Sunday 29 December 2013

ஐயப்பன் விரத விதிமுறைகள்.

ஐயப்பன் விரத விதிமுறைகள்.
***************************

1.முதன் முறை மாலை அணியும் பக்தர் கன்னி ஸ்வாமி என அழைப்பார்கள்.

2.ஜந்து அல்லது ஏழு முறை மாலையணிந்து மலைக்குச் சென்றவாராயும், ஜயப்பனின் விரதமுறையை நன்கு உணர்ந்தவராயும்,பொறுமையும் ஆசாரசீலராகவும் உள்ள ஒருவரை குருஸ்வாமியாய் ஏற்று தாய்,தந்தையரை வணங்கி குருவின் கையால் மாலை அணிதல் வேண்டும்.

3.அவரவர் வசதிக்கேற்ப குருவிற்கு தட்சணை கொடுத்து குருவின் அனுக்கிரகத்தை பெறல் வேண்டும். கொடுக்கும் தட்சணை ஒரு ரூபாயனாலும் குரு ஐயப்பனே தந்ததாக அன்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

4.கார்த்திகை 1ம் தேதி மாலையணிதல் வேண்டும். ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதமிருத்தல் வேண்டும். காலை உணவை விடுத்து மதியஉணவை ஜயப்பனிற்கு நிவேதனம் செய்து உண்ணவேண்டும். மாலை பால்,பழம்,பலகாரம் உண்ணலாம்.

5.விரதகாலத்தில் மிக இறுக்கமாக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கவேண்டும். மனதளவில் கூட பெண்களை நினைத்துப் பார்க்க கூடாது. திருமணமானவர்கள் குடும்ப வாழ்வில் (இந்த நாட்களில் ஈடுபடக்கூடாது). மனதால் ஜயப்பனை மட்டும் நினைத்து அவன் பாதம் சரணடைய வேண்டும்.

6.உருத்திராட்சம் அல்லது துளசிமாலை 54 அல்லது 108 மணிகள் உடையதாக வாங்கி,அதில் ஐயப்பன் பதக்கம் ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும்.துணை மாலை ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும்.

7.விரதகாலத்தில் கறுப்பு,நீலம்,பச்சை நிறமுள்ள ஆடைகளை அணியவேண்டும்.கன்னி ஸ்வாமிகள் கறுப்பு மட்டும்தான் அணியலாம்.

8.காலை,மாலை குளிர்ந்த நீரில் குளித்து விட்டு ஐயப்பனிற்கு துளசி,பால்,பழம்,கற்கண்டு போன்றவற்றில் ஒன்றை நிவேதனம் செய்து 108 சரணம் சொல்லி வழிபடவேண்டும்.

ஓம் கன்னிமூல கணபதி பகவானே
சரணம் ஐயப்பா
ஓம் காந்தமலை ஜோதியே 
சரணம் ஐயப்பா
ஓம் ஹரிஹர சுதனே 
சரணம் ஐயப்பா
ஓம் அன்னதான பிரபுவே 
சரணம் ஐயப்பா
ஓம் ஆறுமுகன் சோதரனே 
சரணம் ஐயப்பா
ஓம் ஆபத்தில் காப்பவனே 
சரணம் ஐயப்பா
ஓம் இன்தமிழ்ச்சுவையே 
சரணம் ஐயப்பா
ஓம் இச்சை தவிர்ப்பவனே 
சரணம் ஐயப்பா
ஓம் ஈசனின் திருமகனே 
சரணம் ஐயப்பா
ஓம் ஈடில்லாத் தெய்வமே 
சரணம் ஐயப்பா
ஓம் உண்மைப்பரம் பொருளே 
சரணம் ஐயப்பா
ஓம் உலகாளும் காவலனே 
சரணம் ஐயப்பா
ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே 
சரணம் ஐயப்பா
ஓம் ஊழ்வினைகள் அழிப்பவனே 
சரணம் ஐயப்பா
ஓம் எளியோர்க்கு அருள்பவனே 
சரணம் ஐயப்பா
ஓம் எங்கள் குலதெய்வமே 
சரணம் ஐயப்பா
ஓம் ஏழைப்பங்காளனே 
சரணம் ஐயப்பா
ஓம் ஏகாந்த முர்த்தியே 
சரணம் ஐயப்பா
ஓம் ஐங்கரன் தம்பியே 
சரணம் ஐயப்பா
ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே 
சரணம் ஐயப்பா
ஓம் ஒப்பில்லாத் திருமணியே 
சரணம் ஐயப்பா
ஓம் ஒளிரும் திருவிளக்கே 
சரணம் ஐயப்பா
ஓம் ஓங்காரப் பரம்பொருளே 
சரணம் ஐயப்பா
ஓம் ஓதும் மறைபொருளே 
சரணம் ஐயப்பா
ஓம் ஒளடதங்கள் அருள்பவனே 
சரணம் ஐயப்பா
ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே 
சரணம் ஐயப்பா
ஓம் கலியுகவரதனே 
சரணம் ஐயப்பா
ஓம் சபரிமலை சாஸ்தாவே 
சரணம் ஐயப்பா
ஓம் சிவன்மால் திருமகனே 
சரணம் ஐயப்பா
ஓம் சிவவைணவ ஐக்கியமே 
சரணம் ஐயப்பா
ஓம் அச்சங்கோவில் அரசே 
சரணம் ஐயப்பா
ஓம் ஆரியங்காவு ஐயாவே 
சரணம் ஐயப்பா
ஓம் குளத்துப்புழைப் பாலனே 
சரணம் ஐயப்பா
ஓம் பொன்னம்பல வாசனே 
சரணம் ஐயப்பா
ஓம் வில்லாளி வீரனே 
சரணம் ஐயப்பா
ஓம் வீரமணிகண்டனே 
சரணம் ஐயப்பா
ஓம் உத்திரத்தில் உதித்தவனே 
சரணம் ஐயப்பா
ஓம் உத்தமனே சத்தியனே 
சரணம் ஐயப்பா
ஓம் பம்பையிலே பிறந்தவனே 
சரணம் ஐயப்பா
ஓம் பந்தள மாமணியே 
சரணம் ஐயப்பா
ஓம் சகலகலை வல்லோனே 
சரணம் ஐயப்பா
ஓம் சாந்தம்நிறை மெய்ப்பொருளே சரணம்ஐயப்பா
ஓம் குருமகனின் குறைதீர்த்தவனே 
சரணம் ஐயப்பா
ஓம் குருதட்சணை அளித்தவனே 
சரணம் ஐயப்பா
ஓம் புலிப்பாலை கொணர்ந்தவனே சரணம்ஐயப்பா
ஓம் வன்புலியின் வாகனனே சரணம்ஐயப்பா
ஓம் தாயின் நோய் தீர்த்தவனே 
சரணம் ஐயப்பா
ஓம் குருவின் குருவே 
சரணம் ஐயப்பா
ஓம் வாபரின் தோழனே 
சரணம் ஐயப்பா
ஓம் துளசிமணி மார்பனே 
சரணம் ஐயப்பா
ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே 
சரணம் ஐயப்பா
ஓம் இருமுடிப்பிரியனே 
சரணம் ஐயப்பா
ஓம் எருமேலி தர்மசாஸ்தாவே சரணம்ஐயப்பா
ஓம் நித்திய பிரம்மச்சாரியே 
சரணம் ஐயப்பா
ஓம் நீலவஸ்திர தாரியே 
சரணம் ஐயப்பா
ஓம் பேட்டை துள்ளும் பேரருளே 
சரணம் ஐயப்பா
ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே 
சரணம்ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம்ஐயப்பா
ஓம் சாந்திதரும் பேரழகே 
சரணம் ஐயப்பா
ஓம் பேரூத்தோடு தரிசனமே 
சரணம் ஐயப்பா
ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம்ஐயப்பா
ஓம் காளைகட்டி நிலையமே சரணம்ஐயப்பா
ஓம் அதிர்வேட்டுப்பிரியனே சரணம்ஐயப்பா
ஓம் அழுதமலை ஏற்றமே 
சரணம் ஐயப்பா
ஓம் ஆனந்தமிகு பஜனைப்பிரியனே சரணம்ஐயப்பா
ஓம் கல்லிடும் குன்றே 
சரணம் ஐயப்பா
ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம்ஐயப்பா
ஓம் இஞ்சிப்பாறைக்கோட்டையே சரணம்ஐயப்பா
ஓம் கரியிலந்தோடே 
சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை ஏற்றமே 
சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை இறக்கமே 
சரணம் ஐயப்பா
ஓம் பெரியானை வட்டமே 
சரணம் ஐயப்பா
ஓம் சிறியானை வட்டமே 
சரணம் ஐயப்பா
ஓம் பம்பா நதி தீர்த்தமே 
சரணம் ஐயப்பா
ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே 
சரணம் ஐயப்பா
ஓம் திருவேணி சங்கமமே 
சரணம் ஐயப்பா
ஓம் ஸ்ரீராமர் பாதமே 
சரணம் ஐயப்பா
ஓம் சக்திபூஜைக் கொண்டவனே 
சரணம் ஐயப்பா
ஓம் சபரிக்கு அருள் செய்தவனே 
சரணம் ஐயப்பா
ஓம் தீபஜோதித் திருஒளியே 
சரணம் ஐயப்பா
ஓம் தீராத நோய் தீர்ப்பவனே 
சரணம் ஐயப்பா
ஓம் பம்பா விளக்கே 
சரணம் ஐயப்பா
ஓம் பழவினைகள் ஒழிப்பவனே 
சரணம் ஐயப்பா
ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம்ஐயப்பா
ஓம் திருபம்பையின் புண்ணியமே சரணம்ஐயப்பா
ஓம் நீலிமலை ஏற்றமே 
சரணம் ஐயப்பா
ஓம் நிறைவுள்ளம் தருபவனே 
சரணம் ஐயப்பா
ஓம் அப்பாச்சிமேடே 
சரணம் ஐயப்பா
ஓம் இப்பாச்சிக்குழியே 
சரணம் ஐயப்பா
ஓம் சபரி பீடமே 
சரணம் ஐயப்பா
ஓம் சரங்குத்தி ஆலே 
சரணம் ஐயப்பா
ஓம் உரல்குழி தீர்த்தமே 
சரணம் ஐயப்பா
ஓம் கருப்பண்ண சாமியே 
சரணம் ஐயப்பா
ஓம் கடுத்தசாமியே 
சரணம் ஐயப்பா
ஓம் பதினெட்டாம் படியே 
சரணம் ஐயப்பா
ஓம் பகவானின் சந்நிதியே 
சரணம் ஐயப்பா
ஓம் பரவசப் பேருணர்வே 
சரணம் ஐயப்பா
ஓம் பசுவின் நெய் அபிஷேகமே 
சரணம் ஐயப்பா
ஓம் கற்பூரப்பிரியனே 
சரணம் ஐயப்பா
ஓம் நாகராஜாப் பிரபுவே 
சரணம் ஐயப்பா
ஓம் மாளிகைப் புறத்தம்மனே 
சரணம் ஐயப்பா
ஓம் மஞ்சமாதா திருவருளே 
சரணம் ஐயப்பா
ஓம் அக்கினிக் குண்டமே 
சரணம் ஐயப்பா
ஓம் அலங்காரப்பிரியனே 
சரணம் ஐயப்பா
ஓம் பஸ்மக் குளமே 
சரணம் ஐயப்பா
ஓம் சற்குருநாதனே 
சரணம் ஐயப்பா
ஓம் மகரஜோதியே 
சரணம் ஐயப்பா
ஓம் மங்களமூர்த்தியே 
சரணம் ஐயப்பா

****ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா****

9.விரதகாலத்தில் முடிவெட்டிக் கொள்ளுதல், முகச்சவரம் செய்தல் என்பன கூடாது.காலணி,குடை,மழைக்கு போடும் கவசம் என்பவற்றை தவிர்க்கவேண்டும்.மது அருந்துதல்,பொய் பேசுதல்,மாமிசம் உண்ணுதல்,கோபம் கொள்ளுதல்,கடும் சொற்கள் பேசுதல் என்பன கூடாது.

10.விரதகாலத்தில் எவருடன் பேச நேர்ந்தாலும் பேச தொடங்கும் போதும் பேசி முடிக்கும் போதும் "ஸ்வாமி சரணம்" கூறவேண்டும். மாலையணிந்தால் விரதம் பூர்த்தியாக முன்னர் அதை எக்காரணம் கொண்டும் அதை கழட்டகூடாது.நெருங்கிய உறவினரின் இறப்பால் தீட்டு நேர்ந்தால் குரு சாமியிடம் கூறி அவரது கைகளினாலேயே மாலையை கழற்றி ஐயப்பன் படத்தில் போட்டு விடவேண்டும்.பின்னர் மறுவருடம் தான் மாலை அணியலாம்.

11.விரதகாலத்தில் பகலில் தூங்ககூடாது.இரவில் பாய்,தலையணை என்பவற்றை தவிர்த்து வஸ்திரத்தை விரித்து தூங்க வேண்டும்.

12.மாலையணிந்த பின் சந்திக்கும் ஆண்களை "ஐயப்பா" என்றும் பெண்களை "மாளிகைப்புறம்" என்றும் சிறுவர்களை "மணிகண்டன்" என்றும் சிறுமிகளை "கொச்சி" என்றும் அழைக்கவேண்டும்.

13.மாதவிலக்கான பெண்களை பார்ப்பது, அவர்கள் தயாரிக்கும் உணவை உண்பது கூடாது.மாதவிலக்கான பெண்களை அறியாமல் பார்க்க நேர்ந்தால் நீராடி 108 சரணம் கூறி வழிபடவேண்டும்.

14.மலைக்கு யாத்திரை புறப்பட சில நாட்களுக்கு முன்னர் விரிவான முறையில் பஜனை,கூட்டுவழிபாடு,பூஜை முதலியன நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி உணவளிக்க வேண்டும்.

15.இருமுடிக்கட்டு பூஜையை குருசாமி வீட்டிலோ,கோவிலிலோ நடத்தலாம்.கணபதியை பிரார்த்தித்து பெற்றோரை வணங்கி,ஐயப்பன் நாமத்தை சொல்லிக்கொண்டே கட்டு நிறைக்க வேண்டும்.

ஸ்வாமியின் முன் அமர்ந்து குருஸ்வாமியின் உதவியுடன் ஒவ்வொரு முத்திரையிலும்....

ஸ்வாமியே சரணம் ஐயப்பா
நெய்யபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
பால் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
ஸ்வாமியே ஐயப்பா ஐயப்பா ஸ்வாமியே
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்
ஐயப்ப சரணம் ஸ்வாமி சரணம்
தேவன் சரணம் தேவி சரணம்
இருமுடிக்கட்டு சபரிமலைக்கு
சபரிமலைக்கு இருமுடிக்கட்டு
யாருடகட்டு ஸ்வாமியுடகட்டு
யாரைக்காண ஸ்வாமியைக் காண
நெய்யபிஷேகம் ஸ்வாமிக்கே
பாலபிஷேகம் ஸ்வாமிக்கே
கற்பூரதீபம் ஸ்வாமிக்கே
காணிப்பொன்னும் ஸ்வாமிக்கே
ஸ்வாமியே ஐயப்பா - என்று சரணம் சொல்லி முத்திரையில் நெய்யினை நிறைக்க வேண்டும்.

16.யாத்திரை புறப்படும் போது ஐயப்பன்மார்கள் போய் வருகின்றேன் என்றோ,தன்னுடன் வரும் ஐயப்பன்மார்களை வசதியாக அழைத்துச்செல்வதாகவோ,தன்னுடன் தைரியமாக வரலாம் என்றோ கூறக்கூடாது.

17.யாத்திரை புறப்படும் போது இருமுடியை தலையில் தாங்கி,வீட்டு வாசலில் ஐயப்பனை பிரார்த்தித்துக்கொண்டு தேங்காயை உடைத்து விட்டு சரணம் சொல்லி, போய்வருகிறேன் என எதுவும் கூறாது திரும்பிப் பார்க்காது செல்ல வேண்டும்.

18.யாத்திரை புறப்பட்டதில் இருந்து கன்னி சாமிமார்கள் இருமுடியை தாமக ஏற்றிக்கொள்ளவோ,இறக்கவோ கூடாது.குருசாமியின் கையாலோ அல்லது பலமலை சாமியின் கையாலோ கொண்டு தான் அதை செய்யவேண்டும்.

19.பம்பையில் நீராடி,மறைந்த முன்னோர்க்கு பித்ருதர்ப்பணம் செய்யலாம்.யாத்திரை முடிந்துதும் பிரசாதங்களை ஏந்தி வந்து,வீட்டு வாசலில் தேங்காய் உடைத்துவிட்டு வீட்டிற்குள் சென்று பூஜை அறையில் பூஜை செய்து கற்பூர ஆராத்தி காட்டி,இருமுடி அரிசியை பொங்கி எல்லோருக்கும் கொடுக்கவேண்டும்.

20. 12 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற பெண்களும் மட்டுமே சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

21.விரதகாலத்தில் மாலை போட்ட சாமிமார்களின் வீடுகளை தவிர வேறெந்த வீட்டிலும் ஐயப்பன்மார்கள் உணவருந்தக்கூடாது.

22.மாலைபோட்ட சாமிமார்கள் அதிலும் கன்னிசாமிமார்கள் மிகவும் கண்டிப்பாக பெருவழிப்பாதையில் செல்லவேண்டும்.

23.யாத்திரை நிறைவு பெற்றதும் குருநாதர் மூலம் மாலையை கழற்றி ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு அணிவித்து விட்டு ஐயப்பனை பாடித்துதிப்போமாக.

"ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா"

......நன்றி.......















                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator