Monday 7 July 2014

ரயில்வே பட்ஜெட்டில் .........................




ரயில்வே பட்ஜெட்டில் புதியதாக ஏதும் வசதிகள் செய்யும் முன் பின் வரும் .".கடுமையான 
துர்நாற்றம் அடித்துவரும்" நிலைமைதனை சரி செய்தாலே ....மேலை நாட்டு ரயில்களில் பயணம் 
செய்வது போல் இருக்கும். 

1) கழிவறைகளில் தொடர்ந்து தண்ணீர் இருக்க வேண்டும்.

2) கழிவறைகளில் துர்நாற்றம் தாங்காமல் மூக்கை பிடித்துக்கொண்டே மலஜலம் கழிக்க வேண்டி 
உள்ளது.

3) கழிவறைக்குள்ளும் புகைப்பது தடை செய்யப்பட வேண்டும். (இதற்கு மனிதர்கள் திருந்த 
வேண்டும்.)

4) ஜன்னல்கதவுகள் எளிதாக திறந்து மூடும்படி இருக்க வேண்டும். இதற்கு சாளரங்களில் குப்பை 
சேராமல் பராமரிக்க வேண்டும். 

5) மிக முக்கியமாக சன்னக் கதவுகள் மழை காலங்களில் உள்ளே தண்ணீர் கசிவு வராதபடி 
அமைக்கப்பட்ட வேண்டும். 

6) முன்பதிவு செய்து பயணம் செய்யும் பெட்டிகளில் ......முன் பதிவு இன்றி கும்பல் கும்பலாக 
பயணிகளுக்கு இடைஞ்சலாக நின்று ஊறு விளைவித்து வருவது வழக்கமாகவே உள்ளது. 
கடைசியில் ரயில்வே அதிகாரிகளை கவனித்து விட்டு .....பயணம் தொடரும். முன் பதிவு 
பெட்டிகளுக்கும் பொது பெட்டிகளுக்கும் வித்தியாசம் இல்லாமலே போய் விடும்....

7) மிக மிக முக்யமான கோரிக்கை.:
ரயில்களில் பிச்சை எடுப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை. அது எப்படி அய்யா 
விரைவு வண்டிகளில் கூட சாதாரணமாக ஏறி விடுகிறார்கள் சமூக இடைஞ்சல்கள். இவர்களை 
எந்த ரயில்வே அதிகாரியும் கண்டு கொள்வதே இல்லை. (கவனிப்பு இருக்குமோ என்னவோ)

புற நகர் ரயில்களில் பயணிகளே அவஸ்தையுடன் பயணம் செய்யும் போது கூட்டம் கூட்டாமாக டிசைன் 
பயணிகளை டிசைன் பிச்சைக்காரர்கள் ஏறுவதை கண்டிப்பாக தவிர்க்க ஏதாவது செய்தே ஆக 
வேண்டும். 

பயணிகள் ஓடும் வண்டியில் கண்டிப்பாக பிச்சை இடும் வழக்கத்தை தவிர்த்தால் பிச்சைக்காரர்கள் ஏற 
மாட்டார்கள். 
இதற்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 

ஓடும் வண்டியில் பிச்சை கொடுக்கவே மாட்டோம். இறங்கியபின் ரயில் நிலையங்களில் வாசல்களில் 
கொத்து தொலையலாமே ..என்று வேண்டும். இது மிக வலுவான முறை. யாரும் கொடுக்க 
மாட்டார்கள் என்று தீர்மானமாக தெரிந்துவிட்டால் பிச்சைக்கும்பல் ஏறவே ஏறாது. 

பயணிகள் நிற்கவே பரிதாபமான நிலை. இதில் இந்த பிச்சை கும்பல் ஏறி சர்க்கஸ் 
செய்வது...அய்யய்யோ 

.மைக் வைத்து பிச்சை எடுப்பது இவை சர்வ சாதாரணமாகி விட்டது. பயணிகள் காசை கொட்டி 
கொடுத்து பயணம் செய்கையில் இவை எல்லாம் தேவையா. உண்மையிலேயே ரயில்வே நிர்வ்பாகம் 
கையால் .ஆகாதவர்களா..

திருநங்கைகளின் தொல்லை வேறு.....ஐயோ தலையில் அடித்துக்கொள்ளவேண்டியுள்ளது. 
ரயில்வே காவல்துறை ஏனோ இதை கண்டுகொள்வதே இல்லை. திருநங்கைகள் வேறு தட்டி தட்டி காசு 
கேட்டு அதிகாரம் செய்வது. 

மற்றும் ஒரு கொடுமை :
பிளாட்பாரங்களில் விளம்பர இரைச்சல் தாங்க முடிய வில்லை. ரயில் வருகை பற்றிய குறிப்புகள் கூட 
சரியாக காதில் விழுவது இல்லை. இந்த இரைச்சல் பிசாசு தேவைதானா.....பயணத்தின் துவக்கமே 
பரிதாபமாக அல்லவோ ஆகிவிடுகின்றது கோவை ஈரோடு ரயில் நிலையங்களில் போய் 
பாருங்கள்.......ஏதோ துணி கம்பனி விளம்பரமாம் ....சல்யூட் சல்யூட் என்று துவங்கும். ஐயோ 
ஐயோ காதுகளின் ஜவ்வு கிழிந்துவிடும். ரயில் நிலையத்திற்குள் வந்தால் மொத்தமாக நிம்மதியே போய் 
விடும்

காசை கொட்டி கொடுaத்து பயணம் செய்யும் போது இது போன்ற கொடுமைகள் எதற்கு ..இதை 
நிர்வாகம் சரி செய்யவே முடியாதா

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator