Saturday 23 August 2014

வஞ்சகர்களை வஞ்சகமாகத்தான் கையாள‌ வேண்டும் என்று நமக்கு சொல்லிக்கொடுத்தவர் சிவாஜி

இந்தியாவே அரேபிய, துருக்கிய‌ கொள்ளையர்களின் அடிமை நாடாக மாற இருக்கையில்தான் அவன் பிறந்தான். அதர்மம் பெருகும் போதெல்லாம் தர்மம் வீரியத்தோடு எழும் அல்லவா ? அப்படித்தான் அவன் எழுந்தான்.

சிவாஜி என்ற அந்த சிங்கக்குட்டி மெல்ல கர்ஜிக்க தொடங்கியது. சிறுநாய்கள் குலை நடுங்க தொடங்கும் காலமும் வந்தது.

சிவாஜி தன்னுடைய 16ம் வயதில் பீஜாப்பூரின் ஒரு தளபதியான 'இணயத் கான்' என்பவனுக்கு பரிசுகளும், பணமும் கொடுத்து அவனுடைய கைவசம் இருந்த 'டொர்னா' கோட்டையை கையகப்படுத்திக் கொண்டார். அது போலவே 'சக்கன்' மற்றும் 'கொண்டனா' என்ற கோட்டைகளையும் அவர் கைபற்றிக் கொண்டார்.

சிவாஜியின் வளர்ச்சியை பிடிக்காத 'முஹம்மத் ஆடில் ஷா' என்பவன், சிவாஜியை கட்டுப்படுத்த அவரின் தந்தையை கைது செய்து வைத்தான். ஆடில் ஷா, ஃபாரத்கான் என்பவன் தலைமையில் சிவாஜியின் சகோதரர் சம்பாஜியை எதிர்த்து ஒரு படையை அனுப்பினான். சம்பாஜி அதை எதிர்த்து தோற்கடித்தார். இதன் நடுவே சிவாஜி, அப்போதைய டெக்கான் கவர்ணராக இருந்த ஷாஜகானுடைய மகன் முரத் பக்ஷ்க்கு தன்னுடைய விசுவாசத்தை தெரிவித்து ஒரு கடிதம் எழுதி, தன் தந்தையை விடுவிக்குமாறு கேட்டார். முகலாயர்கள் சிவாஜியை தங்களின் விசுவாசி என்று கருதி, அவர் தந்தையை விடுவிக்குமாறு ஆடில் ஹாவை நிர்பந்தித்தார்கள். அவர் தந்தை விடுதலை அடைந்தார்.

1659ல் ஆடில் ஷா, அப்சல் கான் என்ற அனுபவம் மிகுந்த ஒரு தளபதியை சிவாஜியை அழிப்பதற்காகவும் அவர் ஒரு பிராந்திய சக்தியாக வளர்வதை தடுப்பதற்காகவும் அனுப்பினான். சிவாஜியோ பெரும்பாலும் மலைகளிலும், காடுகளிலும் தன் படைகளை வைத்திருந்தார். அஃப்சல் கான் துல்ஜாபூரி மற்றும் பந்தர்பூர் ஆகிய இடங்களில் இருந்த ஹிந்து கோவில்களை மிக மோசமான முறையில் சேதப்படுத்தினான். இப்படி செய்வதால் சிவாஜி சமநிலத்துக்கு வருவார் என்றும், அங்கு வைத்து அவரை தன்னுடைய மிகப்பெரிய பீஜாப்பூர் சேனையை வைத்து அழித்துவிடலாம் என்றும் திட்டம் தீட்டினான். சிவாஜி அஃப்சல் கானை தனியாக சந்தித்து பேசி சிக்கல்களை தீர்த்துக்கொள்ள விரும்புவதாக ஒரு கடிதம் எழுதினார். இருவரும் 'ப்ரதாப்காட் கோட்டையின்' கீழே உள்ள குடிசையில் சந்தித்துக் கொண்டனர். அந்த ஒப்பந்தம் எப்படி என்றால் இருவரும் ஒரே ஒரு வாளோடும் ஒரு உதவியாளனோடும் வருவதாய் இருந்தது. சிவாஜி அஃப்சல் கான் தன்னை தாக்கக்கூடும் என்று யூகித்து, தன் உடைக்குள் கவச உடை அணிந்து சென்றார். ஒரு உலோகத்தால் செய்யப்பட்ட புலிப்பல்லும் தன் இடது கையில் வைத்திருந்தார். ஒரு சிறு கத்தியை தனது வலது கையில் வைத்திருந்தார். அவர் எதிர்பார்த்த படியே அஃப்சல் கான் தன் சிறு கத்தியால் சிவாஜியை குத்தவும், அது அவரின் கவச உடையில் தடுக்கப்பட்டது, சுதாரித்த சிவாஜி அவனை தன் கத்தியால் குத்தி கொன்றார். சிவாஜி மறைந்திருந்த தன் வீரர்களை பீஜாப்பூர் சேனையை தாக்கும்படி சைகை செய்தார்.

சிவாஜியின் பயிற்சிபெற்ற வீரர்கள், பீஜாப்பூர் சுல்தானின் படையை சூரையாடின. அவர்கள் என்ன நடக்கிறது என்று சுதாரிக்கும் முன்னேயே, அதிர வைக்கும் தாக்குதல் நடந்தது. சுல்தானின் 3000 வீரர்கள் இறந்தனர், அஃப்சல் கானின் இரு மகன்கள் சிறையெடுக்கப் பட்டனர். இந்த எதிர்பார்க்காத வெற்றி சிவாஜியை ஒரு மராத்திய நாயகன் ஆக்கியது. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும், குதிரைகளும், கவசங்கள் மற்றும் பல பொருள்கள் மராத்திய சேனையை பலப்படுத்தின. முகலாய அரசன் ஔரங்கசீப் இப்போதுதான் சிவாஜி ஒரு பெரும் அபாயம் என்பதை உணர்ந்தான்.

இந்த இழப்பை ஈடுசெய்ய, பத்தாயிரம் பேர் கொண்ட ஒரு சேனையை 'ருஷ்டம்ஜமான்' என்பவன் தலைமையில் அனுப்பினார்கள். சிவாஜியிடமோ 5000 வீரர்கள்தான் இருந்தனர். சிவாஜி அவர்களை கோலாபூர் எனும் இடத்தில் தாக்கினார். ஒரு திடீர் யுக்தியாக சிவாஜியின் சேனைகள் மூன்றாக பிரிந்தது, நடுவில் மிகப்பலத்தோடு சிவாஜியின் தலைமையில் ஒரு படை தாக்கியது. அவரின் குதிரைப்படைகள் எதிரியின் இரண்டு ஓரங்களிலும் சுற்றி வந்து தாக்கியது. பல மணி நேரம் நடந்த சண்டையில் பீஜாப்பூர் சேனைகள் தோற்கடிக்கப்பட்டன. ருஷ்டம்ஜமான் தப்பித்து ஓடினான். ஆடில் ஷாவின் சேனைகள் 2000 குதிரைகள் மற்றும் 12 யானைகளை மராத்தியர் வசம் இழந்தன. இந்த வெற்றி "மலை எலி" என்று ஔரங்கசீப்பால் கேலியாக அழைக்கப்பட்ட சிவாஜியை மேலும் உயர்த்தியது.

ஆடில்ஷா இதன் பின்னர் சித்தி ஜௌஹர் என்ற தளபதியை அனுப்பினான். முகலாயர்கள் வடக்கிலும், ஆடில்ஷா வின் படை தெற்கிலுமாய் ஒருமித்து சிவாஜியின் படையை தாக்கியது. சிவாஜியின் கோட்டைகளை அவர்கள் கைப்பற்றினாலும், சிவாஜி தப்பித்து வேறு இடம் சென்றார். சித்தி ஜௌஹர், ஆங்கிலேயர்களிடம் இருந்து க்ரேனேடுகளை வாங்கி சில வெள்ளையர்களை வைத்து சிவாஜியின் கோட்டையை தகர்க்க உத்தரவிட்டான். இதனால் கோபமடைந்த சிவாஜி வெள்ளையர்களின் ராஜாபூர் வெடிமருந்து தொழிற்சாலையை கொள்ளை அடித்து, பலரை சிறைப் பிடித்தார் சிவாஜி.

பவன் கிந்த் எனும் போரில், எதிரிகள் சிவாஜியை நெருங்கிவிட்ட சூழ்நிலையில், சிவாஜி தோல்வியை தடுக்கவும், அங்கிருந்து தப்பிக்கவும் நினைத்தார். "பந்தல் தேஷ்முக்" என்ற அற்புதமான மராத்திய தளபதி வெறும் 300 வீரர்களோடு எதிர்வரும் படையை தடுத்தி நிறுத்தி, சிவாஜியை தப்பிக்க வைத்து சாகும் வரை சண்டையிட்டார். கிடைத்த நேரத்தில் சிவாஜி தன்னுடைய படையுடன் விஷல்காத் கோட்டையை பத்திரமாய் அடைந்தார். இந்த சண்டையில் சாதாரண கட்டைகள் மற்றும் கத்திகளுடன் எதிரிகளை பவன் கிந்த் ஏழு மணி நேரம் தடுத்தி நிறுத்தி, சிவாஜி தப்பித்து செல்லும் வரை சண்டையிட்டார். பிஜு ப்ரபு தேஷ்பாண்டே எனும் வீரர், பலத்த காயத்துடனும் சிவாஜி பத்திரமாக கோட்டையை அடைந்துவிட்டார், எனும் பீரங்கி சமிக்ஞை கிடைக்கும்வரை சண்டையிட்டார். இந்த போரில் 300 மராத்தியர்களும் , 3000 ஆடில்ஷாவின் வீரர்களும் கொல்லப்பட்டார்கள். இதன் பின்னர், சிவாஜிக்கும் ஆடில்ஷாவுக்கும் உடன்படிக்கை ஏற்பட்டது. பவன் கிந்த், தேஷ்பாண்டே மற்றும் மற்ற வீரர்களின் தியாகத்துக்கு நன்றியாக "பவன்கிந்த் சாலை" என்று அந்த மலை வழிக்கு பெயர் வைத்தார் சிவாஜி. சிவாஜியின் வெற்றிக்கு பின் அவருக்கு விசுவாசமான பலர் இருந்தது முக்கிய காரணமாயிருந்தது. அவரும் எல்லொருடைய அன்புக்கு பாத்திரமாய் இருந்தார். தன் மக்களுக்காக எதை செய்யவும் தயாராகவும் இருந்தார்.

இதன் பிறகு சிவாஜி முகலாயர்கள் மீது வெளிப்படையாய தன் ஆற்றலை வெளிப்படுத்த துவங்கினார். அஹ்மத்நகர் மீது அவர் தாக்குதல் நடத்தி பல குதிரைகளையும் கைப்பற்றினார். பீஜாப்பூர் சுல்தானின் வேண்டுகோளுக்கு இணங்கி 
ஔரங்கசீப் அவனின் மாமா "ஷைஷ்டா கான் தலைமையில், 3,00,000 வீரர்களையும், குதிரைப்படையையும் அனுப்பி வைத்தான். அவர்கள் மிக பெரிய பலத்துடன் சிவாஜியின் கோட்டையையும், அவரின் அரண்மனையும் பிடித்தார்கள். 
சிவாஜியும் சில வீரர்களும் எப்படியோ தப்பித்து, ஒரு கல்யான கும்பல் போல் வேடமணிந்து, ஷைஷ்டா கானின் பாதுகாவலர்களை கொன்று அவனின் வசிப்பிடத்தை ஊடுறுவி, அவ‌னை தாக்கினார்கள். அவன் அத்தாக்குதலில் தன் மகன்களையும், தன் கை விரலையும் இழந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஔரங்கசிப்பிடம் ஓடினான். ஔரங்கசிப் கோபத்தில் அவனை பெங்காலுக்கு மாற்றினான்.

அடுத்து முகல்களின் 'கர்தாலப் கான்' எனும் தளபதி 30000 முகல் படையுடன் போருக்கு வந்தான். அவர்களையும் உம்பர்கிந்த் என்ற இடத்தில் வைத்து சிவாஜியின் சேனைகள் கடுமையான தாக்கின. தங்கள் தளவாடங்கள் அனைத்தையும் சிவாஜியிடம் தந்துவிட்டு உயிர்பிச்சை கேட்டு ஒடினார்கள் அவர்கள். மேலும் உக்கிரம் அடைந்த சிவாஜி, தன் கஜானாவை நிறப்புவதற்காகவும், முகலாயர்களின் வர்த்தக நகரமான சூரத்தை தாக்கினார்.

ஔரங்கசீப் சிவாஜியை தாக்க‌ முதலாம் ஜெய்சிங் என்பவனை அனுப்பினான். அவனும் பெரும் படையுடன் சிவாஜியின் படைகளை தாக்கி அவருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தினான். இதனால் சிவாஜி ஔரங்கசிப்புடன் சமாதான உடன்படிக்கை செய்துக்கொண்டார். சிவாஜியையும் அவர் 8 வயது மகன் சம்பாஜியையும் ஔரங்கசீப் தன் அரண்மனைக்கு வரவழைத்தான். அங்கு சிவாஜியை அவன் மற்ற சாதாரண தளபதிகளுடன் சமமாக வைத்தது அவரின் சுயமரியாதையை பாதித்தது. மற்றும் ஔரங்கசிப் சிவாஜியை கொல்லக்கூடும் அல்லது அவரை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி விடக் கூடும் என்ற செய்தி, ஒற்றர்கள் மூலமாக சிவாஜிக்கு வந்தது. சிவாஜியும், சம்பாஜியும் பழக்கூடைகளுக்கு நடுவே ஒளிந்து அங்கிருந்து தப்பித்தார்.

1670ல் சிவாஜி முகலாயர்கள் மேல் மிகப்பெறும் தாக்குதலை செய்தார். அதன் மூலம் பல இடங்களையும், இழந்த கோட்டைகளையும் கைப்பற்றினார். சூரத்தை மீண்டும் அவர் சூரையாடினார். அவர் அவ்வாறு செய்துவிட்டு திரும்புகையில் தாவுத் கான் என்ற முகலாய தளபதி அவர் படையை வழிமறித்தான். அவர்களையும் சிவாஜியின் படை இன்றைய நாசிக் என்ற இடத்தில் அடித்து விரட்டியது. அதே போல் ராணுவ தளவாடங்களை தர மறுத்த பிரிட்டீஷ் காரர்களையும் சிவாஜி பம்பாயில் தாக்கினார். அதன் பின் ஆடில்ஷாவின் படைகளுடன் பல போர்கள் நடந்தன. ஆனால் சிவாஜியின் பலத்தைதான் அவை கூட்டின. சிவாஜியின் பலம் மேலும் மேலும் கூடி அவர் மிகப்பெரும் மராத்திய சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி ஆனார். அவர் படைகள் தெற்கே ஆடில்ஷாவின் இன்றைய கர்நாடகத்தின் பல இடங்களை கைப்பற்றி, தமிழ்நாட்டின் வேலூர் வரை ஆடில்ஷாவின் இடங்களை பிடித்தார். ஔரங்கசீப்பால் சாகும் வரை சிவாஜியை ஒன்றும் செய்ய முடியவில்லை, அவனுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்தார்.

சிவாஜி மதிநுட்பத்தின் சின்னமாக இருந்தார். கொரில்லா போர் முறைகளை உலகத்தில் முதல் முதலில் பயன்படுத்தியவர் சிவாஜி என்றால் மிகையாகாது. வஞ்சகர்களை வஞ்சகமாகத்தான் கையாள‌ வேண்டும் என்று நமக்கு சொல்லிக்கொடுத்தவர் சிவாஜி. இன்று நம்மை போன்றவர்கள் அர‌பிய மற்றும் துருக்கிய அடிமைகள் ஆகாமல், நம் தர்மத்தின் வழி செல்ல முடிகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் சிவாஜி.



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator