Monday 15 September 2014

ஸௌந்தர்யலஹரீ... அழகு வெள்ளம்......



ஸௌந்தர்யலஹரீ... அழகு வெள்ளம்......

இந்த்ரிய அடக்கம் இல்லாதவர்கள் தேவியை அணுகி
வழிபட இயலாது . இஷ்டப்ராப்தி.

புராராதே : அந்த: புரமஸி தத: த்வத் சரணயோ:
ஸபர்யா மர்யாதா தரல கரணனாம் அஸுலபே |
ததா ஹ்யேதே நீதா: சதமகமுகா: ஸித்திம் அதுலாம்
தவ த்வாரோ பாந்தஸ்திதிபி: அணிமாத்யாபிர் அமரா:||

முப்புரம் எரித்த பரமசிவனுடைய அந்தப்புரத்தில் 
பட்டமஹிஷியாய் நீ விளங்குகிறாய். அதனால் 
உன்னுடைய பாதங்களில் நெருங்கிப் பூஜை செய்யும்
முறை அடங்காத சித்தம் உடையவர்களால் அடையக்
கூடியதன்று. இந்திரன் முதலான தேவர்கள் உன்னுடைய 
வாயிற்புரத்தில் இருக்கும் அணிமா முதலிய தேவதைகளால்
தடை செய்யப்பட்டவர்கள். இருப்பினும் அவர்கள் பூஜை
செய்ய விரும்பி வந்தமையால் அணிமா முதலிய ஒப்பில்லாத 
சித்திகளை அடையும் பேறு பெற்றார்கள்..இந்திரிய நிக்ரஹம் 
செய்துகாமத்தை வென்றால் மட்டுமே தேவியை நெருங்கிப்பூஜை
செய்ய இயலும். இந்திரன் முதலான தேவர்கள் வெளி வாயிலில் 
நின்று சேவை செய்த பின்பே சித்திகளை அடைந்து தேவியின் 
சமீபம் சென்று சேவை செய்யத்தகுதி அடைகிறார்கள்.

தேவியினுடைய பதிவ்ரத மஹிமை. ஸரஸ்வதி கடாக்ஷம்,
லக்ஷ்மி கடாக்ஷம்.

கலத்ரம் வைதாத்ரம் கதி கதி பஜந்தே ந கவய:
ச் ரியோ தேவ்யா: கோவா ந பவதி பதி: கைரபி தனை:|
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனாம் அசரமே
குசாப்யாம் ஆஸங்க: குரவக தரோ: அப்யஸுலவ:||
எவர்கள் மந்த்ரம், ஜபம்
அம்பிகைகும், லக்ஷ்மி முதலியவைகளால் ஸரஸ்வதியை வசமாக்கிக்
கொள்கிறார்களோ , அவர்கள் ஸரஸ்வதி வல்லபர்கள் எந
அழைக்கப்படுகின்றனர். எவர்கள் தனம் தான்யம் குதிரை
யானை முதலிய செல்வத்தை வசமாக்கிகொண்டவர்களோ
அவர்களை லக்ஷ்மீபதிகள் என அழைக்கப்படுகின்றனர்.
அனால் எவரையும் பார்வதீபதி எனக் கூறப்படுவதில்லை.
கல்வியையும், செல்வத்தையும் வசப்பௌத்தலாம். ஆனால் 
மனத்துக்கும் வாக்குக்கும் எட்டாத பரதேவதையை யாரும்
வசப்படுத்த முடியாது. அவல் பரமசிவன் ஒருவனுக்கே வசப்பட்டவள்.
அம்பிகைக்கும் ,லக்ஷ்மிக்கும் ஸரஸ்வதிகும் ஏற்ற தாழ்வு கூறுவதுபோல்
தோன்றினாலும் உண்மையில் எந்தவிதமான ஏற்ற தாழ்வு எதுவும் 
இல்லை என நம் ஆசார்யாள் கூறுகிறார்.

பாதபத்மம் சரணம் சரணம்.



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator