Saturday 18 October 2014

பெரியவா கடாக்ஷம்.






பெரியவா சரணம்.

ஒவ்வொரு வீட்டிலும் எந்த சுப நிகழ்வுகள் ஆகிலும் செய்யும் காலத்து அதாவது தனது மகன், மகள் அல்லது பொதுக் காரியங்கள் செய்யும் காலத்து அனைவரையும் வாழ்த்திக் கூறும் பண்பு என்பது நமது சனாதன தர்மத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகவும் தனித்தன்மை பொருந்தியதாகவும் உள்ளது.

எனக்குத் தெரிந்த இரண்டு வாழ்த்து மந்திரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டுமென தோன்றியது. அவையாவன:-

சர்வே பவந்து சுகின:: சர்வே சந்து நிராமய: |
சர்வே பத்ராணி பஸ்யந்து யாகச்சித்துக்க பாக்பவேத் ||

அனைவரும் சுகத்தோடு வாழட்டும், அனைவரும் வியாதிகளின்றி இருக்கட்டும், அனைவரும் நல்ல செயல்களையே எதிர் நோக்கட்டும், ஒருவரும் ஒருபொழுதும் துக்கமின்றி இருக்கட்டும்.

இது எனது தகப்பனார் எனக்கு சொல்லித் தந்த ஸ்லோகம். ஒவ்வொரு நாளும், பண்டிகைப் பொழுதுகளிலும், மற்றும் வீட்டில் பூஜை நடந்து முடிந்ததும் இறுதியாக இந்த ஸ்லோகம் சொல்லி நமஸ்கரித்து இறைவனைப் ப்ரார்த்திக்க வேண்டும் என்பார்கள்.

மற்றொன்று:-

அபுத்ரா: புத்ரிண: சந்து புத்ரின: சந்து பௌத்ரிண |
அதனா: சதனா: சந்து ஜீவந்து சரதாம் சதம் ||

பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைகள் பிறக்கட்டும், பிள்ளைகள் உள்ளவர்களுக்கு பேரன் பிறக்கட்டும், செல்வம் இல்லாதவர்களுக்கு செல்வம் செழிக்கட்டும், ஒவ்வொருவரும் நூறு வயது காலம் சந்தோஷமாக வாழட்டும்.

இந்த மந்திரம் சுவாமிமலையில் நான் சந்தித்த ஒரு அம்மையார் கொடிமரத்தினருகே நின்று ஸ்லோகங்கள் சொல்லி முடித்ததும் அங்கிருந்த கூட்டத்தினரைப் பார்த்து சிறிது குறைவான குரலில் சொல்லி புஷ்பம்தனை போட்டார்கள். அது சமயம் அவர்களிடமிருந்து கேட்டறிந்தது.

அன்று முதலாய் ஒவ்வொரு பொழுதிலும் கோவிலுக்குச் சென்று எனக்குத் தெரிந்த ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து முடித்ததும் இதனைச் சொல்லிவிட்டு வருவதை தொடர்ந்து செய்து வருகின்றேன்.

நாமும் ஒரு கடுகளவேனும் புண்ணியம் செய்திருப்போமல்லவா! அதனைக் கொண்டு எல்லோரையும் வாழ்த்தினால் கூட, அந்த வாழ்த்தினில் பயனுற்ற ஜீவனது பிரார்த்தனை சர்வ நிச்சயமாக நம்மைக் காக்குமே!

நம்மில் ஒரளவு வயதானவர்கள் அனைவரும் இந்த மந்திரங்களைப் பொருளோடு அறிந்து சமயம் கிட்டும் போதெல்லாம் அனைவரையும் வாழ்த்தி மகிழலாமே!

வாழ்த்துவதிலும், பிறருக்காகப் ப்ரார்த்தனை செய்வதிலும் கூட ஒருவித சுகமுண்டுன்னு சொன்ன பெரியவா வார்த்தைகளை நினைவு கூர்ந்து அனைவரின் பொருட்டும் உங்களிடம் யாசிக்கின்றேன் வாழ்த்தொலிகளுக்காக!

பெரியவா கடாக்ஷம்.

நமஸ்காரங்களுடன்,
சாணு புத்திரன்.
பெரியவா சரணம்.

ஸ்ரீ சூலினீ துர்க்கா ஸர்வசாந்திஸ்தவம்.

அம்பாளின் இந்த அபூர்வமான ஸ்தோத்திரங்கள் காலம் சென்ற ஜட்ஜ் ஸ்ரீ கொரட்டி ஸ்ரீ லக்ஷ்மி நரஸய்யர் அவர்களால் எழுதி வைக்கப்பட்டு இருக்கிறது.

ஓம் தத் ஸத்

ஸ்ரீ சூலினீ துர்க்கா ஸர்வசாந்திஸ்தவம்.

ஸர்வ சாந்திம் ப்ரவக்ஷ்யாமி துரிதாத் ஸகலத்மனாம்
யஸ்ய ஸ்ரவண மாத்ரேண சாந்திமாப்னோத்ய கௌகத: |
ஸாதகானாம் சேஷாணாம் கேவலானாம் த்ருடாத்மனாம்
நாநாபீடா மஹாபாப ரோகமோஹேப சாந்தயே ||

க்ரஹக்ஷுத்ராதி பாபௌக ராகஸர்பாதி ஸங்கடே
நாநாம்ருத்யு பயப்ராப்தே சோரவ்யாக்ர ப்ரபீடநே |
துர்நிமித்தேச துஸ்வப்னே துஸ்ஸஹே துகேஸங்குலே
அனாவ்ருஷ்டிபயே ராஜ ஷோமபாமேதி மாருதே ||

சஸ்த்ராதி க்ருத்ரிம விஷ முகாபத்ஸ்வ கிலேஷ்வபி
ஸர்வசாந்திம் ஜபேன்மந்த்ரம் ஸர்வஸௌக்யாபி வ்ருத்தயே |
ருஷ்யாதிகம் யதாமூலம் ஸர்வசாந்த்யை நியோககம்
மூலம் ஸ்ரீபைரவாத்மேதி புண்ய த்யான முதீரிதம் ||

இந்த ஸ்லோகத்தை அனுதினமும் சந்தியாகால வேளையில் பூஜையறையிலும், வாசலிலும் தீபமேற்றிய பின்னராக, பூஜையறையில் சுவாமி சன்னதியை நோக்கி நின்றவண்ணமாக மூன்று முறை ஜபிக்க எல்லா வகையான தோஷங்களும், சிரமங்களும், ரோகங்களும், பீடைகளும், விஷ ஜ்வராதிகளும் நீங்கி ஐஸ்வர்யம் கூடும் என உடையாளூரைச் சேர்ந்த ஒரு நண்பர் மூலமாக அறிந்தேன்.

அனைவரும் சூலினி துர்க்கா பரமேஸ்வரியைத் த்யானித்து கஷ்டங்கள் நீங்கப் பெற்று சந்தோஷமாக வாழ ப்ரார்த்தித்துக் கொண்டு இதனைப் பகிர்கின்றேன்.

பெரியவா கடாக்ஷம்.

நமஸ்காரங்களுடன்,
சாணு புத்திரன்.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator