Saturday 23 August 2014

கற்பகாம்பாள் காசுமாலை...!!!


கற்பகாம்பாள் காசுமாலை...!!!


                                கற்பகாம்பாள் காசுமாலை
சென்னை மயிலாப்பூரில் உள்ளது மிகப்பிரசித்தி பெற்ற கற்பகாம்பாள்உடனுறை கபாலீஸ்வரர் ஆலயம்.இந்த ஆலயத்தில் 1950ஆம் வருடத்திலிருந்து ஆனந்தவல்லிதன்னையொத்தபெண்களுடன் ஒரு குழுவாக அமர்ந்துஅனுதினமும் லலிதாசஹஸ்ரநாம பாராயணம் செய்வது வழக்கம்இவர்களுக்குமுத்துலட்சுமி அம்மாள் என்பவர் தலைவியாக இருந்தார்இந்தக்குழு "கற்பகாம்பாள் சஹஸ்ரநாம கோஷ்டிஎன்றும்தலைவி"குரு பாட்டிஎன்றும் அழைக்கப்பட்டனர் ஆனந்தவல்லிசெயலாளராக இருந்தார்அனுதின பாராயணத்தைத் தவிரகோயிலின் பல்வேறு உற்சவங்கள் மற்றும் விசேஷ நாட்களில்அர்ச்சனைஅபிஷேகம் ஆராதனை ஆகியவையும் செய்துவந்தனர்.
1970-ல் ஒரு நாள் குரு பாட்டிக்கு கனவில் காட்சி அளித்தகற்பகாம்பாள், "நீயும் உனது கோஷ்டியும் தினமும் எனக்குசஹஸ்ரநாம பாராயணம் பண்ணிண்டுருக்கேள்விசாலாட்சிக்கும்காமாட்சிக்கும் இருக்காப்போல எனக்கும் தங்கத்துல சஹஸ்ரநாமகாசுமாலை வேணும்செய்து போடறியா?" என்று கேட்கபாட்டியும்தான் கனவில் கண்டதை குழுவில் எல்லோருக்கும் சொல்லிமகிழ்ந்தார்அனைவரும் நல்ல மனம் படைத்த பக்தர்களிடமிருந்துநன்கொடை பெற்று காசுமாலை செய்து கற்பகாம்பாளுக்குஅணிவிக்க முடிவு செய்தனர்.
வருடங்கள் பல சென்றும் குழுவின் நடுத்தர வர்க்கத்து மாதர்களால்காசுமாலைக்குத் தேவையான பெரும் பொருளை சேர்க்கமுடியவில்லைசிலரது ஆலோசனையின் காரணமாக 1978-ல் குருபாட்டியும்  ஆனந்தவல்லி மற்றும் உறுப்பினர்களோடுபரமாச்சாரியாளிடம் முறையிட காஞ்சி மடத்திற்கு சென்றனர்.காத்துக் கொண்டிருந்த அவர்களிடம்மடத்துப் பணியாளர் ஒருவர்வந்து, "பெரியவா உங்களை உடனே வரச்சொன்னாஉள்ளேபோங்கோஎன்று சொல்லவும் விரைந்து உள்ளே சென்றனர்மஹாபெரியவாளின் தரிசனத்தில் மெய்சிலிர்த்துப் போயிருந்தவர்களிடம், :என்னகாசுமாலைக்கு பணமும் பொருளும் சேரலியா?" என்றுமகான் கேட்டார்தாம் முறையிட வந்ததை முன்னதாகவே மஹாபெரியவா கேட்டதால் சொல்வதறியாது நின்றவர்களிடம்பெரியவா"அம்பாள் தானே கேட்டாஅம்பாளே அதுக்கு அருள் கொடுப்பா;கவலை படவேண்டாம் " என்று கூறினார்கள்மேலும்"விசாலாட்சிக்கும் காமாட்சிக்கும் இருக்கறது பணக்கார காசுமாலை;ஆனா கற்பகாம்பாளுக்கு கிடைக்கப் போறது பக்தியால காசுமாலை"என்று அங்கிருந்தவர்களிடம் கூறினார்கள்பிறகுஆனந்தவல்லியிடமும்  குரு பாட்டியிடமும் "கற்பகம் சுவாசினிசங்கம் அப்பிடின்னு பேர் வச்சு நிறைய சுவாசினி மற்றும் பாலாதிருபுரசுந்தரி பூஜைகள் செஞ்சிண்டு வாங்கோஎன்று சொல்லிஆசீர்வாதம் செய்து பிரசாதமளித்தார்கள்.
மஹா பெரியவா சொன்னதை சிரமேற்கொண்டுநடைமுறைப்படுத்தியதால்பொன்னும் பொருளும் வந்துகுவிந்தன1982-ல் காசு மாலை செய்யும் வேலை துவங்கியது.சென்னை உம்மிடி பங்காரு கண்ணன் அவர்களிடம் வேலைஒப்படைக்கப்பட்டதுஒவ்வொரு காசின் ஒரு புறத்தில் ஒருநாமாவும்மறு புறத்தில் கோயிலின் முத்திரையான சிவலிங்கத்தைமயில் பூஜை செய்வது-பின்னணியில் அம்பாள் உருவமும்பதிக்கப்பட்டதுஅவ்வப்போது வேலையின் முன்னேற்றம் குறித்துகாஞ்சி மடம் மூலமாக மஹா பெரியவாளுக்கு தெரிவிக்கப்பட்டது.ஸ்வாமிகளும் மடத்தின் வேத பாடசாலை பண்டிதர்கள் சிலரைஅனுப்பி வைத்து நாமாக்களின் சரியான பதிவு மற்றும் வரிசைமாறாதிருத்தல் ஆகியவற்றை ஆய்வு செய்ய வைத்தார்இந்தமகத்தான காரியத்திற்கும் பல முட்டுக்கட்டைகள் – ரிலீஜியஸ்எண்டோமென்ட் போர்டுகோயில் போர்டின் ஒரு சில உறுப்பினர்கள்;சில வேலை இல்லாத சமூக அமைப்புக்கள் மற்றும் சில விஷமிகள்என பல வடிவுகளில் வந்தனஆனாலும்மஹா பெரியவாளின்அருளாசியினாலும்நிர்வாக அதிகாரி சுகவனேஸ்வரர்தக்கார்குப்புசுவாமிதலைமை அர்ச்சகர் விஸ்வநாத சிவாச்சாரியார்;வழக்கறிஞர் கிருஷ்ணஸ்வாமி ஆகியோர் உதவி செய்ததாலும்வேலை நன்கு முடிந்தது., "அருள்மிகு கற்பகாம்பாளுக்கு லலிதாசஹஸ்ரநாம தங்க காசுமாலை சமர்ப்பண விழா"  26-2-1986 அன்று கொண்டாடுவது என்றும் விவேக் & கோ விழாஅமைப்பாளராகவும் முடிவு செய்யப்பட்டது.
துரதிர்ஷ்டமோ அல்லது வினைப்பயனோ20-1-1986 அன்று  ஆனந்த வல்லியின் கணவர் உடல்நலக் குறைவு காரணமாகமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கை கால்கள் செயலிழந்துபேச்சும் இல்லாமல் போனதுமருத்துவர்களும் நம்பிக்கைஇழந்துஅதிக பட்சம் 48 மணி கெடு கொடுத்துவிட்டனர்.ஆனந்தவல்லி இதைத் தாங்க முடியாது மனமுடைந்து வீட்டின்பூஜை அறையிலேயே அடைந்து கிடந்தார்குரு பாட்டி சங்கத்தின்உறுப்பினர்களோடும்உம்மிடி கண்ணன் மற்றும் விவேக்ஆகியோருடன் முடிவுற்ற காசு மாலையை எடுத்துக்கொண்டுபெரியவாளை தரிசிக்க மடத்திற்குச் சென்றார்இவர்கள்எல்லோரையும் பார்த்த ஸ்வாமிகள், "ஏன்உங்க செகரட்ரி வரலியா?"என்று கேட்க,இவர்களும்  அனந்தவல்லி கணவரின் நிலைமை பற்றிகண்ணீருடன் விவரித்தனர்காசு மாலையை பார்வையிட்ட மஹாபெரியவா, "மாலை ரொம்ப நன்னா வந்திருக்குஇந்த மாலையைகற்பகாம்பாளுக்கு போட உங்க செகரட்ரி இருப்பாகவலைப்படாமபோயிட்டு வாங்கோஎன்று சொல்லி ஆசீர்வதித்து பிரசாதங்கள்கொடுத்தார்அனைவரும் நேராகஆனந்தவல்லி வீட்டிற்கு வந்து ஸ்வாமிகளின் ஆசிகளை சொல்லி பிரசாதங்களை கொடுத்தனர்.என்ன ஒரு அதிசயம்அதே நேரத்தில் மருத்துவ மனையிலிருந்து, ஆனந்தவல்லியின் கணவர் நினைவு திரும்பி பேசுவதாகவும்,மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும் செய்தி வருகிறது.மருத்துவர்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் ஏதோ அற்புதம் நடந்துள்ளதுஎன்று சொல்லி மறு நாளே  டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள்அவரும்இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த மருத்துவ மனையிலிருந்துவீட்டிற்கு நடந்தே வந்து விட்டார்.
26-2-1986 அன்று காசுமாலை சமர்ப்பண விழா வெகு விமரிசையாகநடந்ததுஅனந்தவல்லி கணவரும்  சிறிது நேரம் கோயிலுக்கு வந்துவிழாவினில் கலந்து கொண்டார்செகரட்ரி என்கின்ற வகையில்அனந்தவல்லி விழாவை முன்னின்று நடத்திஅன்று காலையில்கற்பகம்பாளுக்கு காசுமாலையினை சாற்றி மாலையில் நடை பெற்றகூட்டத்தில் தனது அறிக்கையையும் சமர்ப்பித்தார்மேலும்காசுமாலையைப் பாதுகாப்பாக வைக்க ஒரு கோத்ரேஜ்அலமாரியினையும்சுவாசினி சங்கத்தின் சார்பில் இந்தவிலையுயர்ந்த காசுமாலைக்கான ஆவணங்களையும் அளித்தார்.தற்போதும்அம்பாளுக்கு அனைத்து வெள்ளிக் கிழமைகள்,பெளர்ணமி நாட்கள் மற்றும் வருடா வருடம் பிப்ரவரி 26நாளிலும் இந்தக் காசுமாலை சாற்றப்படுகிறது..

__._,_.___



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator