Friday 15 August 2014

விவேகானந்தரும் டெஸ்லாவும்:

TREASURES OF HINDUISM 31 :
விவேகானந்தரும் டெஸ்லாவும்:

நிகோலா டெஸ்லா (1856 - 1943) உலகில் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர்!! மின்பொறியியலில் வியக்கத்தகுந்த ஆராய்சிகளைச் செய்தவர்!! யுகோஸ்லாவிய நாட்டில் பிறந்து பெரும் காலங்கள் அமெரிக்காவில் வாழ்ந்தவர்!! பல மின்சார சம்பந்தப்பட்ட கண்டுபிடிப்புகளை செய்தவர்!!

இன்று நமது வீடுகளுக்கெல்லாம் எளிதாக மின்சாரம் வரும் வழிமுறையான இருமுனை மின்சாரத்தைக் கண்டுபிடித்ததே (ALTERNATING CURRENT) டெஸ்லா தான்!! சிறந்த விஞ்ஞானியான அவர் மனம் எப்போதுமே ஆராய்சிகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது!!

விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அவர் வந்த போது டெஸ்லா சந்தித்தது அவர் வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது!! இயற்கையாகவே விஞ்ஞானத்தில் மட்டுமே ஆர்வம் உள்ளவராக இருந்த டெஸ்லா திருமணமே செய்துகொள்ளாமல் அமெரிக்காவில் உள்ள பெரிய ஹோட்டல்களில் மட்டுமே தங்கியிருந்தார்!! விவேகானந்தரை சந்தித்த பின் ஹிந்து மதத்தின் பால் மிக்க ஆர்வம் கொண்டு விட்டார்!!

ஹிந்து மத வேதங்களில் விஞ்ஞான விஷயங்கள் நிறைய இருப்பதை உணர்ந்த அவர் ஹிந்து மதம் பற்றி நிறைய அறிந்து கொண்டார்!! ஹிந்து மதத்தின் பால் மிகுந்த பற்றுள்ளவராக இருந்ததால் அவர் சைவ உணவே உண்ணவும் ஆரம்பித்து விட்டார்!!

இயற்கை சக்திகளான இடி, மின்னல் போன்றவற்றின் மின்சாரத் தன்மைகள் குறித்து நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதன் பொருளை ஒரு விஞ்ஞானி என்பதால் எளிதில் கிரகித்துக் கொண்ட டெஸ்லா அவைகளின் விஞ்ஞான அற்புதம் குறித்தும் உணர்ந்தார்!! ஆனால் அமெரிக்க அரசின் அழிவு சக்தியை உணர்ந்து கொண்ட அவர் பல விஷயங்களை அரசுக்கு சொல்லாமல் மறைத்தே வைத்தார்!

ஆனால் உலக மக்கள் நலன் பெற வேண்டி சில (ரகசியமான ஹிந்து மத மந்திரங்கள் மூலம் அறிந்த) ஆராய்ச்சிகளை அவர் அமெரிக்க அரசிடம் தெரிவித்த போது அவர் அரசாலும் வியாபார நோக்கம் உள்ள கம்பெனிகளாலும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டார்!! அதில் ஒன்று விண்ணில் இருந்து மின்சக்தியை எளிமையான முறையில் பெறும் வழியும் அதன் மூலம் உலக மக்கள் அனைவருக்கும் இலவசமாகவே மின்சாரம் வழங்கும் முறையும்!! அது போன்ற விஷயங்களை நமது மத சாஸ்திரங்கள் மூலமே உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டும் உள்ளார்!!

அவருடைய ஆராய்சிகளுக்கு கொடுத்த பண உதவியை அமெரிக்க அரசும் நிறுவனங்களும் நிறுத்தி விட்டதால் பெருமளவில் தமது பணியை அவரால் தொடர முடியவில்லை!! அவருடைய 79 வயதில் மர்மமான முறையில் கார் ஒன்றால் மோதப்பட்டு விபத்துக்குள்ளானார்!! அதன் பின்னரும் சில ஆண்டுகள் உயிருடன் இருந்த அவர் 1943 ஆம் ஆண்டு 86 வயதில் மரணமடைந்தார்!! நமது மதம் இத்தகைய விஞ்ஞான ரகசியங்களைக் கொண்டது என்பதற்கு டெஸ்லா ஒரு உதாரணம்!!

‪#‎TREASURES_OF_HINDUISM‬
‪#‎Dhrona_charya‬



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator