Sunday 14 September 2014

இதயத்துக்கு வலுசேர்க்கும் உணவு வகைகள் எச். சீதாலட்சுமி

இதயத்துக்கு வலுசேர்க்கும் உணவு வகைகள்

எச். சீதாலட்சுமி

கீரைகளில் இதயபலத்துக்கு உதவும் சத்துக்கள் உள்ளன. எனவே தினமும் ஏதேனும் ஒரு கீரையை சாப்பிடுவது நல்லது.

* முழுதானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பு அரிசியும் உடலுக்கு வலு சேர்க்கும். இதயத்தைப் பாதுகாக்கும்.

* ஓட்ஸில் நார்ச்சத்துகள் மிகுந்துள்ளன. இது கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன் இரத்த ஒட்டத்தையும் சீராக்கும். இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

* ஆப்பிள் இதயத்துக்கு மிகவும் நல்லது. இது இரத்தம் உறைவதைத் தடுக்கும்.

* பாதாம் எண்ணெய்யில் விட்டமின் "இ' உள்ளது. இது உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். இதயநோய் அண்டாமல் தடுக்கும்.

* தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜுஸ் குடிப்பது இதயநோய் வராமல் நம்மை காப்பாற்றும்.

* ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, மல்பெர்ரி போன்ற பழவகைகளில் அதிக அளவு விட்டமின்"சி' கால்சியம், பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன. தினமும் காலையில் ஓட்ஸூடன் ப்ளுபெர்ரி பழம் சாப்பிட இதயம் சீராக இயங்கும்.

* சோயா உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயநோய் வருவதைத் தடுக்கிறது. பாலுக்கு பதில் சோயா பாலை காலையில் அருந்தலாம். இதயம் வலுப்பெறும்.

* உப்பு இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும் போதெல்லாம் இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

மைதாவா யோசியுங்கள்!

ஏ.எஸ்.பிலால், மண்ணடி

நாம் உணவில் பயன்படுத்தும் மைதா மாவில் அதன் வெண்மை தன்மையைக் கூட்ட (BENZOYL PEROXIDE) பென்சாயில் பெராக்சைடு பயன்படுத்தப்படுகிறது. இது தலைமுடியை கருமையாக்க பயன்படும் (DYE)யில் பயன்படுகிறது. அத்துடன் நீரிழிவு நோயினை அதிகப்படுத்தும் அப்ப்ர்ஷ்ஹய் எனும் ரசாயனம் வேறு கலக்கப்படுகிறது. அத்துடன் அசோடி கார்போனாமைட், குளோரின் வாயுக்கள் அடங்கும்.

மைதா உணவை உண்ணும்போது சர்க்கரையின் அளவு உடனே ஏறும், மைதா உணவில் தயாரிக்கப்படும் பரோட்டா, நூடுல்ஸ், பீட்சா, பிரெட், கேக், சமோசா, பாஸ்தா, கச்சோரி ஆகியவை நல வாழ்விற்கு வேட்டு வைத்துவிடும்.

பவடஉ-2 நீரிழிவு நோயை அதிகப்படுத்துவதில் அரக்கன் மைதா.

ஒரு கிராம் கார்பொஹைட்ரேட்டில் 9 கலோரி சக்தி உள்ளது. பரோட்டாவில் முழுவதும் கார்போஹைட்ரேட்ஸ் மட்டுமே உள்ளது. மைதா விலை குறைவுதான். ஆனால் அது வருங்காலத்தில் மருத்துவமனைக்கு வைக்கும் செலவோ அதிகம்

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator