ஒரு விடயத்தில் கவனமாயிருப்பின் அதன் வழியில் எல்லாம் சரி வரும்.
எவ்வாறாயின் சிந்தனை - வெறுப்பற்ற சிந்தனை. ஒவ்வொரு விவகாரங்களிலும் உங்கள் பொறுமையை சோதிப்பவர்களிடம் சகிப்புத்தன்மையோடு நடவுங்கள். அவர்களது தானத்தில் இருந்து ஏன் இப்படி நடக்கிறார்கள் என்று சிந்தியுங்கள்.
அவர்களது வன்மையை உங்கள் தன்மையால் மாற்றாவிடின் யார் மாற்றுவார் என சிந்தியுங்கள்.
எத்தனையோ விடயங்களில் நட்டங்களை சந்திக்கிறோம். ஒருவரது தன்மையை மாற்ற சிறிது நட்டத்தை சந்திப்பின் கவலைப்படாதீர்.
அது ஒரு வட்டம் போல உங்கள் சகிப்புத்தன்மை அவரில் ஒரு மாற்றத்தை கொண்டுவர அவர் இன்னொருவருக்கு மாற்றத்தை ஏற்படுத்துவார்,
தொடர்ச்சியான அன்பும் விட்டுக்கொடுப்புமே இம்மானிட உய்வுக்கான வட்டத்தை தன்னலமின்றி பூர்த்தி செய்யும்.
தன்னலமற்ற பண்பை வளர்த்தல் கடினம் அதனை உருவாக்க சிறிது சிறிதாக மாற்றும் தன்னல கருத்துகளை யோசித்து கொள்ளுங்கள்.
உ+ம்: நான் இன்று இந்த வயதான பெண்மணிக்கு எனது பேரூந்து ஆசனத்தை விட்டுக் கொடுக்கிறேன். எனது தாயார் ஏறும் போதும் யாராவது விட்டுக்கொடுப்பர்.
இதற்கு அடுத்த கட்டமாக என் வாழ்வில் எனை நம்பி இருப்போருக்கு தேவையானதை செய்தேன். சமூகத்திற்கு எதை செயப்போகிறேன் என தீர்மானித்து நட்டக்கணக்கு எழுதி எதனையும் எதிர்பாராது செய்யுங்கள்.
ஒரு கட்டத்தில் உங்கள் வாழ்வின் மீது உங்களுக்கே பக்தி ஏற்படும் - நிச்சயமாக இறைவா எனை நீ நான் செய்த அல்லது எனை அறியாது செய்த பாவங்களின் பிரகாரம் தண்டிக்க இயலாது அதனை விடவும் நான் அனைவருக்கும் நன்மையே செய்தேன் என.
உங்கள் நற்காரிய கர்மங்களை தீர்மானியுங்கள், கருணையோடு இருங்கள்.
இறைவன் கருணையே உருவானவன் உங்களை காத்தருள்வான்.
சிவாய நம ஓம்
No comments:
Post a Comment