Wednesday 30 April 2014

உங்க ஊர் -----------------------------???????

திருநெல்வேலி ------அல்வா 

ஸ்ரீவில்லிபுத்தூர்----பால்கோவா 

கோயில்பட்டி--------கடலை மிட்டாய் 

மாயவரம் -------------கருவாடு

மான மதுரை------ மல்லிகைப

பழனி -------------பஞ்சாமிர்தம் 

திருப்பதி -------------லட்டு

பத்தமடை-----------பாய்

நாகப்பட்டினம்-------கோலா மீன் 

மதுரை--------- மல்லிகை மரிக்கொழுந்து ,

பண்ருட்டி ----பலாப்பழம் 

சாத்தூர்-------காராச்சேவு. மிளகாய் 

திண்டுக்கல்----பூட்டு

மார்த்தாண்டம் --- தேன்

மணப்பாறை----முறுக்கு

பவானி-----ஜமக்காளம் 

உடன்குடி----கருப்பட்டி

ஊத்துக்குளி-----வெண்ணை

சேலம்-----மாம்பழம்

கொடைக்கானல்----பேரிக்காய் 

திருப்பூர்-----பனியன்

ராஜபாளையம்---நாய்

கும்பகோணம்---வெற்றிலை, டிகிரி காபி 

உறையூர்---சுருட்டு

தர்மபுரி---புளி

வேதாரண்யம்---உப்பு

அரியலூர்---கொத்தமல்லி

சிவகாசி----வெடி,தீப்பெட்டி

தஞ்சாவூர்----கதம்பம் 

ஈரோடு---மஞ்சள் ,துணி 

ஊட்டி---வருக்கி

பொள்ளாச்சி---தேங்காய்

காஞ்சிபுரம், திருபுவனம்------பட்டு

குடியாத்தம்---நுங்கு 

ஆலங்குடி---நிலக்கடலை

கரூர் ---கொசுவலை

திருப்பாச்சி---அரிவாள்

நீலகிரி---தைலம் 

திருச்சி---வாழைப்பழம் 

உங்க ஊர் -----------------------------???????

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

கடி ஜோக்ஸ்



தண்ணீரைப் பனிக்கட்டியாக்கினால் என்ன மாற்றம் உண்டாகும்?

விலை அதிகமாகும், வேற என்ன?

....................................................................

தந்தை: டேய்! எப்பவுமே நம்மளைவிட வயசுல பெரியவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கணும் புரியுதா?

மகன்: ஏம்ப்பா! அம்மா உங்களைவிட வயசுல பெரியவங்களா?

.............................................................

ஆசிரியர்: திருக்குறளை எழுதியவர் யார்?

மாணவன்: எங்கப்பா சார்.

ஆசிரியர்: என்ன உளர்றே, யார் அவர்?

மாணவன்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துல பெயிண்டரா இருக்கார் சார்.

........................................................................

ஏங்க என் பிரசவ நேரத்தில உதவியா இருக்க எங்கம்மாவை வரவழைச்சிடட்டுமா?

வயசான காலத்தில அவங்களை ஏன் சிரமப்படுத்தறே, பேசாம உன் தங்கச்சியை வரவழைச்சிடு!

.............................................................................

மச்சான் நீயே சொல்லு, என்னைப்பாத்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?

அந்த பொண்ணுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னு அர்த்தம்.

....................................................................................

அவன்தான் அவங்கவீட்டுல கதவுமாதிரி.

வீட்டுக்குத் தூண்மாதிரின்னு கேள்விப்பட்டிருக்கேன். அது என்னடா கதவுமாதிரி.

அவன வீட்ல யார்வேணா சாத்து சாத்துன்னு சாத்துவாங்க!

....................................................................

அந்த கிராமத்துல ஆண்-பெண் எல்லோரும் தினமும் யோகாசனம் பண்ணறாங்களாமே, களவு, குடில்லாம் இல்லாம எல்லோரும் நல்லவங்களா மாறிட்டாங்களாமே? நீ கேள்விப்பட்டியா?

இல்லைங்க, நான் கோவில்பட்டி.

..................................................................

ஒரு விசேஷத்துக்காக வீட்டில் உறவினர்கள் கூடுகிறார்கள். அப்போது கேள்விப்பட்டது:

கிட்டாமணி எப்போ வரான்?

கலைல எட்டாம்மணிக்கு டாண்னு வந்துட்டான்.

குஞ்சுமணி?

சாயங்காலம் அஞ்சுமணிக்கு வருவான்.

ஆப்த சிநேகிதர்களா ரமணி ரமணின்னு ரெண்டு ரமணி இருக்காங்களே, அவாளும் வராளோன்னோ?

அந்த ரெண்டு ரமணியும் வர ட்ரெய்ன் ரெண்டரைமணிக்கு வருது.

ஏண்டா எடக்காப் பேசறதா நெனப்போ? அப்ப சூடாமணி, ராஜாமணி, பிச்சுமணிலாம்கூட வர்றாளே, அவாளுக்கும் பேருக்கேத்தமாதிரி டைம் சொல்லேன்?

நான் சொல்றது நெஜம்தான். அவாள்ளாம் எற்கனவே வந்தாச்சுண்ணா!

..........................................................................................

எங்க சலூன்கடையில கட்டிங் பண்ணிக்கிட்டா சேவிங் இலவசம்.

இதென்ன பெருசு? எங்க ஃபைனான்ஸ் கம்பெனில சேவிங் பண்ணினா மொட்டையே இலவசம்.

............................................................

பர்ஸ் தொலைச்ச நேரமே சரியில்லடா.

ஏன்? என்ன ஆச்சு?

பர்ஸ்ல இருந்த என் அட்ரஸை வச்சு திருடன் வீட்டுக்கும்வந்து திருடிட்டுப் போய்ட்டாண்டா!

......................................................................

மனைவி: ஏங்க, உங்க ஃப்ரெண்டுக்குப் பார்த்திருக்கற பொண்ணு நல்லாவே இல்லையே!
நீங்களாவது சொல்லக்கூடாதா?

கணவன்: நான் ஏன் சொல்லணும்?

மனைவி: நீங்க அவர் ஃப்ரெண்டுதானே?

கனவன்: அவன் மட்டும் எனக்குச் சொன்னானா என்ன?
...........................................................

நம்ம தமிழ் ஆசிரியருக்கு ரொம்பத்தான் குசும்புடா.

ஏண்டா?

பரீட்சை அறை பிளாக்போர்டுல, 'படையில்லா மன்னர்போலக் கெடுமே விடையில்லா மாணவன் தாள்'னு எழுதி வச்சிருக்கார்டா.
..................................................................

சார் எங்க கடையில துணி வாங்கினா அது லேசுல கிழியாது.

சும்மா பொய் சொல்லாதீங்க.

பொய் இல்லீங்க, உண்மைதான்.

இப்பகூட அவர் ரெண்டு மீட்டர் கேட்டபோது கிழிச்சித்தானே கொடுத்தீங்க?

.............................................................

டீச்சர்: நான் முதல்ல உங்கிட்ட இரண்டு முயல் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு. மொத்தம் எவ்வளவு?

சிறுமி: ஏழு.

டீச்சர்: கவனமா கேளு. முதல்ல உங்கிட்ட இரண்டு முயல் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு. மொத்தம் எவ்வளவு?

சிறுமி: ஏழு.

டீச்சர்: சரி வேறு மாதிரி சொல்றேன். முதல்ல ரெண்டு ஆப்பிள் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு மொத்தம் எவ்வளவு?

சிறுமி: ஆறு.

டீச்சர்: வெரிகுட். இப்ப மறுபடியும் முயல் கணக்கு பாரு. மொத்தம் எவ்வளவு?

சிறுமி: ஏழு.

டீச்சர்: எப்படி?

சிறுமி: எங்கிட்ட வீட்ல ஒரு முயல் இருக்கே!

.................................................................................

மார்த்தாண்டத்துக்கு கடைசி பஸ் எப்ப?

ராத்திரி 11 மணிக்கு.

அதுக்கு முன்னால?

அதுக்கு முன்னால பல்பு இருக்கும்.

..........................................

என் தம்பி சரியான புத்தகப் புழு டி.

ஏன் எப்பவும் புத்தகமும் கையுமா இருப்பானா?

நீ வேற. அவன் புத்தகத்தை வெச்சுக்கிட்டு என்ன நெளி நெளியறான் தெரியுமா?

....................................................

இந்த மாணவன்தான் எங்கள் பள்ளியில் நடந்த கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு பெற்றவன்.

எதைப் பற்றி கட்டுரை எழுதினான்?

'தண்ணீரின் பயன்கள்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருக்கான்.

அப்படியா, நல்லது. உங்கப்பா என்ன பண்றாருப்பா?

பால் வியாபாரம்.
..............................................

வாத்தியார்: இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்.

சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.

வாத்தியார்: அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக் கொண்டே: நீ முட்டாள் என்று உனக்கு எப்படித் தெரியும்?

மாணவன்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சார். நீங்க தனியா நிக்கறதைப் பார்க்கப் பாவமா இருந்தது. அதனால்தான் நானும் எழுந்து நின்றேன்.

...............................................

ஜக்கு: என்ன மக்கு, வேலைக்கு சேர்ந்தியே என்ன கொடுக்கறாங்க?

மக்கு: சம்பளந்தான்.

ஜக்கு: அது சரிடா, என்ன கொடுக்கறாங்க?

மக்கு: பணம்தான்.
......................................

சென்சஸ் அதிகாரி: உங்ககூடப் பிறந்தவங்க எத்தனை பேர்?

மக்கு: இருங்க சார், அம்மாகிட்ட கேட்டுக்கிட்டு வரேன்.

சென்சஸ் அதிகாரி: ?!?!?!

மக்கு: அன்னிக்கு மருத்துவமனையில மொத்தம் இருவது குழந்தைங்க பொறந்தாங்களாம் சார்!
.................................................................................

டாக்டர்: இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு நாலு தடவை சாப்பிடணும்.

மக்கு: அது எப்படி டாக்டர் முடியும்?

டாக்டர்: ஏன் முடியாது?

மக்கு: ஒரு தடவை முழுங்கின அதே மாத்திரையை அதுக்கப்புறம் எப்படி இன்னொரு முறை முழுங்கமுடியும்?

......................................................................

முதியோர் இல்லத்துக்கு அந்தப் பெரிய மனுஷன்கிட்ட நன்கொடை கேட்டது தப்பாப் போச்சு.
ஏன்?

அவரோட மாமியாரை நன்கொடையா எடுத்துக்கச் சொல்றார்

 ஹலோ யார் பேசறது?

நான்தான் பேசறேன் நீங்க?

இங்கேயும் நான்தான் பேசறேன்.
.......................................................................................................


 டேய் ராமு, என் பாடம் நடக்கும்போது வகுப்புல குறும்பு பண்ணக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?

இன்னிக்கு இதுவரை மூணு தடவையும், இந்த வாரத்தில முப்பத்தஞ்சு தடவையும் இந்த மாசத்தில நூத்தி அஞ்சு தடையும் சொல்லியிருக்கீங்க சார்!
...............................................................................................................

ஒரே சமயத்துல அவனோட எல்லாப் பல்லும் கீழே விழுந்திடிச்சு.

நிஜமாவா? நம்பவே முடியலையே? எப்படி?

அட அவன் வச்சிருந்தது பல்செட்.

.................................................................................................................


 ஒரு புலி தன் காதல் வெற்றி அடைந்ததற்கு விருந்து வைத்தது. எல்லாப் புலிகளும் வந்திருந்தன.

அந்த விருந்துக்கு ஒரு பூனையும் வந்தது.

அந்தப் பூனையைப் பார்த்து ஒரு புலி கேட்டது: ஆமாம், நீ யார்? நீ எப்படி இங்கே வந்தே?

பூனை சொன்னது: லவ் பண்ணறதுக்கு முன்னாடி நானும் ஒரு புலியாகத்தான் இருந்தேன்.

....................................................................................................

 நான் மேலே மேலே உயரும்போது நான் யாருன்னு நீங்க தெரிஞ்சுக்குவீங்கடா.

நீ கீழே விழும்போது உன் நண்பர்கள் யார்னு நீ தெரிஞ்சுக்குவடா.

....................................................................................................


 என் சப்ஜக்ட்ல எப்படிடா நூத்துக்கு நூறு மார்க் எடுத்தே?

சொன்னா நீங்க வருத்தப் படுவீங்க சார்.

பரவாயில்லை சொல்லுடா.

ஒரு நல்ல ஆசிரியர்கிட்ட ட்யூஷன் போனேன் சார்.

.......................................................................................................................................


 ஆசிரியர்: அரசாங்கத்துக்கும் ராபின்ஹுட்டுக்கும் என்ன வித்தியாசம்? 


மாணவன்: பணக்காரங்ககிட்ட புடுங்கி ஏழைக்கு கொடுக்கறவன் ராபின்ஹுட். ஏழைங்க கிட்ட புடுங்கி பணக்காரங்க கிட்ட கொடுத்தா அது அரசாங்கம்.


ஆசிரியர்: ????


...............................................................................................................


 ஏன் சார் வெறும் பேப்பரைப் போய் ஜெராக்ஸ் போடறீங்க?


ஒரு பேப்பர் விலை எட்டணா ஆனா ஜெராக்ஸ் காபி முப்பது பைசா தானே?


...........................................................................................................


 ஒரே தன்மை கொண்ட ரெண்டு பொருள் சொல்லு பார்ப்போம்?


பசியும் பஞ்சும் ஒண்ணுதான் சார்.


எப்படி டா?


ரெண்டுமே காதை அடைக்கும்!


..........................................................................................................

 ஆசிரியர்: ஆலும் வேலும்
மாணவன்: பல்லுக்குறுதி
ஆசிரியர்: நாலும் ரெண்டும்
மாணவன்: சொல்லுக்குறுதி
ஆசிரியர்: ஒரு பானை சோற்றுக்கு
மாணவன்: ஒரு சட்டிக் குழம்பு!
.................................................................................

 நீங்க கணக்கு வாத்தியாரா?


எப்படி கண்டுபிடிச்சீங்க?


வீட்டு நம்பர் 10/12 அப்படீங்கறத 5/6-ன்னு அடிச்சு போட்டிருக்கீங்களே அதவச்சுதான்.

................................................................................................................


ஒரு பொண்ணு தல குணிஞ்சி நடந்தா என்ன அர்த்தம்டா மச்சான்?


தெரியலையே?


அவ செல்லுல எஸ்.எம்.எஸ். ஃப்ரீன்னு அர்த்தம்.

.........................................................................................

 மகன்: பல ரோஜாக்களைப் பறிக்கும் போது ஒரு முள்ளு குத்தத்தான் செய்யும்.


அப்பா: இப்போ எதுக்குடா இந்த தத்துவம்?


மகன்: அஞ்சு பேப்பர் எழுதினா ஒரு அரியர் விழுத்தான் செய்யும்கிறத உங்களுக்கு உணர்த்தத்தான்.


...................................................................................................................


 பையன் பார்க்கிற வேலையைத் தரகர் சொன்னதும், உங்க பொண்ணு கல்யாணத்துக்கு உடனே சம்மதிச்சுட்டாளாமே? அப்படி என்ன வேலை பார்க்கிறார்?


பையன் ஓட்டல்ல சமையல்காரரா இருக்கார். 

.....................................................................................

என் பையனுக்கு சந்திரய்யான்னு பேர் வச்சது தப்பாப் போச்சு.


ஏன் நல்ல பேருதானே?


நீ வேற, எதிர் வீட்டு நிலாவை சுத்தி சுத்தி வந்துக்கிட்டிருக்கான்.


......................................................................................


 நேத்து என் காதலியோட பீச்சுக்கு போனப்ப... எக்க அம்மா பார்த்துட்டாங்க.


அப்புறம் என்ன ஆச்சு?


அங்கேயே ரெண்டு பேரும் சண்டை போட ஆரம்பிச்சுட்டாங்க!


அப்போ உங்க அம்மா அவள மருமகளா ஏத்துக்கிட்டாங்கன்னு சொல்லு.

.................................................................................................


 செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

என்ன?


மனிதனுக்குக் கால் இல்லைன்னா பேலன்ஸ் பண்ணமுடியாது, செல்போனில் பேலன்ஸ் இல்லைன்னா கால் பண்ணமுடியாது.

..................................................................................................


 மாணவன் (தோழமையுடன் வேடிக்கையாகப் பேசும் தலைமை ஆசிரியரிடம்: ஏன் சார் நீங்க மண்டையைப் போடமாட்டேங்கிறீங்க?


தலைமை ஆசிரியர்: கொழுப்புடா உனக்கு! எண்டா அப்படிக் கேட்டே? சரியான பதில் சொல்லலைன்னா இப்ப உன் மண்டைல போடப்போறேன்.


மாணவன்: பின்ன என்ன சார்? டீ மாஸ்டர் டீ போடறாரு. பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு. மேத்ஸ் மாஸ்டர் மேத்ஸ் போடறாரு. நீங்க ஹெட் மாஸ்டர்தானே? பின்ன ஏன் மண்டையைப் போடமாட்டேங்கிறீங்க?


.............................................................................................


 ஆசிரியர்: என்ன ஆச்சரியமா இருக்கு? நான் எப்ப வெளியேபோயிட்டு வந்தாலும் தொணதொணன்னு சத்தம் போடுவீங்க. இப்ப இவ்வளவு அமைதியா இருக்கீங்களே, வெரி குட்! 


மாணவன்: நீங்க வெளியேபோயிட்டு வரும்போது நாங்க அமைதியா இருந்தா வேலையை விட்டுடறேன்னு நேத்து சொன்னீங்களே, மறந்துட்டீங்களா ஸார்?

.....................................................................................................

 ஆசிரியர்: வான்கோழி முட்டை போடும் பறவை இனம்.


மாணவன்: அப்படீன்னா அது உங்க இனம் சார்.


ஆசிரியர்: என்னடா உளர்றே?


மாணவன்: நீங்களும் முட்டைதானே போடுறீங்க சார். 


......................................................................................................


 நான் எழுதின கதை எப்படி இருக்கு?


ரொம்ப சுமாராத்தான் இருக்கு, உப்புச்சப்பே இல்ல!


கதைய படிக்கக் கொடுத்தா உங்கள யாரு தின்னு பார்க்கச் சொன்னது?

.......................................................................................................


 உன் பையனுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்னு சொல்லுவியே இப்ப என்ன பண்றான் அவன்?


தொலைதூரக் கல்வி வழியா பி.ஏ. படிக்கிறான்!

.........................................................................................................

 கணக்கு ஆசிரியை: மொத்தம் பன்னிரெண்டு ஆடு வேலிக்குள்ள இருக்கு. ஒரு ஆடு வேலி தாண்டி குதிச்சா மீதி எவ்வளவு ஆடு இருக்கும்?


சிறுவன்: ஒண்ணுமே இருக்காது டீச்சர்.


ஆசிரியை: உனக்கு கணக்கே தெரியலை


சிறுவன்: டீச்சர் உங்களுக்குத்தான் ஆட்டைப் பத்தித் தெரியலை. ஒண்ணு போச்சுன்னா எல்லாம் போயிடும்.

.............................................................................................................


 பையனை வக்கீலுக்குப் படிக்க வச்சது ரொம்பத் தப்பாப்போச்சு


ஏண்ணே அப்படிச் சொல்றீங்க?


படிச்சு முடிச்ச கையோட, சொத்தை பிரிச்சுக் குடுக்கச் சொல்லி எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கான்.

..............................................................................................

எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு, இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?


ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.

.................................................................................

 மக்கு: வாழை மரம் தார் போடும்..


ஜக்கு: அதுக்கு என்ன இப்ப?


மக்கு: ஆனா அத வச்சி நாம ரோடு போட முடியுமா?


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

சன்னா மசாலா!

சன்னா மசாலா!
தேவையானவை:

சன்னா – 1 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 2 பல், மிளகாய்த் தூள், தனியா தூள் – தலா 1 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1, தயிர் – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

செய்முறை:

சன்னாவை 6 முதல் 8 மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு, அதனுடன் தேவையான உப்பு சேர்த்து, குக்கரில் வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்குங்கள். இதனுடன் தக்காளி, மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்கி, இறக்கி ஆறவிட்டு, எல்லாவற்றையும் நைஸாக அரைத்தெடுங்கள்.
இப்போது வெந்த சன்னாவுடன் அரைத்த விழுதை சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

அட… ஹோட்டல் சுவையை மிஞ்சும் சன்னா மசாலா தயார்!

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

All About A Wife.


All About A Wife. When she is quiet, million of things are running in her mind. When she is not arguing she is thinking deeply. When she stares at you, she is wondering why she loves you so much inspite of being taken for granted. When she calls you everyday, she wants to know how you are doing. When she sms's you everyday, she wants you to reply at least once. When she says I love you she means it. When she says I miss you. No one in this world can miss you more than her. When she says I will stand by you, she will stand by you like a rock. Wives are always special. She is said to be the 8th wonder. She is always a priceless treasure. Never hurt her or take her wrong or for granted. Share this with every women to make her smile and with every man to make him realise a women's worth!

*******************

Wife will always be wife...
An elderly woman decided to get her portrait painted.
She told the artist to paint her with
A diamond necklace and diamond ear-rings,
Emerald bracelets,
A broach of ruby and
A gold Rolex.
The confused artist: But, you aren't wearing them, nothing of them.
Old lady: I know. But if I die before my husband, I am sure he will remarry...
And I want his new wife to go crazy looking and searching for the jewellery and harassing him ..

***************
A sophisticated looking Gujarati lady walks into a tattoo shop and sits down.
The owner, amazed at seeing such a sophisticated lady in his shop, runs over immediately and asks if he could help her.
To his shock and utter delight, she lifts up her silk sari and points to her right inner thigh - very high up. 'Right here,' she says, 'I want you to tattoo a clay lamp and underneath it I want the word Diwali.'
Then she points to her left thigh just as high up and says, 'On this side, I want you to tattoo an evergreen tree with lights and tinsel and an angel on top and underneath it I want the word Christmas.'
The owner looks at her. 'Ooh, lady, it is none of my business, but that is probably the most unusual request I have ever heard. Why in the world do you want to do that?
''Well,'' the lady said, 'I'm sick and tired of my husband always complaining that there is never anything good to enjoy between Diwali and Christmas.
****************
My friend found a Leaflet in the newspaper this morning which read, 'ARE YOU AN ALCOHOLIC ? CALL NOW. WE CAN HELP!!!' He Called up. It Was A Liquor Shop Offer : 'Buy 3 & Get 1 Free'
***********************

The FBI had an opening for an assassin. After all the background checks, interviews and testing were done, there were 3 finalists;

Two men and a woman..

For the final test, the FBI agents took one of The men to a large metal door and handed Him a gun.

'We must know that you will follow your Instructions no matter what the circumstances.
Inside the room you will find your wife sitting In a chair . . . Kill her!!'

The man said, 'You can't be serious. I could Never shoot my wife.'

The agent said, 'Then you're not the right man For this job. Take your wife and go home.'

The second man was given the same instructions.

He took the gun and went into the room. All was Quiet for about 5 minutes. The man came out with tears in his eyes, 'I tried, But I can't kill my wife.'

The agent said, 'You don't Have what it takes. Take your wife and go home.'

Finally, it was the woman's turn. She was given the Same instructions, to kill her husband. She took the Gun and went into the room. Shots were heard, one After another. They heard screaming, crashing, Banging on the walls. After a few minutes, all was Quiet. The door opened slowly and there stood the Woman, wiping the sweat from her brow.

'This gun is loaded with blanks' she said. 'I had to Beat him to death with the chair.'




 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

வெஜிடபிள் குருமா!

வெஜிடபிள் குருமா!தேவையானவை:

இங்கிலீஷ் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உ. கிழங்கு போன்றவை) சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கியது – 2 கப், பெ. வெங்காயம் – 2, தக்காளி – 3, தேங்காய்த் துருவல் – 1 கப், பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 5 பல், சோம்பு – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5.

செய்முறை: 
காய்கறிகளுடன் சிறிது உப்பும் முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து, ஜாக்கிரதையாக வெயிட்டைத் தூக்கி, ப்ரஷரை வெளியேற்றி, உடனே திறந்து விடுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிவையுங்கள். தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு, வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

வாசனையான வெஜிடபிள் குருமா ரெடி!

குறிப்பு: காலிஃப்ளவர் சேர்க்க விரும்பினால், தனியே உப்பு நீரில் போட்டுக் கழுவி எடுத்து, துண்டுகளாக்கி, கடைசியாகக் காய்கறிகளைப் போடும்போது சேர்க்கவேண்டும். குக்கரில் போடக்கூடாது.
-


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator