Wednesday 6 August 2014

சனாதன தர்மத்தில், "யோக க்ஷேமம்" அனைத்து உலக நன்மையே"

எல்லையற்ற சனாதன தர்மத்தை ஏன் அந்நியர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை ?

இந்தியாவில் ஊடுறுவிய இரண்டு ஆப்ரகாமிய மதங்களும் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே வளர்ந்தவை. ஒரு இறைதூதரை பின்பற்றுபவை, ஒரே ஒரு புத்தகத்தை சார்ந்தவை, ஒரு பிரதேசத்தின் வாழ்வியல் முறைகளை மட்டுமே போதிப்பவை.

அடிப்படையிலேயே இவை தங்களுக்குள் பல வகையில் முரன்படுகின்றன. உலகின் 200 கோடி கிறிஸ்துவ‌ மக்கள் பின்பற்றுவதை மற்ற‌ 150 கோடி இஸ்லாமிய மக்கள் நம்புவதில்லை. 150 கோடி மக்கள் நம்புவதை 200 கோடி மக்கள் நம்புவதில்லை. இந்த மதங்களுக்குள்ளேயே பல்வேறு பிரிவுகள், பல்வேறு நம்பிக்கைகள் நடைமுறையில் இருக்கின்றன‌. ஆப்ரிக்காவிலும், அமெரிக்காவிலும், ஆசியாவிலும் நடைபெற்று வந்த பல ஆதி மதங்களை/நம்பிக்கைகளை அழித்து, வாளை பயன்படுத்தியும், வறுமையை பயன்படுத்தியும் இம்மதங்கள் நிறுவப்பட்டன. ஆனால் இன்று லட்சக்கணக்கான மக்கள் இந்த இரு மதங்களின் இடையே ஏற்படும் சண்டைகளுக்கு பலியாகிவிட்டனர், பலியாகி வருகின்றனர்.

ஏற்கனவே குறிப்பிட்டபடி, பாரதத்தில் ஒரு சித்தாந்தத்தை நிறுவ மாயாஜாலங்களோ, அற்புதங்களோ உதவாது. நம் பண்டைய பாரதத்தில் சைவம், வைனவம், பௌத்தம், ஜைனம் என சித்தாந்தங்கள் மோதிக் கொண்டதுண்டு. ஆனால் அந்த மோதல் மிகப் பெரும்பாலும் சித்தாந்த ரீதியாக இருக்குமே தவிர வன்முறையையும், வாழ்வின் பல இன்னல்களை பயன்படுத்தி மூளை சலவை செய்தும் மதம் மாற்றும் முயற்சியாக இருக்காது.

மதங்கள் என்பவை மனிதனை நெறிப்படுத்த பிறந்த‌வை என்றால் எதற்காக மனிதர்கள் அதற்காக சண்டையிட வேண்டும் ? இதன் அடிப்படைகளை ஆராய்ந்தோமானால் பல உண்மைகள் புரிய வரும்.

எந்த ஒரு மதம் வாளை பயன்படுத்தியும், வறுமையை பயன்படுத்தியும் வளர்ந்ததோ, அதனிடம் சகிப்புத் தன்மையை எதிர்ப்பார்க்க முடியாதல்லவா ? "அறிவால் அணுகாதே, நம்பிக்கை வை" என மக்களை மாக்களாய் அல்லவா மாற்றி விட்டன இம்மதங்கள் ? உலகம் முழுவதும் தன் மதமே பரவ வேண்டும் என போதிக்கின்றன இவ்விரு மதங்களும். சனாதன தர்ம‌மோ "உலகமே நம் குடும்பம், அனைத்தும் நன்றாக இருக்கட்டும்" என்கிறது. எத்தனை வேற்றுமை பாருங்கள் ?

சனாதன தர்மத்தில், "யோக க்ஷேமம்" என்று சொல்லப்படுகிற "அனைத்து உலக நன்மையே" ஒவ்வொரு வேள்வியின் நோக்கமாக உள்ளது. அது ஒவ்வொரு கோவிலில் கூறப்படும் மந்திரங்களிலும், யாகங்களிலும் கூட ஓங்கி ஒலிக்கிறது. அவ்வளவு ஏன், பெற்றோர்களுக்கு அமாவாசை மற்றும் முக்கிய காலங்களில் தர்ப்பணம் செய்யும் மந்திரத்தில் கூட, "எவருக்கெல்லாம் தாய், தந்தை, உறவினர்கள் மற்றும் யாருமே இல்லையோ அவர்கள் இந்த தர்பணத்தால் திருப்தி அடையட்டும்" என்கிற பரந்த எண்ணம் வெளிப்படுகிறது. ஒவ்வொருவரும் அனுதினமும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த‌ப்படும் "சந்தியா வந்தனம்" எனும் சடங்கில் கூட உலக நன்மையே பிரதானமாக‌ உள்ளது.

சனாதன தர்மம் மத, இனம், நிறம் மற்றும் தேசங்களை கடந்தது. அனைத்து மக்களையும் அது ஆராதிக்கின்றது. அனைவருக்குமாக அது திகழ்கிறது. 'பிரஹத் ஆரன்யக உபநிடத' வரிகளே அதற்கு சாட்சி.

சர்வே பவந்து சுகினஹ, சர்வே சந்து நிராமயஹ, சர்வே பத்ரானி பஷ்யந்து, மா கஸ்சித் துக்க-பாக் பவேத் !!

அனைவரும் ஆனந்தமாக இருக்கட்டும், அனைவரும் நோயில்லாமல் இருக்கட்டும், அனைவரும் பத்திரமாக இருக்கட்டும், அனைவரும் சிறிதும் துக்கமில்லாமல் இருக்கட்டும் என்கிற உலகலாவிய சிந்தனையை எடுத்துரைக்கிறது இது..



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator