலிருக்கும்















    
hari krishnamurthy K. HARIHARAN)"

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator