எத்தனை சிரமங்கள் வந்தாலும்,யார் சொன்னாலும் சரி, உங்கள் தாலியை கோவில் உண்டியலில் போடாதீர்கள். இதுபோல் செய்வதற்கு நமக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை. திரும்ப கஷ்டம் வந்தால், மறுமறுபடியும் போட்டுக்கொண்டே இருக்க முடியுமா. யோசனை செய்து பாருங்கள். எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று இருப்பதால்தான், இதுபோன்ற பரிகாரங்களை சொல்ல ஆரம்பித்தார்கள். இதற்க்கு எந்த ஆதாரங்களும் இல்லை. ஆகவே திருமணத்தின்போது, கட்டிய தாலியை, எந்த காரணத்தை முன்னிட்டும், கழற்றி உண்டியலில் போடக்கூடாது .
அதேபோல்தான் ,திருமணம் ஆகவில்லை என்றால், வாழைமரத்தை வெட்டுவது. இது அதைவிட மோசமான செயலாகும். திருமணம் என்பது, ஜாதகப்பிரகாரம் ,நடக்கவேண்டிய நாளில் நடந்துவிடும். இரு தார தோஷத்தை,நாம் மாற்ற முடியாது. இதற்கும் அதற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
யோசித்துபாருங்கள். அதே வாழை மரத்தை, நாம் சுப காரியங்களுக்கு தோரணமாக நட்டு பூஜை செய்து வணங்கிகின்றோம். அந்த மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் நமக்கு உணவாக பயன்படுகிறது. உங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷத்துக்கும், இதற்கும், எந்தவித சிறு துளி சம்பந்தமும் கிடையாது. இதனால், உங்கள் வர்கங்கள் பாதிக்கப்படும் என்பதை மறவாதீர்கள்.@krishnamoorthi thigarajaசாஸ்திரிகள்.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment