Saturday 5 July 2014

நீரிழிவு நோய்க்கு இயற்கை மருந்துகளும், உணவும் (மற்றவர்களும் பயன் பெற ஷேர் பண்ணுங்கள்)

நீரிழிவு நோய்க்கு இயற்கை மருந்துகளும், உணவும் 
(மற்றவர்களும் பயன் பெற ஷேர் பண்ணுங்கள்)

நீரிழிவு நோய் ஆட்கொல்லி நோய் இது குணமாக, கீழ்க் காணும் இயற்கை மருந்துகளைப் (பக்க விளைவு இல்லாத ) பயன்படுத்திக் குணம் பெறலாம்.

அத்திமரப் பட்டையின் பொடி அரை அவுன்சுடன் பாகற்காய்ச் சாறு கலந்து சாப்பிடலாம்.

இரண்டு தேக்கரண்டி திரிபலா சுரணத்தை இரவு படுக்குமுன் சாப்பிட்டுத் தண்ணீர் அருந்தலாம்.

இரவு ஒரு கோப்பை நீரில் சிறிதளவு வெந்தயம் ஊறப்போட்டு, காலையில்,வெந்தயம் ஊறிய நீரைக் குடிக்கவும் குணம் கிட்டும்.

50 மி.லி. சீந்தில் கொடிச் சாற்றுடன் 25 மி.லி. அளவு தேன் சேர்த்துத் தினமும் வெறும் வயிற்றில் அருந்தினால் நோய் குறையும்.

500 மி.லி. அளவு நாட்டு (பெரிய ) நெல்லிக்காய்க் கஷாயத்தில் மஞ்சள் பொடி அரைத் தேக்கரண்டி, தேன் அரைத் தேக்கரண்டி கலந்து, தினமும் காலையில், வெறும் வயிற்றில் அருந்தினால் நோய் குறையும்.

சிலந்தி நாயகம் எனும் வெடிக்காயிச் செடி இலைச்சாறு 2 தேக்கரண்டி, காய்ச்சிய பசும்பால் 1 கோப்பை , தேன் 2 தேக்கரண்டி, இம்மூன்றும் கலந்து காலை, மாலை என 2 வேளைகள் வீதம் தினம் வெறும் வயிற்றில் உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பு, 40 நாட்கள் குடித்து வந்தால், நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகும்.

அருகம்புல் சாறு, வல்லாரை இலைச் சாறு, சிறுகுறிஞ்சான் (சர்க்கரைக் கொல்லி ) இலைச் சாறு, நாட்டு (பெரிய) நெல்லிக்காய்ச் சாறு,
மஞ்சணத்தி இலைக் கொழுந்து சாப்பிடலாம். மாங்கொட்டைப் பருப்பு சாப்பிடலாம். நாவற்பழக் கொட்டைத் தூளுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
ஆலம் விழுது, நாவல் மரப்பட்டை, மருதமரப்பட்டை மூன்றையும் நீர் விட்டுக் காய்ச்சிக் குடிக்கலாம்.

நித்தியா கல்யாணி வேரைப் பொடி செய்து உண்ணலாம். பொடுதலைப் பச்சிலை, வல்லரையுடன் தேன் கலந்து உண்ணலாம்.

புங்கம் மலர்களைக் காய்ச்சிக் குடிக்கலாம். சிறுகீரை வேரினைச் சூப் செய்து சாப்பிட்டு வரலாம்.

துவரம் பருப்பு 50 கிராம், வெந்தயம் 25 கிராம் இரண்டையும் நன்றாக வேகவைத்து கடைந்து, உப்புச் சேர்த்து, சாதத்தில் போட்டுப் பிசைந்து, தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிடலாம்.

நீரிழிவு நோய் குணம் அடைய மேற்கொள்ள வேண்டிய யோகாசனங்கள்:

சித்தாசனம், சிரசாசனம், சர்வாங்கசனம், மத்ஸ்யாசனம், அர்த்த மச்சேந்திராசனம், ஹலாசனம், சக்கராசானம், பவனமுக்தாசனம், மயூராசனம், யோகமுத்ராசனம், மகா முத்ராசனம், தனுராசனம், பச்சிமோத்தாசனம், பாதஹஸ்தாசனம், சாந்தி ஆசனம் ஆகிய ஆசனங்கள் செய்து வரலாம்.



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator