176645 கோடி என்பது எவ்வளவு பெரிய தொகை ? அவ்வளவு பெரிய நஷ்டம் தேசத்திற்கு நடந்திருக்கின்றது என்று படிக்காத ஒரு குப்புசாமியோ, தங்கசாமியோ சொல்லவில்லை. இந்திய அரசாங்கத்தின் மிக உயர்ந்த கணக்காளர் பதவியில் இருந்த "ஆடிட்டர் ஜெனரல்" கூறியிருந்தார்.
அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகையால் வரையறுக்கப்பட்ட உலகின் பத்து மிக மோசமான அதிகார துஷ்பிரயோகங்களில், 2ஜி ஊழல் இரண்டாம் இடத்தை பிடித்தது.
எப்படி இது சாத்தியமானது ? இது நடந்து முடியும் வரை எப்படி யாரும் கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்று நாம் யோசிக்கலாம். ஊழலை விஞ்ஞான ரீதியாக மிகத் தெள்ளத் தெளிவாக செய்வதில் வல்லவர்களான திமுக கூடாரத்திற்கு எதுவும் சாத்தியமே. இதற்காக இவர்கள் முன்கூட்டியே மிகப்பெரிய வகையில் ஒரு சதியாலோசனை செய்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. தேசத்தை இப்படிக் கூட கொள்ளை அடிக்க முடியுமா என்று மக்கள் வியந்து பார்க்கும் வகையில் கொள்ளை அடித்தார்கள்.
காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் போதே அதில் மிகப்பெரும் கூட்டனி கட்சியான திமுக "டெலிகாம் துறை" தங்களுக்கு வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தது. இந்தியாவில் மொபைல் தொலைபேசிகள் மிகப் பெரிய அளவில் பரவ தொடங்கிய காலம் என்பதால், டெலிகாம் கம்பெனிகள் அலைகற்றைகளை எந்த விலைக்கும் வாங்க தயாராக இருந்தன. இதை மிகச் சிறப்பாக கணித்திருந்தது திமுக கூடாரம், நாட்டை சுரண்டுவதில் இவர்களுக்கு இருக்கும் அனுபவம் உலகில் வேறு எந்த கட்சிக்கும் இருக்க முடியாதல்லவா ?
வாஜ்பாய் ஆட்சி காலத்தில், அலைகற்றைகளை ஒதுக்குவதற்கு "முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை" என்கிற கொள்கையை வைத்திருந்தது. ஆனால் மே 2007ல் பதவிக்கு வந்த நம் ஊழல் ராசாவோ அதை "முதலில் நிபந்தனைகளை பூர்த்தி செய்பவர்களுக்கு முன்னுரிமை" என்று சாதுர்யமாக மாற்றினார். இதனால் முதலில் வந்திருந்தாலும் கூட நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்று பல குழுமங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கப்படவில்லை. அதோடு அதிக கால அவகாசம் கொடுக்காமல் உடனுக்குடன் "கட் ஆஃப்" தேதியை அறிவித்தார் ராசா. அப்படியும் மொத்தம் 575 வின்னப்பங்கள் வந்து சேர்ந்தன அவை 46 குழுமங்களை சேர்ந்தவை. அவற்றில் ராசாவை "கவனித்த" குழுமங்களுக்கு மட்டுமே அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டன. அதுவும் மதியம் 3.30 மணியிலிருந்து 4.30 மணிக்குள் (வெறும் ஒரு மணி நேரத்தில்) வின்னப்பித்தவர்களுக்கு மட்டுமே அலைகற்றைகள் ஒதுக்கப்பட்டன.
இதை குறித்து அடுத்த பாகத்தில் மேலும் பார்ப்போம்.
படத்தில் கைது செய்யப்படும் ஆ ராசா மற்றும் அவரின் சொகுசு பங்களா.
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment