மஹா சங்கடஹர சதுர்த்தி விரதம் !!
விநாயகருக்கு உரிய விரதங்களில் சங்கடஹர சதுர்த்தி விரதம் முக்கியமானது. அதாவது... தொல்லைகள், இடையூறுகளை போக்குகின்ற நாளாகும். இது விநாயகருக்கு உகந்த நாளாகும்.
தேய்பிறை சதுர்த்தியில் இரவுப் பொழுதில் சந்திரன் பிரதானமாகிறான். இது விநாயகப்பெருமானால் சந்திரனுக்கு சாபம் நீங்கிய நாளாகும். இன்று விரதமிருந்து, விநாயகருக்கு பிடித்தமான மோதகம் (கொழுக்கட்டை) நிவேதனம் செய்து மற்றவர்களுக்கு வழங்குவது நல்லது.
அதோடு, இன்று விநாயகருக்கு விசேஷமாக பூஜை செய்வதால், அவர் மிகவும் மகிழ்ந்து எல்லா இடையூறுகளையும் நீக்கி அருள்வார். இந்த பூஜையின் நிறைவில் ரோகிணியுடன் உறை யும் சந்திரனையும் பூஜிக்க வேண்டும்.
ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் வரும் தேய் பிறை சதுர்த்தியானது மகா சங்கடஹர சதுர்த்தி நாளாகும். எனவே விநாயகரை வழிபட மிக உகந்த நாளாகும்.
ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியில் இருந்து 12 மாதங்கள் அனுஷ்டித்து விநாயக சதுர்த்திக்கு முந்தைய தேய்பிறை சதுர்த்தியான மகா சங்கடஹர சதுர்த்தி அன்று முடிக்கும் மரபும் உண்டு.
இந்த விரதத்தை தொடங்கும் நாளில் சூரியன் உதிக்க 5 நாழிகைக்கு (2 மணி நேரம்) முன்னரே உறக்கத்தில் இருந்து எழுந்து விதிப்படி சங்கல்பம் செய்து கொண்டு புண்ணிய நீராடி சிவச்சின்னங்களை தரித்துக் கொண்டு விநாயகப் பெருமானை தியானிக்க வேண்டும்.
அவருடைய ஓரெழுத்து, ஆறெழுத்து மத்திரங்களில் ஏதாவது ஒன்றை இதுவும் தெரியாதவர்கள் விநாயகரின் பெயரையாவது இடைவிடாது அன்று முழுவதும் ஜெபிக்க வேண்டும். உபவாசம் இருப்பதும் நன்று.
இரவு சந்திரோதயம் ஆன உடன் சந்திரனை பார்த்துவிட்டு, அர்க்கியம் விட்டு பிறகு பூஜையை முடித்து சாப்பிட வேண்டும். அன்று விநாயக புராணத்தை பாராயணம் செய்வதும் நன்மை பயக்கும்.
இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹர சதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்.
முதன்முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து ராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர்.
விநாயகருக்கு உரிய விரதங்களில் சங்கடஹர சதுர்த்தி விரதம் முக்கியமானது. அதாவது... தொல்லைகள், இடையூறுகளை போக்குகின்ற நாளாகும். இது விநாயகருக்கு உகந்த நாளாகும்.
தேய்பிறை சதுர்த்தியில் இரவுப் பொழுதில் சந்திரன் பிரதானமாகிறான். இது விநாயகப்பெருமானால் சந்திரனுக்கு சாபம் நீங்கிய நாளாகும். இன்று விரதமிருந்து, விநாயகருக்கு பிடித்தமான மோதகம் (கொழுக்கட்டை) நிவேதனம் செய்து மற்றவர்களுக்கு வழங்குவது நல்லது.
அதோடு, இன்று விநாயகருக்கு விசேஷமாக பூஜை செய்வதால், அவர் மிகவும் மகிழ்ந்து எல்லா இடையூறுகளையும் நீக்கி அருள்வார். இந்த பூஜையின் நிறைவில் ரோகிணியுடன் உறை யும் சந்திரனையும் பூஜிக்க வேண்டும்.
ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் வரும் தேய் பிறை சதுர்த்தியானது மகா சங்கடஹர சதுர்த்தி நாளாகும். எனவே விநாயகரை வழிபட மிக உகந்த நாளாகும்.
ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியில் இருந்து 12 மாதங்கள் அனுஷ்டித்து விநாயக சதுர்த்திக்கு முந்தைய தேய்பிறை சதுர்த்தியான மகா சங்கடஹர சதுர்த்தி அன்று முடிக்கும் மரபும் உண்டு.
இந்த விரதத்தை தொடங்கும் நாளில் சூரியன் உதிக்க 5 நாழிகைக்கு (2 மணி நேரம்) முன்னரே உறக்கத்தில் இருந்து எழுந்து விதிப்படி சங்கல்பம் செய்து கொண்டு புண்ணிய நீராடி சிவச்சின்னங்களை தரித்துக் கொண்டு விநாயகப் பெருமானை தியானிக்க வேண்டும்.
அவருடைய ஓரெழுத்து, ஆறெழுத்து மத்திரங்களில் ஏதாவது ஒன்றை இதுவும் தெரியாதவர்கள் விநாயகரின் பெயரையாவது இடைவிடாது அன்று முழுவதும் ஜெபிக்க வேண்டும். உபவாசம் இருப்பதும் நன்று.
இரவு சந்திரோதயம் ஆன உடன் சந்திரனை பார்த்துவிட்டு, அர்க்கியம் விட்டு பிறகு பூஜையை முடித்து சாப்பிட வேண்டும். அன்று விநாயக புராணத்தை பாராயணம் செய்வதும் நன்மை பயக்கும்.
இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹர சதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்.
முதன்முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து ராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர்.
परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment