Wednesday 13 August 2014

திருமணத்தின்போது கற்கண்டு கொடுக்கப்படுவது எதற்காக?

திருமணத்தின்போது கற்கண்டு கொடுக்கப்படுவது எதற்காக?

திருமணத்தில் தாலிகட்டியவுடன் எல்லோருக்கும் கற்கண்டு வழங்கப்படுவதைப் பார்க்கிறோம். இப்போதெல்லாம் கற்கண்டுக்குப் பதிலாக லட்டு வழங்கப்படுவதும் வழக்கத்தில் வந்துவிட்டது. அதாவது ஏதோ ஒரு இனிப்பு வழங்கப்படுகிறது. இது எதற்காக என்பதைப்பற்றி எந்தவித சிந்தனையுமின்றி திருமணச் சடங்குகளில் அதுவும் ஓர் அங்கமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. உண்மையில் திருமணச் சடங்கிலே கற்கண்டு வழங்குதல் காரணம் நிறைந்த, கருத்துப்பொதிந்த ஒருவிடயந்தான். ஆனால் அது இப்போது கடைப்பிடிக்கப்பட்டுவரும் முறையில்தான் காரணம் மறைந்துவிட்டது. காரியம் மட்டும் கண்மூடித்தனமாகத் தொடர்கிறது.

ஒரு திருமணத்திற்கு வித்தியாசமான மனநிலைகளுடன் எத்தனையோ விதமான மனிதர்கள் வருவார்கள். அண்மைக்காலம்வரை குடும்பப்பகையாக இருந்தவர்கள் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டமைக்காக வந்திருப்பார்கள். பகைமை இன்னும் மனதில் இருக்கும். ஆனால் உறவை நினைத்தோ, சமுதாய விமர்சனங்களைத் தவிர்ப்பமற்காகவோ வந்திருப்பார்கள். மணப்பெண்ணின் முன்னைய காதலனோ அல்லது மணமகனின் காதலியோ அல்லது இருவருமோ வந்திருக்கலாம். முன்னர் திருமணம் பேசப்பட்டு முறிந்துபோன உறவினர்கள் வந்திருக்கலாம். மணப்பெண்ணில் அல்லது மணமகனில் ஆசைவைத்திருந்தவர்கள் அல்லது தனக்குக் கிடைக்காமல் போய்விட்டதே என்ற ஏமாற்றத்தி;ல் இருப்பவர்கள் அவர்களின் பெற்றோர்கள் வந்திருக்கலாம். மற்றும், திருமணமாகாத மணமக்களின் வயதொத்தவர்கள், அவர்களிலும் வயது கூடியவர்கள் ஏக்கப்பெருமூச்சுடன் இங்கே வந்திருக்கலாம். நல்ல காரியங்கள் நடப்பதே பிடிக்காத சில நயவஞ்சகப் பேர்வழிகள் வந்திருக்கலாம். இவ்வாறு இன்னோரன்ன விதமானவர்கள் அந்தத் திருமணத்திற்கு வந்திருக்கலாம். தாலி கட்டப்படும்போது இப்படிப்பட்டவர்கள் முகங்களைச் சுழித்துக்கொண்டோ, வாழ்த்துவதற்குப்பதிலாக ஏதாவது சொல்லிச் சபித்துக்கொண்டோ இருப்பதற்கு இடமுண்டு. எனவே தாலிகட்டும் சமயத்தில், தாலிகட்டாத திருமணங்களில் மாலைமாற்றும்போது அல்லது திருமணத்தின் முக்கியமான நிகழ்ச்சியின்போது எல்லோரும் முகம் மலர்ந்து மணமக்களை வாழ்த்தவேண்டும் அதற்காக தாலிகட்டுவதற்கு முன்னால் வந்திருக்கும் எல்லோருக்கும் கற்கண்டு வழங்கப்படுகின்றது. கையால் எடுத்ததும் வாயில் போடக்கூடியவாறு சிறுசிறு துண்டுகளாக்கப்பட்ட கற்கண்டு வழங்கப்படும் கற்கண்டை வாயில் போட்டதும் வாய் இனிக்கும், முகத்தில் ஒரு மலர்ச்சிஉண்டாகும்.. யாருமே கற்கண்டை வாயில் போட்டதும் விழுங்கிவிடுவதில்லை. கற்கண்டு உடனேயே கரைந்துவிடாது எனவே வாயில் இனிப்பு கொஞ்சநேரம் நீடிக்கும். அந்த மலர்ந்த முகத்துடன் எல்லோரும் இருக்கும் நேரம் அங்கே தாலிகட்டப்பட்டுவிடும். எல்லோரும் மகிழ்ச்சியோடு ஆசீர்வதித்ததுபோல அந்தச் சடங்கு நிறைவேறும். இதற்காகவே கற்கண்டு வழங்கப்படுகின்றது. ஆனால் இது தாலிகட்டுவதற்குச் சற்று முன்பாக வழங்கப்பட வேண்டும். அப்படித்தான் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. நான் நினைக்கிறேன், எங்கோ ஒரு திருமணத்தில் கற்கண்டு கொடுக்க மறந்திருப்பார்கள். பின்னர், தாலி கட்டியபிறகு ஞாபகம் வந்திருக்கும். சரிசரி இப்போதாவது கொடுப்போம் என்று கொடுத்திருப்பார்கள். அங்கு வந்திருந்த பலரில், அதுதான் வழக்கமென்று சிலர் நினைத்திருக்கலாம். தங்கள் வீட்டுத் திருமணங்களில் அப்படியே கடைப்பிடித்திருக்கலாம். இப்போது பல இடங்களில் அதுவே வழக்கமாகிவிட்டது. கற்கண்டுக்குப் பதிலாக லட்டுப்போன்ற இனிப்புக்களை வழங்குவதில் தவறில்லை. ஆனால் எல்லா இனிப்புக்களும் கற்கண்டுபோல வாயில் நீடித்திருந்து இனிப்பதில்லை. முகமலர்ச்சியைக் கொடுப்பதுமில்லை. சில இனிப்புப் பொருட்கள் வாயில் போட்டதும் விழுங்கிவிடக்கூடியவை. சில இனிப்புக்கள் திகட்டும். சிலவற்றை எல்லோரும் சாப்பிடமாட்டார்கள். குருதியில் கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் சாப்பிடமாட்டார்கள் என்பது மட்டுமல்ல சிலவேளை இனிப்பைக் கண்டதுமே ஏற்கனவே முகத்தில் இயல்பாகவே இருந்த கொஞ்ச நஞ்ச மகிழ்ச்சியும் மறைந்துவிடும். அப்படிப்பட்ட சிலருக்கு மற்றவர்கள் சாப்பிடுவதைப்பார்த்து கோபமோ எரிச்சலோகூட ஏற்படலாம். இது இனிப்பு விநியோகிக்கும் நோக்கத்திற்கே எதிராகிவிடும். எனவே இனிப்பு வழங்குவதாயிருந்தால் கற்கண்டே பொருத்தமானது. அதுவும் தாலிகட்டுவதற்குச் சற்று முன்பாக வழங்குதலே சரியானது, பிரயோசனமானது. அதுவே ஆன்றோர் அறிமுகப்படுத்தியது.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator