Tuesday 4 November 2014

"ஆமா, இங்கே இப்போ வந்திருக்கியே,........ஏதாவது விசேஷம் இல்லாம நீ வர மாட்டியே?........" சிரித்தார்"




ஒரு இளைஞன் பெரியவாளை தரிசனம் பண்ண வந்தான். அவன் முன்பே பெரியவாளுக்கு பரிச்சியம் ஆனதால், "ஆமா, இங்கே இப்போ வந்திருக்கியே,........ஏதாவது விசேஷம் இல்லாம நீ வர மாட்டியே?........" சிரித்தார்.  "ஆமா பெரியவா. எனக்கு பெரிய சந்தேகம். அதை நிவர்த்தி பண்ணிண்டு போகலாம்னு வந்தேன்"  "அப்டியா! சொல்லு சொல்லு. நோக்கு அப்படி என்ன சந்தேகம்?"  "மந்த்ர ஜபம் பத்தின சந்தேகம். எனக்கு மைசூர் யஞ்ய நாராயண கனபாடிகள் மந்த்ரோபதேசம் பண்ணியிருக்கார். ............"  "பேஷ்! பேஷ்! ரொம்ப வாசிச்சவா. என்ன மந்த்ரமோ?" என்றவர் உடனே "இரு இரு........மந்த்ரம்...ங்கறது ரகஸ்யமா ஒன்கிட்டதான் இருக்கணும். எந்த தேவதைபரமானதுன்னு மட்டும் சொல்லு."  "ஹனுமத் உபாசனா பரமான மூல மந்த்ரம்"  "சரி. அதுல நோக்கு நிவர்த்தி பண்ணிக்க என்ன இருக்கு?"  "இந்த மந்த்ரம் உபதேசமாயி ஏழு வருஷமா, கடுமையா விதிப்படி ஜபிச்சுண்டு வரேன். ஆனா ஒண்ணுமே தெரியலியே பெரியவா"  "ஒண்ணுமே தெரியலேன்னா?"  "அந்த மந்த்ரம் நேக்கு ஸித்தியாயிடுத்தா? இல்லியா?....ங்கறது தெரியலியே பெரியவா" என்றான் வருத்தமாக.  "மந்த்ர ஸித்தி..ங்கறதை அனுபவ பூர்வமாத்தான் தெரிஞ்சுக்க முடியும். பல வருஷங்களுக்கு முன்னே, ஸ்ருங்கேரி சாரதா பீடத்ல, ந்ருஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள் ன்னு ஒரு பெரிய மகான் பீடாதிபதியா இருந்தார். ஒருநாள் ஒரு மடத்து சிஷ்யன், இப்போ நீ கேட்ட கேள்வி மாதிரி அவரை கேட்டான். அவர் சொன்னார் "நீ பாட்டுக்கு ஆத்மார்த்தமா ஜபத்தை விடாம பண்ணிண்டு வா. ஸித்தி பலனை தேவதையே அனுக்கிரகம் பண்ணும்..னார். அவனோ விடறதா இல்லை. ஸ்வாமிகள் சொன்னார், "தெனமும் நீ ஜபம் பண்ண ஆரம்பிக்கறச்சே ஒரு மரப் பலகையை போட்டுண்டு, அதுக்கு மேல நெறைய நெல்லைப் பரப்பிடு. அதுக்கு மேல ஒரு வஸ்த்ரத்தை போட்டுண்டு அதுமேல ஒக்காந்துண்டு ஜபம் பண்ணு. என்னிக்கு நீ ஜபம் பண்ணறச்சே, அந்த நெல்லெல்லாம் தானாப் பொரியறதோ.........அன்னிக்கு ஒன் மந்த்ரம் ஸித்தி ஆயிடுத்துன்னு அர்த்தம்" ன்னுட்டார்.  சிஷ்யனுக்கு சந்தேகம்.......... இது சாத்தியமா? மெல்ல ஸ்ருங்கேரி பெரியவாளையே அதை நிரூபிக்க முடியுமா?..ன்னு ரொம்ப தாழ்மையா கேட்டான். ஒரே கூட்டம் கூடிடுத்து! பெரியவாளும் ஒடனே மணையைப் போட்டு நெல்லைப் பரப்பி ஒக்காந்து ஜபம் பண்ண ஆரம்பிச்சாளோ, இல்லியோ, அடுத்த நிமிஷம், "பொர பொரன்னு" நெல் பொரி சத்தம். லேசா பொகையவும் ஆரம்பிச்சது. பெரியவா வஸ்த்ரத்தை எடுத்துட்டு பாத்தா!....... வெள்ளவெள்ளேர்னு நெல்லுப் பொரி!  சிஷ்யன் அழுதுண்டே ஸ்வாமிகள் பாதத்ல விழுந்தான்..........." என்று கூறி முடித்தார் பெரியவா.  "பெரியவா..........நீங்க...." ஹனுமத் உபாசகன் இழுத்தான்.  "என்ன? பெரியவா.........நீங்க அந்த மாதிரி பலகைலே நெல்லைப் பரப்பி ஒக்காந்து ஜபம் பண்ணி பொரிச்சுக் காட்டறேளா..ன்னு கேக்கப் போறியா?" சிரித்தார்.  "இது போறும் பெரியவா. ஒங்க அனுக்கிரகம் இருந்தா அது ஒண்ணே போறும்" சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துவிட்டு விடைபெற்றான்.
ஒரு இளைஞன் பெரியவாளை தரிசனம் பண்ண வந்தான். அவன் முன்பே பெரியவாளுக்கு பரிச்சியம் ஆனதால், "ஆமா, இங்கே இப்போ வந்திருக்கியே,........ஏதாவது விசேஷம் இல்லாம நீ வர மாட்டியே?........" சிரித்தார்"
ஆமா பெரியவா. எனக்கு பெரிய சந்தேகம். அதை நிவர்த்தி பண்ணிண்டு போகலாம்னு வந்தேன்"

"அப்டியா! சொல்லு சொல்லு. நோக்கு அப்படி என்ன சந்தேகம்?"
"மந்த்ர ஜபம் பத்தின சந்தேகம். எனக்கு மைசூர் யஞ்ய நாராயண கனபாடிகள் மந்த்ரோபதேசம் பண்ணியிருக்கார். ............"
"பேஷ்! பேஷ்! ரொம்ப வாசிச்சவா. என்ன மந்த்ரமோ?" என்றவர் உடனே "இரு இரு........மந்த்ரம்...ங்கறது ரகஸ்யமா ஒன்கிட்டதான் இருக்கணும். எந்த தேவதைபரமானதுன்னு மட்டும் சொல்லு."
"ஹனுமத் உபாசனா பரமான மூல மந்த்ரம்"
"சரி. அதுல நோக்கு நிவர்த்தி பண்ணிக்க என்ன இருக்கு?"
"இந்த மந்த்ரம் உபதேசமாயி ஏழு வருஷமா, கடுமையா விதிப்படி ஜபிச்சுண்டு வரேன். ஆனா ஒண்ணுமே தெரியலியே பெரியவா"
"ஒண்ணுமே தெரியலேன்னா?"
"அந்த மந்த்ரம் நேக்கு ஸித்தியாயிடுத்தா? இல்லியா?....ங்கறது தெரியலியே பெரியவா" என்றான் வருத்தமாக.
"மந்த்ர ஸித்தி..ங்கறதை அனுபவ பூர்வமாத்தான் தெரிஞ்சுக்க முடியும். பல வருஷங்களுக்கு முன்னே, ஸ்ருங்கேரி சாரதா பீடத்ல, ந்ருஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள் ன்னு ஒரு பெரிய மகான் பீடாதிபதியா இருந்தார். ஒருநாள் ஒரு மடத்து சிஷ்யன், இப்போ நீ கேட்ட கேள்வி மாதிரி அவரை கேட்டான். அவர் சொன்னார் "நீ பாட்டுக்கு ஆத்மார்த்தமா ஜபத்தை விடாம பண்ணிண்டு வா. ஸித்தி பலனை தேவதையே அனுக்கிரகம் பண்ணும்..னார். அவனோ விடறதா இல்லை. ஸ்வாமிகள் சொன்னார், "தெனமும் நீ ஜபம் பண்ண ஆரம்பிக்கறச்சே ஒரு மரப் பலகையை போட்டுண்டு, அதுக்கு மேல நெறைய நெல்லைப் பரப்பிடு. அதுக்கு மேல ஒரு வஸ்த்ரத்தை போட்டுண்டு அதுமேல ஒக்காந்துண்டு ஜபம் பண்ணு. என்னிக்கு நீ ஜபம் பண்ணறச்சே, அந்த நெல்லெல்லாம் தானாப் பொரியறதோ.........அன்னிக்கு ஒன் மந்த்ரம் ஸித்தி ஆயிடுத்துன்னு அர்த்தம்" ன்னுட்டார்.
சிஷ்யனுக்கு சந்தேகம்.......... இது சாத்தியமா? மெல்ல ஸ்ருங்கேரி பெரியவாளையே அதை நிரூபிக்க முடியுமா?..ன்னு ரொம்ப தாழ்மையா கேட்டான். ஒரே கூட்டம் கூடிடுத்து! பெரியவாளும் ஒடனே மணையைப் போட்டு நெல்லைப் பரப்பி ஒக்காந்து ஜபம் பண்ண ஆரம்பிச்சாளோ, இல்லியோ, அடுத்த நிமிஷம், "பொர பொரன்னு" நெல் பொரி சத்தம். லேசா பொகையவும் ஆரம்பிச்சது. பெரியவா வஸ்த்ரத்தை எடுத்துட்டு பாத்தா!....... வெள்ளவெள்ளேர்னு நெல்லுப் பொரி!
சிஷ்யன் அழுதுண்டே ஸ்வாமிகள் பாதத்ல விழுந்தான்..........." என்று கூறி முடித்தார் பெரியவா.
"பெரியவா..........நீங்க...." ஹனுமத் உபாசகன் இழுத்தான்.
"என்ன? பெரியவா.........நீங்க அந்த மாதிரி பலகைலே நெல்லைப் பரப்பி ஒக்காந்து ஜபம் பண்ணி பொரிச்சுக் காட்டறேளா..ன்னு கேக்கப் போறியா?" சிரித்தார்.
"இது போறும் பெரியவா. ஒங்க அனுக்கிரகம் இருந்தா அது ஒண்ணே போறும்" சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துவிட்டு விடைபெற்றான்.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator