ஹிந்து தர்ம சிந்தனைகள் 188:
கண்ணன் சொன்னதென்ன ?:
இந்த இருமைக் குணங்கள் பற்றி இத்தனைப் பதிவுகளைத் தருவதற்கு ஒரு முக்கியக் காரணம் உள்ளது!! அது பற்றி இந்தப் பதிவில் சொல்ல விழைகிறேன்!!!
மனிதன் அழிபவன்!! உயிர்கள் எல்லாமே அழிவுள்ளது!! உடல் அழிந்து போவது!! ஆனால் ஆத்மா அழிவற்றது!!! பிரபஞ்சம் அழிவற்றது!!! (இவ்விடத்தில் மகாப்ரளயத்தில் பிரபஞ்சம் அழியும் என்று சொல்வது பிரபஞ்சத்தின் இயங்காத நிலையை மட்டுமே என்று உணரவும்!!) வெளி அழிவற்றது!! இறை அழிவற்றது!!! அதே போல குணங்களும் அழிவற்றவை!!! குணங்கள் எல்லாமே பிரபஞ்ச இயக்கத்துக்காக வேண்டி இறைவனால் படைக்கப்பட்டவை!!! வெறும் களிமண் போன்றிருக்கும் மனித மூளையில் மனதின் நினைவுகளின் மூலம் குணங்கள் உருவாக்கப்படுகின்றன!!! இதனால் உணரவேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றும் உண்டு!!! குணங்கள் எல்லாமே இயற்கையாகவே இருப்பவை!! அதாவது இயற்கை என்கிற ஒன்று உருவாகிற நேரத்திலேயே குணங்களும் அதனூடே உருவாகி நின்றன என்பதேயாம்!!!
இந்த இடத்தில் கீதையில் கண்ணன் உரைத்த ஒரு சொல்லை நினைவு கூர்கிறேன்!!! (ஹிந்து மதத்தின் தத்துவார்த்த ரீதியிலான விஷயங்கள் எல்லாமே பெரும் சமுத்திரம் போன்றதாகும்!! இந்தப் பதிவுத் தொடரில் அவை பற்றி லேசாகக் கோடி மட்டுமே காட்டுகிறேன்!! அடுத்த தொடர் எழுத முடிந்தால் அதில் பல தத்துவ தரிசனங்கள் பற்றி சொல்ல விழைகிறேன்!! ) கண்ணன் கூறுகிறான் '' இருமைக் குணங்களை அகற்றியவன் என்னை உள்ளது உள்ளபடி அறிகிறான் !!!!'' இது கீதை சொல்வது!! இது எதை உண்மையில் உரைக்கிறது????
இருமைக் குணங்களை அகற்றுதல் என்றால் என்ன??? முந்தைய பதிவுகளில் சொன்ன இன்பம்- துன்பம் , வெப்பம்- குளிர், புகழ்ச்சி- இகழ்ச்சி , நட்பு- பகைமை , பற்று- பற்றின்மை இப்படிப்பட்ட பலப்பல குணங்களும் இயற்கையின் பாற்பட்டவை என்பதை உணர்ந்தும் இவை பற்றித் தான் எதுவும் கவலைப்படத் தேவையில்லை என்பதையும் உணர்ந்து இந்தக் குணங்களை எல்லாம் அனுபவித்தாலும் அதன் மூலம் எந்தப் பாதிப்புமின்றி தான் போகும் வழியிலேயே தொடர்ந்து செல்று கொண்டிருப்பவன் எவனோ அவனே இருமைக் குணங்களை அகற்றியவன் ஆகிறான்!!!! அவனே ஆன்மதரிசனம் பெற்றவனாகவும் ஆகிறான்!! இதையே கண்ணன் உரைக்கிறான்!!!!
இங்கு நான் வலியுறுத்த விரும்புகிற ஒரு விஷயம் ரஜோ-தமோ-சத்வ குணங்கள் எல்லாமுமே இயற்கையின் பாற்பட்டவை என்பதை உணர்ந்தும் இந்தக் குணங்களைத் தனக்குள் வைத்திருந்தாலும் அல்லது அடுத்தவர் மூலமாக இந்தக் குணங்கள் பிரயோகிக்கப்பட்டு அதனால் எந்தவிதமான நல்ல/தீய பாதிப்புக்கள் வந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் இந்தக் குணங்களுக்குத் தான் அடிமையாகாமலும் இருந்திருந்து தன்னுடைய கர்மத்தை எவனொருவன் செய்து கொண்டிருக்கிறானோ அவனே நிர்க்குணவானாக உயர்ந்து நிற்கிறான்!!! அவ்வாறு நிர்க்குணவானாகி உயர்பவன் நிர்க்குணப் பரப்ரம்மத்துடன் தானும் ஒன்றியிருக்கும் முக்தி என்கிற நிலையை அடைகிறான்!!!
இதனாலேயே முக்கடவுளருக்கும் முக்குணங்கள் இருப்பதாக சொல்லப்பட்டாலும் அவையெல்லாம் நம்மை பிறவிச்சுழலில் சிக்க வைக்கும் தன்மை கொண்டவை என்றும் இயற்கை அவ்வாறான முக்குண ரூபத்தில் நம்மிடம் உறவு கொள்கிறது என்பதையும் அதை விலக்கவேண்டும் என்பதையும் உணர வேண்டும்!!! இன்னமும் முந்தைய பதிவுகளில் சொன்னது போல வெப்பம்- குளிர்ச்சி போல்தான் சத்வ- தமோ குணங்கள் என்பதையும் உணர்தல் வேண்டும்!! மிகக் குறைந்த தமோகுணமே சத்வ குணத்தைத் தருகிறது என்பதையும் மிகக் குறைந்த சத்வ குணமே தமோகுணத்தை தருகிறது என்பதை உணர்ந்தால் இவை இரண்டுமே வெப்பநிலை போல ஒன்றின் பாற்பட்டவையே என்றும் அதனாலேயே இக்குணங்களை நமக்குத் தந்து ஆட்கொள்வதாக சொல்லப்படும் சிவமும் விஷ்ணுவும் ஒன்றுதான் என்பதையும் உணரலாம்!!! இன்னமும் குறிப்பாகச் சொன்னால் மும்மூர்த்திகளின் குணப்ரபாவங்களும் நம்மிடம் சிவத்தின் மூலமாகவே வெளிப்படுத்தப் படுவது என்கிற கருத்து சிவம் தமோகுணம் என்பதற்கு மட்டுமே உரியதல்ல என்பதையும் சொல்லி நிற்கும்!!! சத்வகுண விஷ்ணு அக்குணம் (நம்மிடம்) குறைந்த நிலையில் அழிக்கும் அவதாரங்களையும் தமோகுண சிவம் அது (நம்மிடம்) குறைந்த நிலையில் மங்களங்களைத் தரும் இறையாகவும் நிற்கின்றன என்பதை உணர்ந்தால் சிவம்- விஷ்ணு என்று இருவராக இந்தக் கடவுளரைச் சொல்லும் இருமைக் குணத்தையும் நாம் கடந்து அது ஒருமையே என்பதையும் உணரலாம் !!! இந்த உணர்வுகளைத் தாண்டியவன் எவனோ அவன் மட்டுமே
கண்ணன் சொன்னதென்ன ?:
இந்த இருமைக் குணங்கள் பற்றி இத்தனைப் பதிவுகளைத் தருவதற்கு ஒரு முக்கியக் காரணம் உள்ளது!! அது பற்றி இந்தப் பதிவில் சொல்ல விழைகிறேன்!!!
மனிதன் அழிபவன்!! உயிர்கள் எல்லாமே அழிவுள்ளது!! உடல் அழிந்து போவது!! ஆனால் ஆத்மா அழிவற்றது!!! பிரபஞ்சம் அழிவற்றது!!! (இவ்விடத்தில் மகாப்ரளயத்தில் பிரபஞ்சம் அழியும் என்று சொல்வது பிரபஞ்சத்தின் இயங்காத நிலையை மட்டுமே என்று உணரவும்!!) வெளி அழிவற்றது!! இறை அழிவற்றது!!! அதே போல குணங்களும் அழிவற்றவை!!! குணங்கள் எல்லாமே பிரபஞ்ச இயக்கத்துக்காக வேண்டி இறைவனால் படைக்கப்பட்டவை!!! வெறும் களிமண் போன்றிருக்கும் மனித மூளையில் மனதின் நினைவுகளின் மூலம் குணங்கள் உருவாக்கப்படுகின்றன!!! இதனால் உணரவேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றும் உண்டு!!! குணங்கள் எல்லாமே இயற்கையாகவே இருப்பவை!! அதாவது இயற்கை என்கிற ஒன்று உருவாகிற நேரத்திலேயே குணங்களும் அதனூடே உருவாகி நின்றன என்பதேயாம்!!!
இந்த இடத்தில் கீதையில் கண்ணன் உரைத்த ஒரு சொல்லை நினைவு கூர்கிறேன்!!! (ஹிந்து மதத்தின் தத்துவார்த்த ரீதியிலான விஷயங்கள் எல்லாமே பெரும் சமுத்திரம் போன்றதாகும்!! இந்தப் பதிவுத் தொடரில் அவை பற்றி லேசாகக் கோடி மட்டுமே காட்டுகிறேன்!! அடுத்த தொடர் எழுத முடிந்தால் அதில் பல தத்துவ தரிசனங்கள் பற்றி சொல்ல விழைகிறேன்!! ) கண்ணன் கூறுகிறான் '' இருமைக் குணங்களை அகற்றியவன் என்னை உள்ளது உள்ளபடி அறிகிறான் !!!!'' இது கீதை சொல்வது!! இது எதை உண்மையில் உரைக்கிறது????
இருமைக் குணங்களை அகற்றுதல் என்றால் என்ன??? முந்தைய பதிவுகளில் சொன்ன இன்பம்- துன்பம் , வெப்பம்- குளிர், புகழ்ச்சி- இகழ்ச்சி , நட்பு- பகைமை , பற்று- பற்றின்மை இப்படிப்பட்ட பலப்பல குணங்களும் இயற்கையின் பாற்பட்டவை என்பதை உணர்ந்தும் இவை பற்றித் தான் எதுவும் கவலைப்படத் தேவையில்லை என்பதையும் உணர்ந்து இந்தக் குணங்களை எல்லாம் அனுபவித்தாலும் அதன் மூலம் எந்தப் பாதிப்புமின்றி தான் போகும் வழியிலேயே தொடர்ந்து செல்று கொண்டிருப்பவன் எவனோ அவனே இருமைக் குணங்களை அகற்றியவன் ஆகிறான்!!!! அவனே ஆன்மதரிசனம் பெற்றவனாகவும் ஆகிறான்!! இதையே கண்ணன் உரைக்கிறான்!!!!
இங்கு நான் வலியுறுத்த விரும்புகிற ஒரு விஷயம் ரஜோ-தமோ-சத்வ குணங்கள் எல்லாமுமே இயற்கையின் பாற்பட்டவை என்பதை உணர்ந்தும் இந்தக் குணங்களைத் தனக்குள் வைத்திருந்தாலும் அல்லது அடுத்தவர் மூலமாக இந்தக் குணங்கள் பிரயோகிக்கப்பட்டு அதனால் எந்தவிதமான நல்ல/தீய பாதிப்புக்கள் வந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் இந்தக் குணங்களுக்குத் தான் அடிமையாகாமலும் இருந்திருந்து தன்னுடைய கர்மத்தை எவனொருவன் செய்து கொண்டிருக்கிறானோ அவனே நிர்க்குணவானாக உயர்ந்து நிற்கிறான்!!! அவ்வாறு நிர்க்குணவானாகி உயர்பவன் நிர்க்குணப் பரப்ரம்மத்துடன் தானும் ஒன்றியிருக்கும் முக்தி என்கிற நிலையை அடைகிறான்!!!
இதனாலேயே முக்கடவுளருக்கும் முக்குணங்கள் இருப்பதாக சொல்லப்பட்டாலும் அவையெல்லாம் நம்மை பிறவிச்சுழலில் சிக்க வைக்கும் தன்மை கொண்டவை என்றும் இயற்கை அவ்வாறான முக்குண ரூபத்தில் நம்மிடம் உறவு கொள்கிறது என்பதையும் அதை விலக்கவேண்டும் என்பதையும் உணர வேண்டும்!!! இன்னமும் முந்தைய பதிவுகளில் சொன்னது போல வெப்பம்- குளிர்ச்சி போல்தான் சத்வ- தமோ குணங்கள் என்பதையும் உணர்தல் வேண்டும்!! மிகக் குறைந்த தமோகுணமே சத்வ குணத்தைத் தருகிறது என்பதையும் மிகக் குறைந்த சத்வ குணமே தமோகுணத்தை தருகிறது என்பதை உணர்ந்தால் இவை இரண்டுமே வெப்பநிலை போல ஒன்றின் பாற்பட்டவையே என்றும் அதனாலேயே இக்குணங்களை நமக்குத் தந்து ஆட்கொள்வதாக சொல்லப்படும் சிவமும் விஷ்ணுவும் ஒன்றுதான் என்பதையும் உணரலாம்!!! இன்னமும் குறிப்பாகச் சொன்னால் மும்மூர்த்திகளின் குணப்ரபாவங்களும் நம்மிடம் சிவத்தின் மூலமாகவே வெளிப்படுத்தப் படுவது என்கிற கருத்து சிவம் தமோகுணம் என்பதற்கு மட்டுமே உரியதல்ல என்பதையும் சொல்லி நிற்கும்!!! சத்வகுண விஷ்ணு அக்குணம் (நம்மிடம்) குறைந்த நிலையில் அழிக்கும் அவதாரங்களையும் தமோகுண சிவம் அது (நம்மிடம்) குறைந்த நிலையில் மங்களங்களைத் தரும் இறையாகவும் நிற்கின்றன என்பதை உணர்ந்தால் சிவம்- விஷ்ணு என்று இருவராக இந்தக் கடவுளரைச் சொல்லும் இருமைக் குணத்தையும் நாம் கடந்து அது ஒருமையே என்பதையும் உணரலாம் !!! இந்த உணர்வுகளைத் தாண்டியவன் எவனோ அவன் மட்டுமே
நிர்க்குணத் தன்மையைப் பெறவும் இயலும் !!!!
परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment