Thursday 23 January 2014

"சங்கராசாரியார் எங்கே?"

"சங்கராசாரியார் எங்கே?"

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
நன்றி; வானதி பதிப்பகம்.

தேனம்பாக்கத்தில் ஒரு மரத்தடியில்
உட்கார்ந்திருந்தார்கள் பெரியவாள்.
அருகில் ஒரு பக்தரும் ஒரு தொண்டரும்
இருந்தார்கள்.

பத்தாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன்
வேகமாக வந்து, "சங்கராசாரியார் எங்கே?"
என்று (காவி உடையில் இருந்ததால்)
பெரியவாளையே கேட்டான்.

"பெரியவா, காஞ்சிபுரம் சாலைத்தெரு
மடத்தில் இருக்காள். நான் ரிடையர்
ஆகிவிட்டேன்" என்று சொன்னார்கள்.

பையன் தலையை ஆட்டிவிட்டுப் போய்விட்டான்.

எதிரே உட்கார்ந்திருந்த பக்தர்- ஸர்.சி.பி.
ராமஸ்வாமி அய்யரின் குமாரர்,சி.ஆர்
பட்டாபிராமன் அவர்கள் சொன்னார்;

"மகாப் பெரியவாளுக்கு ரிடையர்மென்ட்
என்பது கிடையாது. குரு ஸ்தானம் என்பது
சாசுவதமான போஸ்ட். குரு தியானத்தில்-
குருர் ப்ரஹ்மா,குருர் விஷ்ணு; குருர் தேவோ
மஹேஸ்வர;என்று சொல்லியிருக்கு.
பிரும்மா,விஷ்ணு,சிவனுக்கு ரிடையர்மெண்ட்
கிடையாது. பெரியவா ஜகத்குரு பெரியவாளுக்கும்
ரிடையர்மெண்ட் கிடையாது.

பெரியவாள் சிரித்துக்கொண்டே, பெரிய வக்கீலோட
குமாரன் நீ. அதனால், லா-பாயிண்ட் சொல்றே.
உன்னை மடத்துக்குப் பட்டா செய்து கொடுத்துட்டா.
அதனாலேதான் உனக்கு பட்டாபிராமன் என்றே பேர்

ஆம், பெரியவாள் சொன்னது உண்மைதான்.

காஞ்சிபுரம் அருகிலுள்ள தாமல் என்ற
கிராமத்திலிருந்த விளைநிலங்களை விற்று,
அந்தத் தொகையை, சாமவேத பாடசாலை
நடத்துவதற்காக மடத்துக்குக் காணிக்கையாகக்
கொடுத்தவர் பட்டாபிராமன்,அத்துடன் தன்
வீட்டிலிருந்த விலையுயர்ந்த நகைகளையும்
மடத்துக்கு சமர்ப்பித்தவர் அவர்


                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator