Tuesday 18 February 2014

"ஒரு பஞ்சாங்க சர்ச்சை"

"ஒரு பஞ்சாங்க சர்ச்சை"

சொன்னவர்; நரசிம்மன் (ஸ்ரீமடம் பஞ்சாங்கக் கணிதக்ஞர்)
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
நன்றி; வானதி பதிப்பகம்

(இரண்டு சம்பவங்கள்)

சம்பவம்-1

1963-64-ம் ஆண்டு மே மாதம்.

விஜயவாடா செல்லும் வழியில் ஓங்கோல் தாண்டி
ஒரு கிராமம். கோடை வெயில் சுட்டெரித்தது.

நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்,
எனக்கு நினைவு தெரிந்து அப்போதுதான் என் அப்பா-
வுடன் சென்று பெரியவாளைத் தரிசித்தேன். முகாம்
சிப்பந்திகள்,பக்தர்களுக்கு பத்து நிமிடங்களுக்கு
ஒருமுறை பழ ரசம் கொண்டுவந்து கொடுத்தார்கள்.

மறுநாள் காலை ஐந்தரை மணியிருக்கும்.பெரியவாளை
அப்பாவுடன் நின்று தரிசித்துக் கொண்டேன்.
என்னைப் பற்றி விசாரித்தார்கள்.
"இன்று என்ன நட்சத்திரம்? என்று என்னைக் கேட்டார்கள்.
"தெரியாது" என்றேன்."கணக்கு போடுவாயா?"என்றார்கள்.
நான் தயங்கினேன்.அவர்களே பஞ்சாங்க வாய்ப்பாட்டு 
கணக்கு ஒன்று கொடுத்தார்கள்.அப்பாவும் கொஞ்சம்
உதவினார்.ஒரு நிமிஷம்தான் வித்தியாசம்.
நட்சத்திரம் சொல்லிவிட்டேன்.

"நீ படித்து என்ன செய்யப்போறே?"

"வாத்தியார் வேலைக்குப் போக ஆசை."

"ஜோஸ்யம் படி. அந்தத் தொழிலே போதும்,
காசு டிமாண்டு பண்ணாதே.அது தானாக வரும்.
க்ஷேமமாக இருப்பாய்."

இப்போது பி.எஸ்சி.,பி.டி., படித்து பட்டம்
பெற்றிருக்கிறேன். ஜோஸ்யம் மட்டும்தான் தொழில்,
ஒரு குறைவும் இல்லை.நன்றாக இருக்கிறேன்.
எல்லாம் அவர்களின் அருள்.

சம்பவம்-2

காஞ்சிபுரம் அருகில் ஓரிருக்கை கிராமத்தில்
பெரியவாள் சந்நிதியில் பஞ்சாங்க மீட்டிங் ஒன்று
நடந்தது. கிரகணவிஷயமாக சர்ச்சை.மாலை 4-30 மணி
வழகம்போல் அப்பாவோடு நானும் சென்று சர்ச்சையில்
கலந்துகொண்டேன்.அந்த வருஷம் சூரிய கிரகணம்
தெரியாது என்று ஸ்ரீ மடத்துப் பஞ்சாங்கத்தில்
போட்டிருந்தோம்.மற்றப் பஞ்சாங்கக்காரர்கள்
'தெரியும்' என்று போட்டிருந்தார்கள்.

'கிருஷ்ண ஐயங்காரே ! ஜோஸ்யரே ! குப்புஸ்வாமி
சிஷ்யரே என்றெல்லாம் பலவாறு பெரியவர்கள்
அப்பாவை அழைப்பார்கள்.

"நீ எப்படிப் போட்டாய்? என்ன ஆதாரம்?
கணக்குப் போடு"என்று அப்பாவைக் கேட்டார்கள்.

அப்போது கம்ப்யூட்டர் வந்த சமயம். மற்றவர்கள்
கம்ப்யூட்டரில் பார்த்து 'கிரகணம் தெரியும்'என்றார்கள்.
நாங்கள் கணக்குப் போட்டு,
"ஒரு நிமிஷம்தான் கிரகணம். அது அநுஷ்டானத்துக்கும்
போதாது; கண்ணுக்கும் தெரியாது.அதனால் கிரகணம்
கிடையாது" என்று தெரிவித்தோம்.அதேபோல
அந்த கிரகணம் நம் நாட்டில் தெரியவில்லை.

மகாபெரியவாளுக்கு, ஜோஸ்யர்களிடம் பரிவும்,பாசமும்
உண்டு. 'தைவக்ஞர்கள்' என்று கௌரவிப்பார்கள்.

நாள்தோறும் பஞ்சாங்க படனத்தை வற்புறுத்துவார்கள்.
கிரகங்களின் கதியை அறிந்துகொள்வது வாழ்க்கைக்கு
இன்றியமையாதது என்பார்கள்.

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator