எல்லையற்ற இறைவனை நாம் காரண அறிவால் அறிய முடியாதென்றால் பின் எப்படித்தான் அறிவது ?
எல்லையற்ற ஒன்றை நாம் அறிய அந்த எல்லையற்ற நிலையை நாம் அடைந்தாக வேண்டும்.
புனித புத்தகங்கள், குருமார்களின் உபதேசங்கள், இறைத் தூதர்கள் அறிவுரைகள், சொற்பொழிவுகள், நீதிக்கதைகள் எல்லாமே நமக்கு வழிக்காட்டிகள் மட்டுமேயன்றி இலக்குகள் அல்ல.
புத்தரை எடுத்துக் கொள்ளுங்கள். சித்தார்தன் என்கிற சிறுவன் தன் விடா முயற்சியால் புத்தரானான். அவருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்தனர். அவரின் தத்துவங்களை கண்டு மக்கள் மெய்மறந்தனர். முக்தியை விஞ்ஞான அடிப்படையில் விளக்கிய பெருமை புத்தரை சேரும். பல நூறு சொற்பொழிவுகளை அவர் ஆற்றியுள்ளார். ஆனால் அவரின் ஆயிரக்கணக்கான சீடர்களின் எத்தனை புத்தர்கள் உருவானார்கள் என்றால் அது மிக மிக குறைவானதே.
ஏனென்றால் எல்லையற்ற தன்மையை நீங்கள் வார்த்தைகளால் விளக்கி விட முடியாது. அது உணரப்பட வேண்டிய ஒன்று. எங்கே நம்முடைய தேடல்கள் நிறைவுக்கு வருகின்றனவோ அங்கே ஞானம் பிறக்கிறது. எப்போது கேள்விகள் பிறப்பதில்லையோ அப்போது முழு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது.
Science ends where philosophy starts என்று மிக அழகாக சொல்வார் சுவாமி விவேகானந்தர். எப்போது நம் தேடல்கள் முடிவடைகிறதோ அப்போது தத்துவஞானம் தொடங்குகிறது என்பது இதன் பொருள். நாம் படிக்கும் புனித புத்தகங்கள், நாம் கேட்கும் உபதேசங்கள், நாம் நம் அறிவை கொண்டு நுட்பமாக ஆராயும் வழிமுறைகள் என எல்லாமே தேடல்கள்தான். இந்த தேடல்கள்தான் ஒருவனை இலக்கை நோக்கி கொண்டு செல்லும்.
இலக்கை அடைவது என்பது அவரவர் தன்மைக்கு ஏற்ப மாறுபடுகின்றன. கோவையிலிருந்து சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால் சிலருக்கு ரயிலில் செல்ல பிடிக்கும், சிலருக்கு பேருந்தில் செல்ல பிடிக்கும். சிலருக்கோ காரில் அல்லது விமானத்தில் எளிதாக சென்று அடையக் கூடிய தகுதி இருக்கும். அது போல அவரவர் தகுதி மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேடும் வழி மாறுபடுகிறது.
ஆதி சங்கரர் ஞான வழியில் சென்று அத்வைதம் எனும் சித்தாந்தத்தை ஸ்தாபித்தார். நான் உடலல்ல, அழிவற்ற ஆத்மா என்பதை ஒருவன் உணர்வதன் மூலமாக பரம்பொருளை அடையலாம் என்பதை நிறுவினார். ஸ்ரீமத் ராமானுஜரோ ஒருவன் பக்தி மார்கத்தில் இறைவனுக்காகவே வாழ்வின் ஒவ்வொரு கணப்பொழுதையும் அர்பணித்து, அவன் அருளாள் அவனிடம் முழுவதுமாய் சரணடைந்து, இறைவனுக்கு நித்தியமான சேவை புரியும் பாக்கியம் பெறலாம் எனும் "விஷிஷ்டாத்வைதத்தை" நிறுவினார். பல மகான்கள் மேலும் பல வழிகளை நமக்கு காட்டுகின்றனர். வழிகள் மாறலாம் ஆனால் இலக்குகள் ஒன்றே.
இதையெல்லாம் படிக்கையில், எல்லையற்ற தன்மையை அடைவது சாத்தியமா என்கிற கேள்வி எழுகிறதல்லவா ? அது என்ன அத்தனை கடிணமானதா ? அதற்கு மிக அவசியமானது எது ? அடுத்த பாகத்தில் பார்போம்.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment