Monday 18 August 2014

சோமவார விரதம்

சோமவார விரதம்
சோமவாரம் திங்கட்கிழமை திங்களும் (பிறை நிலாவும்) திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு மிகவும் உகந்தவை. ஆகவே இவனுக்குச் சோமசுந்தரன் என்ற ஒரு பெயரும் வழங்குகின்றது. கார்த்திகை மாதம், முதல் திங்கட்கிழமையன்று சோமவார விரதத்தை தொடங்க வேண்டும்.
தொடர்ந்து ஒவ்வொரு திங்களன்றும் விரதமிருப்பது சிறப்பாகும். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கலாம். அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் விரதமிருக்கலாம். அல்லது மூன்றாண்டுகள் விரதம் காக்கலாம். அல்லது ஓராண்டு விரதமிருந்தாலும் போதும்.
அல்லது கார்த்திகை மாத சோமவாரம் முழுவதும் விரதமிருக்கவேண்டும். ஒருநாள் முழுவதும் விரதமிருக்க முடியாதவர்கள் இரவு ஒருபொழுது மட்டும் எளிய உணவுகளை உண்ண வேண்டும்.
சோம வார விரத மகிமைகள்
தட்சாதிபதியின் புதல்வியர்களான 27 நட்சத்திரப் பெண்களையும் மணந்து கொண்ட சோமன் என்னும் சந்திரன். அவர்களுள் - ரோகினியை மட்டுமே மிகப்பற்றுதல் கொண்டிருந்தான். இதுகண்டு மற்றவர்கள் தங்கள் தந்தையிடம் முறையிட்டார்கள். தட்சாதிபதியும் சந்திரனை அழைத்து புத்திமதிகள் கூறினார். ஆனால் சந்திரன் அவரது அறிவுரைகளை ஏற்காததால் அவர் சந்திரனை கடுமையாக சபித்துவிட்டார். இதனால் பெரும் வருத்த முற்ற சந்திரன் முனிவர்களின் ஆலோசனைப்படி சிவபெருமானைக் குறித்து சோமவார விரதத்தை கடைப்பிடித்துத்தான் சிவனுக்கு மிகவும் பிரியமுள்ளவன் ஆனான். இந்த சோமவார விரத்தத்தின் பலனால் சந்திரன் பிறைமுடியாய் ஈசனின் தலையில் அமரும் பாக்கியம் பெற்றான் என புராணங்கள் போற்றுகின்றன. மலும் வசிஷ்ட முனிவர் இந்த விரதத்தை கடைப்பிடித்துத்தான் அருந்ததியை மனைவியாக அடைந்தார். திருமணங்களில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு ஒன்று நடைபெறுவதைப் பார்த்திருப்பீர்கள். அந்தக் கற்புக்கரசி அருந்ததிதான் வசிஷ்டர் பத்தினி. சிவபெருமானே கூறிய விரத நியதிகள் சோமவார விரதமிருப்பவர்கள் எனக்குப் பிடித்தவர்கள். என்னிடத்தில் அவர்களுக்கு இடம் கொடுப்பேன் என்று சிவபெருமான் கூறியுள்ளார். ஒரு சமயம் இந்த விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது என்று பார்வதி சிவனிடம் கேட்டார். அதற்கு சிவன், இந்த விரத காலத்தில் காலையில் விடிவதற்கு முன் எழுந்து நீராடி தினசரி கடமைகளை முடிக்கவேண்டும். அன்றாடம் தவறாது சிவ பூஜை செய்யும் ஒரு அந்தணரையும் அவரது மனைவியையும் அழைத்து வந்து அவர்களை சிவபார்வதியாகப் பாவித்து அவர்களுக்கு இயன்ற அளவு தானம் செய்யவேண்டும். அன்று பகல் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து முன் இரவில் ஒருவேளை உணவு மட்டும் அருந்தி சிவ சிந்தனையுடன் இருக்கவேண்டும். வீட்டில் விரிவாக பூஜை செய்ய வேண்டும். இயலாதவர்கள் சிவன் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்வதுடன், அந்தணர்களுக்கும் அடியார்களுக்கும் அன்னதானம் செய்யவேண்டும் என்று கூறினார். இதன்படியே இன்றும் இவ்விரதம் கடைபிடிக்கப் பெற்று வருகிறது. விரதத்தை ஆண்களும் கடைப்பிடித்து நல்ல வாழ்க்கைத் துணையைப் பெறலாம். சோம வாரத்தில் திருக்குற்றாலத்தில் நீராடி குற்றால நாதரையும், குழல்வாய்மொழி அம்மையாரையும் தரிசனம் செய்வது சிறப்பு, சுசிந்திரத்தில் தாணுமாலய சுவாமியை வழிபடுவதும் நல்லது.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator