Sunday 14 December 2014

கோடி உறுப்பினர் சேர்ப்போம்! மோடி ஆட்சி அமைப்போம்!


                             கோடி உறுப்பினர் சேர்ப்போம்! மோடி ஆட்சி அமைப்போம்!          
 

 
சென்னை கமலாலயத்தில் 12.12.2014 அன்று நிகழ்ந்த கட்சியின் தகவல்தொழில் நுட்பப் பிரிவுக் கூட்டத்தில் தமிழக பா ஜ க தலைவர்   திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு:

 'வணக்கம்.மரியாதைக்குரிய பிரதமர் மோடி அவர்கள்  சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றி சமூக வலைத்தள ஆர்வலர்களால்  என்றால் அது மிகையாகாது.  ஆறு ஆண்டுகளுக்கு முன் நான் மோடி அவர்களைச் சந்தித்த போது 'உங்களால் ஏன் தமிழ்நாட்டில் கட்சியைப் பலப்படுத்த முடியவில்லை?' என்று கேட்டார். மேலும் 'என்னுடன்  தொடர்பு கொள்ளுபவர்களில் மிக அதிகம் பேர்  தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களே' என்றும் கூறினார்.

சிலரால் களப்பணி  செய்ய முடியும்; சிலர் வேறு வேலை பார்த்துக் கொண்டே கட்சிக்காகப் பணி  செய்ய முடியும்; சிலரால் வேலையின் ஊடே கட்சிப்  பணி  செய்ய முடியும்; ஆனால் தொழில் நுட்பத் துறையில் உள்ள உங்களால்  ஒரு அறையில், ஒரு நாற்காலியில்  உட்கார்ந்து கொண்டே கட்சிப் பணி  செய்ய முடியும்; 

ராமபிரானின் பட்டாபிஷேகம் அனுமன்  பறந்து ,பறந்து சென்று அவருக்குச்  சேவை செய்ததால் நடந்தேறியது.அவன் வாயு மைந்தன்.  நீங்களெல்லாம் அப்படியே. வலைத்தளத்தில் பறந்து பறந்து, உலகத்தையே ஒரு நொடியில் சுற்றி வந்து விடுகிறீர்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் கருத்துக்களைப் பரப்பி விடும் ஆற்றல் உங்களுக்கு உள்ளது.   எவ்வாறு விநாயகப்  பெருமான் அம்மை ,அப்பனைச்  சுற்றி வந்து  மாம்பழத்தைப்  பெற்றாரோ அவ்வாறே நீங்களும்  வலைத்தளத்தில் சுற்றி, வெற்றி என்னும் மாம்பழத்தை நம் கட்சிக்குப் பெற்றுத் தாருங்கள் என்று  வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

 நான் ஒரு காங்கிரஸ் குடும்பத்திலிருந்து  வந்தவள். நான் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த போது என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  6 மாதம் என்னுடன் பேசவேயில்லை. அப்போது பலரும் என்னை 'நீ ஏன் இப்படிச் செய்தாய்?' என்று கேட்டனர். அப்போது நான் சொன்னேன்  'இந்தக் கட்சி ( பா ஜ க)  எதிர்காலத்தில் நன்றாக வளர்ந்து ஒரு வலிமை மிக்க  கட்சியாக ஆகும்;  இதற்கு ஒளிமயமான எதிர்காலமுள்ளது' என்று . . அது இப்போது உண்மையாகத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட  ஒரு கருத்துக் கணிப்பின்படி தமிழ் நாட்டில்  நாம் இப்போது மூன்றாவது இடத்தில் உள்ளோம்.
நாம் வெற்றிபெற வேண்டுமென்றால் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த வேண்டும். 
அதனாலேயே நமது அகில இந்தியத் தலைவர்  திரு.அமித் ஷா அவர்களின்   வேண்டுகோளின்படி உறுப்பினர் சேர்க்கையைத்  தீவிரப்படுத்த நாம் 18002662020 என்ற எண்ணுக்கு 'மிஸ்டு கால்' அழைப்பு செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம் .    
அதன் அடிப்படையிலேயே   'கோடி உறுப்பினர் சேர்ப்போம், மோடி ஆட்சி அமைப்போம்' என்ற கோஷத்தை முன்வைத்துள்ளோம். 

தமிழ்நாட்டில் நாம் மிகவும் பலவீனமாக இருந்த நிலையிலேயே 10 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டிருந்தோம். இப்போது மோடி அவர்களைப் போன்ற செயலாற்றல் உள்ள பிரதமரும், அமித் ஷா அவர்களைப் போன்ற கட்சித் தலைவரும் உள்ள நிலைமையில் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்ப்பதென்பது கடினமான  காரியமல்ல.

எவ்வாறு நாடாளுமன்றத் தேர்தலில் 'இலக்கு 272+ ' என்ற  கோஷத்தை முன்வைத்து நாம் பணி   செய்தோமோ அவ்வாறே இப்போது 2016 தமிழகத் தேர்தலுக்காக இலக்கு 122 + என்று முன்வைத்துள்ளோம். 

சிலர் என்னைக் கேட்கின்றனர்- 'அது என்ன 122? தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்க 117 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதுமே' என்று .நானும் முதலில் 117 என்ற இலக்கத்தைத்தான்   நினைத்திருந்தேன். ஆனால்  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கட்சித் தொண்டர் கூறிய  கருத்து என்னைச்  சிந்திக்க வைத்தது. '117 என்ற எண்ணை  விட 122 என்று சொல்லும் போது அங்கே ஒரு நேர்மறைத் துடிப்பு ஏற்படுகிறது' என்ற அவரது  கருத்து எனக்கும் சரியாகத் தோன்றியது. 

என்னைத்  தினமும் சிலர் சந்திக்க வருகின்றனர். அவர்களில் ஒருவர் என்னிடம் ' நீங்கள் 122 தொகுதிகளில்  வெற்றி பெறுவோம் என்கிறீர்களே, அது எப்படி முடியும்?' என்று  கேட்டார். ஆனால் சில நாட்கள்  கழித்து அவரே என்னிடம் 'நீங்கள் 130  தொகுதிகளில் வெற்றி பெற முடியும்' என்று  கூறினார்.

 'எப்படிச் சொல்கிறீர்கள்?' என்று நான் அவரைக் கேட்டேன். அவர் கூறிய  பதில் என்னைச் சிந்திக்க வைத்தது.  

'நான் பல தேர்தல் முடிவுகளையும் ஆய்ந்து பார்த்தேன்; கட்சிகள் பெற்ற வாக்குகளின் விழுக்காடுகளையும் பார்த்தேன்;அதாவது தமிழ் நாட்டில் என்ன ஆனாலும் திமுக , அ திமுக இரண்டுக்குமே ஓரு குறிப்பிட்ட சதவிகித வாக்கு வங்கி உள்ளது. அவர்கள் வேறு யாருக்குமே வாக்களிக்க மாட்டார்கள். 
ஆனால் சிலர் மாறி மாறி இவ்விரு கட்சிகளுக்கும் வாக்களிப்பார்கள்.
இதைத் தவிர முப்பது விழுக்காடு மக்கள் தேர்தலில் வாக்களிப்பதே இல்லை. இவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட  2.25 கோடி பேர்'. என்றார் அவர். 

இந்த இரு பிரிவினரைச் சேர்ந்த வாக்காளர்களின்  மீது நாம் கவனம் செலுத்தலாம். வாக்களிக்காதவர்களில்  பாதி பேர்களின் வாக்குகளையாவது -அதாவது ஒரு கோடிக்கு மேல் -நாம் வாங்கினால் கூட நமக்கு மிகப் பெரிய வெற்றி கிட்டும். 

இப்பொது நாம் அறிமுகப் படுத்தியுள்ள 18002662020 என்ற தொலைபேசி எண்ணைப்  பயன்படுத்தி உறுப்பினர்  சேர்க்கும் திட்டத்தில்  குஜராத்தில் பா ஜ கவில் சேர்ந்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்குச் சராசரியாக  76000 பேர்கள். உ பி  இல் 60000 க்கும் மேல்; மகாராஷ்ட்ராவில் 30000 . தமிழ் நாட்டில் நேற்றுதான்  முதல் முதலாக 12000த்   தாண்டியது.

இந்தத்  தகவல்தொழில் நுட்பப் பிரிவுக் கூட்டத்திற்குப் பிறகு நமது உறுப்பினர் சேர்க்கை மிக அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும். தமிழ் நாட்டுக்கு என்ன ஆயிற்று என்று எல்லோரும் வியக்க வேண்டும்.  உறுப்பினர் சேர்க்கையில் ' தகவல்தொழில் நுட்பப் பிரிவுக்  கூட்டம் நடப்பதற்கு முன், நடந்த பின்'  என்று பேசும் நிலை வர வேண்டும்.

சில இளைஞர்கள் செல்வ  வளம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு உழைக்க வேண்டிய கட்டாயம் இருக்காது. 
அவர்கள் குடும்பச் சொத்தை மகிழ்ச்சியாக அனுபவித்து  வாழ்ந்து கொண்டிருக்கலாம். அவர்களது வங்கிக் கணக்கில் போதுமான  தொகை இருக்கும்.ஆனால் வறுமையான   குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞன் நல்ல அறிவும் ஆற்றலும் இருந்தாலும்  கடின உழைப்பு இருந்தால் மட்டுமே அவனால்  முன்னேற  முடியும்.

 திமுக ,அதிமுக  போன்ற கட்சிகள் வளமான குடும்பத்து இளைஞர்களைப் போன்றவை.
ஆனால் நாம் வறுமையான  குடும்பத்தில் பிறந்த அறிவாளி இளைஞர்களைப் போன்றவர்கள். ஆகவே  நாம் உழைத்து முன்னேற  வேண்டிய நிலையில் உள்ளோம்.
 
இப்போது தமிழ் நாட்டில் தொலைபேசி அழைப்பு மூலம் உறுப்பினர் சேர்க்கும் பணிக்கு யாரைப் பொறுப்பாளராகப் போடலாம் என்று மூத்த தலைவர் திரு இல கணேசன் அவர்களுடன் கலந்தாலோசித்த போது அவர் கூறிய கருத்துக்கள்  என்னை எளிதாக முடிவெடுக்க வைத்தது.
இப்போது அதன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பவர் சில காலம் முன்பு ஒரு மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கும்  பொறுப்பில் இருந்த போது ஒரு முறை கொடுக்கப்பட்ட இலக்கை அடைய முடியவில்லை. உடனே அவர் ஒரு சைக்கிளை எடுத்துக் கொண்டு கிராமம் கிராமமாகச்  சுற்றி உறுப்பினர்களைச்  சேர்த்து  இலக்கை  எட்டிப் பிடித்தார்.

   
இப்போது  நம்மைப் பார்த்து வாசன் கட்சியினரும் தொலைபேசி அழைப்பு மூலம் உறுப்பினர் சேர்க்கை ஆரம்பிக்கப் போவதாகக் கூறியுள்ளனர். 50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

ஆட்சியிலிருந்த 10 வருடங்களில்  தமிழ் நாட்டுக்கு ஒன்றுமே செய்யாத வாசன் இப்போது எவ்வாறு எதை வைத்து இவ்வாறு பேசுகிறார் ? அவர் 50 லட்சம்  உறுப்பினர்களைச் சேர்க்க முடியும் என்றால் நம்மால் ஒரு கோடி என்ன, இரண்டு கோடி உறுப்பினர்களைக் கூடச் சேர்க்க முடியும்.


வரும் டிசம்பர் 20 மற்றும் 21ம் தேதிகளில் நமது அகிலபாரதத் தலைவர் திரு அமித் ஷா அவர்கள் தமிழகம் வரவுள்ளார். மாபெரும் பொதுகூட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவரது தமிழக வருகையைப் பற்றிய செய்தியையும் பெரிய அளவில் மக்களிடம் சென்று சேர்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
 
திரு. அமித் ஷா அவர்களைப் பற்றி 'நடக்க முடியாதை நடத்திக் காட்ட வல்லவர் ' என்று பத்திரிகைகள் கூறியுள்ளன.
 
தமிழ் நாட்டிலும் நாம் நடத்திக் காட்டுவோம். தமிழகத்தை இந்த இரண்டு கட்சிகளுக்குமே நாம் சாசனம் எழுதிக் கொடுத்து விட்டோமா என்ன ?

2016 ல் சென்னை கோட்டையில் காவிக் கொடி பறந்தே தீரும்.

இதற்கான சபதமேற்போம்.

வெற்றிக் கனியைப் பறிப்போம்' 

தொகுப்பு: இரா. ஸ்ரீதரன் 



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator