Friday 26 September 2014

தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் <>

தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் <>

********************
* புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து தான்
அரிய வகை "வைரம்" நமக்கு கிடைக்கிறது.
இது பூமிக்கு அடியில் 90 மையில் தொலைவில்
தான் இந்த வைரம் இருக்கும். 2 மையில்
தெலைவில் வெறும் நிலக்கரி மட்டும் தான்
கிடைக்கும்.

* உடம்பில் இருக்கும் நீரின் அளவு ஒரே மாதிரியாய்
இருந்தால் நமக்கு தண்ணீரின்
ஞாபகமே இருக்காது. நீரின் அளவு 2.5 சதவீதம்
குறைந்தாலே போதும். முதலில் தொண்டையில் ஈரம்
காய்ந்துப் போக மூளை விழித்துக்
கொண்டு தண்ணீர் தேவையை வாய்ப்
பகுதிகளில் உள்ள நரம்புகளுக்கு உணர்த்துகிறது.

* புயல் உருவாவதற்கு முக்கிய காரணம் பூமியின்
அமைப்புதான். ஒரு ஆரஞ்சுப்பழம் போன்ற அமைப்புடைய
பூமி அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல்
ஒருபக்கமாக அதாவது 23 1/2
டிகிரி சாய்ந்து சுற்றுவதால் சூரியனிடமிருந்து வரும்
உஷ்ணம் பூமியின் எல்லாப் பரப்பின் மேலும்
ஒரே சீராகப்படுவதில்லை. இதன் காரணமாக
பூமியின் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும்
இன்னொரு பகுதி குறைவான
வெப்பமாகவும் இருக்கும். வெப்பம்
அதிகமாக உள்ள பகுதிகளில்
காற்று விரிவடைந்து மேலே செல்கிறது. அப்போது அந்த
இடத்தில் காற்றின் அழுத்தம்
குறைந்து ஒரு வெற்றிடம் உண்டாகிறது. அந்த
வெற்றிடத்தை நோக்கி காற்றின் அழுத்தம்
அதிகமாக உள்ள பகுதியிலிருந்து காற்று வேகமாய்
வீச ஆரம்பிக்கிறது. அப்போது பூமியின் சுழற்சியின்
காரணமாக
காற்று அலைக்கழிக்கப்பட்டு சூறாவளியாக
மாறி புயலாய் அதாவது குறைந்த காற்று அழுத்த
மண்டலமாக உருவாகிறது.

* மழை பெய்யும்போது பெரும் சப்தத்துடன்
இடி இடித்தால் நம்மில் பாதிபேர் ஓடிப்போய்
ஒளிந்து கொள்கிறோம்.
அடிக்கடி இடிதாக்கி இரண்டு பேர் பலி என்ற
செய்தியையும் பார்க்கிறோம். இந்த
இடி எப்படி உருவாகிறது, இது யாரையெல்லாம்
தாக்கும்?
மழையும், வெயிலும் இல்லாமல் குளிர்ச்சியான
காற்று திடீரென பூமியில் இருந்து மேலே எழும்பும்.
அந்தக் காற்று ஈரமாக இருப்பதால்
அது மேலே செல்வதற்கு ஒரு சக்தி வேண்டும். அந்த
சக்தியை குளிர்ந்த காற்று தனக்குள் இருந்தே எடுத்துக்
கொள்ளும். இந்த
ஈரக்காற்று குளிர்ச்சி அடைந்து நீர்த்துளிகள்
அதாவது மேகங்கள் உருவாகின்றன.
இந்த நீர்த்துளிகள்
மேலே சென்று ஏற்கனவே அங்கிருக்கும் மேகங்களுடன்
உராயும்போது 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம்
டிகிரி செண்டிகிரேடு வரை வெப்பம் உருவாகும்.
இந்த வெப்பத்தினால் அந்தப்
பகுதி விரிவடைந்து வெளிச்சமும், சத்தமும்
உருவாகிறது. ஒளியை மின்னலென்றும்,
ஒலியை இடியென்றும் சொல்கிறோம்.
மேகங்கள் வேகமாக மோதிக்கொள்ளும் போது 10
மில்லியன் கிலோவாட்ஸ்
அளவுக்கு மின்சக்தி உருவாகும். இது நேரடியாக
மனிதர்களைத் தாக்குகிறது.
உயரமான கட்டிடங்கள், உயரமான மரங்கள்
போன்றவை இதனால் அதிக
பாதிப்புக்கு உள்ளாகின்றன. உயரமான
மரங்களுக்கு கீழே ஒதுங்கி நிற்பவர்களை
இடிதாக்குகின்றது. கூட்டமாக
நடந்து செல்லும்போது உயரமாக
இருப்பவர்களை இடிதாக்கும் வாய்ப்பு அதிகம். திறந்த
வெளியில் இருப்பவர்களையும் இடிதாக்கும்
வாய்ப்பு அதிகம்.
மின்னல் சமயத்தில் மின்சாரத்தை அதிகம்
பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
செருப்பு அணிந்த நடக்கும்போது இடிதாக்கும்
வாய்ப்பு குறைவு. மழை நேரங்களில் குடைபிடிக்கும்போது அதன்
பிளாஸ்டிக் கைப்பிடியை பிடிப்பதன் மூலம்
இடிதாக்குவதில் இருந்து தற்காத்துக்
கொள்ள முடியும்.

* டால்பின்கள் ஒரு கண்ணைத்
திறந்து வைத்துக்கொண்டு
தூங்கும்.

* பத்துக்கு ஒன்பது பேர் மின்சார
விளக்கை முதன் முதலில்
கண்டுபிடித்தவர் தாமஸ் எடிசன்
என்றுதான் நினைத்துக்
கொண்டு்ள்ளனர்.
ஆனால் முதன் முதலாக
மின்விளக்கை கண்டறிந்தவர் ஜோசப்
ஸ்வான் என்ற
விஞ்ஞானி ஆவார்.

* ஒலிம்பிக் போட்டியில் வழங்கும் தங்க
பதக்கங்களில் 92.5%
வெள்ளி தானாம்.

* ஈபிள்
கோபுரம் உயரம் குளிர்காலத்தில் 6
அங்குலங்கள் குறைந்து விடும். 

* ஏர்னஸ்ட் வின்சென்ட் ரைட்
என்பவர் 1939 – ல் எழுதிய Gadsby,
என்கிற 50.110 சொற்கள்
உள்ள அந்த நாவலில் E என்ற
எழுத்தையே பயன்படுத்தவில்லை !

* 1880 ல்
தாய்லாந்து நாட்டின்
ராணி தண்ணீரில்
மூழ்கிகொண்டிருந்த
போது பாதுகாவலளர்கள்
பார்த்துக்கொண்டே
நின்றார்களே தவிர யாரும்
காப்பற்றவில்லையாம்.
ஏனெனில் ராணியை அவர்கள்
தொடுவது
தடுக்கபட்டிருந்ததாம்.

* இரவில்
விழித்திருப்பதற்கும், சுறுசுறுப்புக்கும்
நாம்
காப்பி சாப்பிடுவது வழக்கம்.
காப்பியில் உள்ள காஃபினே அந்த
சுறுசுறுப்படைய வைக்கிறது. ஆனால்
ஒரு ஆப்பிளில் உள்ள
இயற்கை சர்க்கரையில் ஒரு கப்
காபியில் உள்ள காஃபினை விட
அதிகமாக உள்ளது. எனவே,
இனி பரிட்சைக்கு படிக்கும்
போது காப்பிக்கு பதிலாக
ஒரு ஆப்பிள் சாப்பிடுவது நல்லது.

* வௌவால் ஒரு வித்தியாசமான உயிரினம்
இவைகளுக்கு கண்கள்
இல்லை என்பது உண்மைதான் . ஆனால் இந்த
உரினத்தால் பார்க்கவும் முடியும் . இவைகள்
தங்கள் மீஒலி எனப்படும் சத்தத்தை எழுப்பி அதன்
மூலம் தனக்கு எதிரில் என்ன பொருள்கள்
இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும்
தன்மை கொண்டது.

* சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக
மின்சாரம்பாயாது . ஆனால் தண்ணீரில்
நின்று மின்சாரக் கம்பியய் பிடித்தால்
மின்சாரம் பாய்கிறதே அது ஏன்?
பொதுவாக தண்ணீரில் பல வகையான
மினரல்கள் மற்றும் அழுக்குகள் படிந்திருப்பதால்
அதில் மின்சாரம் பாய்கிறது. ஆனால்
சுத்தமான நீரில் இப்படிப்பட்ட தாதுக்கள்
இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.

* மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம்
பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்ல அடர்ந்த
சிவப்பு நிறமாகவோ இருக்காது. ஆனால் தோலின்
வழியாக பார்த்தால்
இரத்தமானது எப்பொழுதும் நீல
நிறமாகவே காட்சியளிக்கும்.

****************** 
பிடிசிருந்தா லைக் பண்ணுங்க. கண்டிப்பாக ஷேர் பண்ணுங்க. —


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator