Wednesday 13 August 2014

கெட்டிமேளம் எதற்காக?

கெட்டிமேளம் எதற்காக?

தாலிகட்டும்போது கெட்டிமேளம், கெட்டிமேளம் என்று சொல்லுவார்கள். மேளம் மிகவும் வேகமாகப் பெரிய சத்த்துடன் அடிக்கப்படும். தாலிகட்டும்போது யாரும் தகாத வார்த்தைகளைப் பேசிவிட்டாலோ, ஏதாவது சொல்லிவிட்டாலோ, அல்லது தும்மினாலோ அல்லது இருமினாலோ அபசகுனமாக ஆகிவிடலாம் என்பதால் அத்தகைய சத்தங்கள் கேட்காதவகையிலேயே மேளம் கெட்டிமேளமாக உரத்து அடிக்கப்படுகின்றது. கெட்டிமேளச் சத்தத்தில் கெட்டவார்த்தைகள் கேட்காமற்போய்விடும்.

மஞ்சள் நீராடல்

மணமக்கள் திருமணச்சடங்கிற்கு முன்னர் உடல்முழுவதும் எண்ணெய் தேய்த்து மஞ்சள் கலந்த நீரில் குளிப்பாட்டப்படுகின்றார்கள். 
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளிலிருந்து திருமண நாள் நெருங்க நெருங்க மாப்பிள்ளையும் பெண்ணும் அவரவர் வீடுகளில் வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள். இதனால் அவர்களது உடல் அதிகமாக வெப்பமடைந்திருக்க வாய்ப்புண்டு. அத்துடன் புதிய உறவை எண்ணியெண்ணி அவர்களது மனங்களில் ஏற்படும் உள்ளக் கிளர்ச்சியினாலும் உடல் சூடாகியிருக்கும். இந்த நிலையில் உடல் வெப்பமாக இருக்கும்போது உடலுறவுகொள்வது கூடாது. கூடாது என்பதைவிட பூரண இன்பத்தை அவர்கள் இருவரும் அனுபவிக்க முடியாமல் போய்விடும். எவ்வளவோ மனக்கோட்டைகளைக் கட்டிக்கொண்டிருக்கும் மணமக்களுக்கு அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே, முதலிரவிலேயே ஏமாற்றமோ, திருப்தியின்மையோ ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவர்களது உடற்சூட்டைத் தணிக்கும்பொருட்டு நீரில் மஞசள் கலந்து குளிப்பாட்டப்படுகிறார்கள்.

இவ்வாறு குளித்தல் மிகவும் முக்கியமானது என்பதனாலேயே அந்தக்குளியலை உறுதிப்படுத்துவதற்காகவோ என்னவோ மணமகனைக் குளிப்பாட்ட மணமகளின் சகோதரன் அல்லது அவ்வுறவுமுறையான ஒருவரும், மணமகளைக் குளிப்பாட்ட மணமகனின் சகோதரி அல்லது அவ்வுறவு முறையான ஒருத்தியை அவ்வந்த வீடுகளுக்கு அனுப்பிவைப்பார்கள். இலங்கையில் இப்போதும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது.
ஆனால் மஞ்சள்கலப்பதன் கரணம்பற்றியெல்லாம்பற்றி அறியாமல், இப்போதெல்லாம் மணமக்கள் உடுத்திருக்கும் ஆடைகளில் மஞ்சள் நீரைத் தெளித்துவிட்டுப் பிறகு வேறு ஆடைமாற்றிக்கொண்டு மணமேடைக்கு வந்துவிடுகின்றார்கள். அறிவியல் ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட மஞ்சளில் குளித்தலில் இருந்த அறிவியல் மறைந்துவிட்டது. மஞ்சள் மட்டும் ஒரு சமயச் சடங்கு என்கின்ற வழக்கமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வாழைப்பழத்தில் பழத்தை வீசிவிட்டுத் தோலைச் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டால் எப்படியோ, அப்படி ஆகிவிட்டது.



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator