Monday 28 July 2014

"மனிதர்களாகப் பிறந்து, ஆன்மீக உலகில் மிக உயர்ந்த நிலை அடைந்த மூன்று பேர்களுக்கு தேர்த்திருவிழா இன்றும் நடக்கிறது.யார் அந்த மூன்று பேர்.?"

"மனிதர்களாகப் பிறந்து, ஆன்மீக உலகில் மிக உயர்ந்த நிலை
அடைந்த மூன்று பேர்களுக்கு தேர்த்திருவிழா இன்றும்
நடக்கிறது.யார் அந்த மூன்று பேர்.?"

சொன்னவர்; இராசு-சென்னை-61(சுப்ரமண்யன்)
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

அப்போது நான் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகத்தில்
ரெவின்யூ இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்தேன்.

ஒரு நாள் நான் அலுவலகத்தில் வேலைசெய்து
கொண்டிருந்த போது தாசில்தார் கூப்பிடுவதாக என்
உதவியாளர் சொல்லவே, நான் உள்ளே போனேன்.

"சுப்ரமண்யன்.! இன்று அறநிலைத் துறை ஆணையர்
காஞ்சி வருகிறார். அவர் நம்ம கலெக்டரின் நண்பரும்
கூட. எனவே காஞ்சிப் பெரியவரை, அவர் தரிசிக்க
நீங்கள் ஆவன செய்ய வேண்டும்."

காஞ்சி மடத்தின் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு,
குறிப்பிட்ட நேரத்தில், அறநிலைத்துறை ஆணையர்
(ஐ.ஏ.எஸ்.அலுவலர்) பரமாசார்யார் அவர்களை வணங்கி
அமர்ந்தார். ஆணையருடன், அறநிலைத்துறை சார்பு
அதிகாரிகள் 15 பேரும் உடன் வணங்கி உட்கார்ந்தனர்.
நான் ஒரு மூலையில் நின்று கொண்டேன்.

முகமலர்ச்சியுடன் ஆணையருடன் பரமாசார்யார் பேசத்
தொடங்கினார். அவர்கள் உரையாடல், சிறுசிறு 
கோவில்களுக்கு திருப்பணிகள் செய்ய வேண்டிய
அவசியம் குறித்தும், கும்பாபிஷேகம் செய்யப்படவேண்டிய
சில பெரிய கோவில்கள் குறித்தும் சென்று கொண்டிருந்தது.

ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகளுக்கு பொதுவாக ஒரு வழக்கம்
உண்டு. கூட்டத்தில் சிலரை நோக்கி, சமய சம்பந்தப்பட்ட
கேள்விகளை எழுப்பி, தக்க பதில் கோருவார். அவர்கள்
திணறும் சமயத்தில், அதற்கான பதிலையும் தானே கூறி
மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுவார். இப்படிக் கேள்வி கேட்டு
பதில் சொல்வதின் மூலம் பல நல்ல விஷயங்கள்
கேட்போரின் மனதில் என்றும் மறக்காது நிலைத்து நிற்கும்
என்பதாகவும் பெரியவாளின் நோக்கம் இருக்கலாம்.

அன்றும் ஒரு கேள்வி எழுப்பினார்,காஞ்சி ஸ்வாமிகள்.
அதுவும் அந்த ஆணையரிடமே.!

"உங்களால் சொல்ல முடியுமா.?

"மனிதர்களாகப் பிறந்து, ஆன்மீக உலகில் மிக உயர்ந்த நிலை
அடைந்த மூன்று பேர்களுக்கு தேர்த்திருவிழா இன்றும்
நடக்கிறது.யார் அந்த மூன்று பேர்.?"

இந்தக் கேள்வி ஆணையரிடம் கேட்கப்பட்டாலும்,
நான் உட்பட மற்றவர்களும் இந்தக் கேள்விக்கான விடையை
கூற மூளையைக் கசக்கிக் கொண்டோம். பொதுவாக 
தெய்வங்களுக்குத் தான் தேர்த்திருவிழா நடைபெறும்.
ஆனால் பெரியவா, மனித குலத்தில் பிறந்தவர்களைப்
பற்றியல்லவா, கேட்கிறார்கள்.?

எங்கள் நிலையைப் பார்த்து முறுவல் புரிந்த பெரியவாள்
"இன்னும் அஞ்சு நிமிஷம் தரேன் யார் வேணுமானாலும்
இதற்குப் பதில் சொல்லலாம்."

அஞ்சு நிமிஷம் சென்றது.யாருக்கும் பதில் கூறத் தெரியவில்லை.

"பரவாயில்லை.! யாரும் கஷ்டப்படுத்திக்க வேண்டாம்.
நானே சொல்றேன்.!"

"(1) ஸ்ரீவில்லிப்புத்தூரில் சூடிக் கொடுத்த நாச்சியார் எனப் பெயர்
.......பெற்ற ஆண்டாளுக்குத் தேரும்,
(2) வைணவ சமயத் தலைவர் ஸ்ரீ ராமானுஜருக்கு
.....ஸ்ரீபெரும்புதூரில் தேரும்,
(3) ஸ்ரீ மாணிக்கவாசகருக்கு திருப்பெருந்துறையில்
......தேரும் உள்ளன.

'வருஷா வருஷம் தேர்த்திருவிழா இவர்களுக்கு சிறப்பாக
நடைபெற்று வருகிறது. இது போல சின்ன விஷயங்களும்,
உங்களுக்கு தெரிஞ்சா நல்லது.அதனால்தான் கேட்டேன்"
என்று கூறி குழந்தை போல் சிரித்தார்.

அச்சிரிப்பு இன்னும் என் நினைவில் பசுமரத்தாணி போல்
நின்றுள்ளது.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator