Thursday 5 June 2014

நாய்..

நாய்..
**********************

நான் ஒரு கால்நடை மருத்துவராதளால், ஒரு ஓநாயைப் போன்ற பத்து வயதுள்ள பெல்கர்என்ற பெயருடைய நாயை பரிசோதிக்க அழைக்கப் பட்டேன்.. 

அந்த நாயின் சொந்தக்காரர்கள், ரோன், அவர் மனைவி லிசா, மற்றும் அவர்களுடைய் குட்டிப் பையன் ஷான் மூவரும் அந்த நாயிடம் மிகுந்த பாசத்துடன் இருந்தார்கள்.. 

அந்த நாய் நோயிலிருந்து குணமாக ஏதாவது அற்புதம் நடக்காதா என்று மிகுந்த பரபரப்புடன் காணப் பட்டார்கள்.. 

நான் அந்த நாயை நன்றாகப் பரிசோதித்து, அது புற்றுநோயின் கோரப் பிடியில் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாக இறந்துக் கொண்டிருக்கிறது என்று உணர்ந்தேன்..

நான் அவர்களிடம், "இனி நாம் ஒன்றும் செய்ய முடியாது...

அதனால், அதற்கு வேதனையற்ற மரணம் சம்பவிக்க உங்கள் வீட்டில் அதற்க்கான நடைமுறைகளை கைக்கொள்ளலாம்" என்றேன்.. 

நான் அதற்க்கான ஏற்ப்பாடுகளைத் தொடங்கினேன். 

அப்போது அந்த நாயின் சொந்தக்காரர்கள், 
" எங்கள் ஆறு வயது பையனும் உடனிருந்து இந்த நடவைக்கைகளை கவனிக்க ஆசைப் படுகிறோம்..
அவன் இதனின்று சில பாடங்களைக் கற்றுக் கொள்வான் என்று எண்ணுகிறோம்..என்றார்கள்.. 

அடுத்த நாள் நாயைச் சுற்றி அனைவரும் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து மிகுந்த வருத்தமடைந்தேன் ..

தொண்டைக் குழியில் எதோ அடைத்துக் கொண்டது போன்ற உணர்வு என்னை ஆட்கொண்டது....

அந்தக் குட்டிப் பையன் மிகவும் அமைதியாகக் காணப்பட்டான்.. 

அந்த நாயை தட்டிக் கொடுத்தான் இறுதி முறையாக.. நான், 

அந்தக் குட்டிப் பையன், என்ன நடக்கிறது என்கின்ற நடைமுறைகளைப் புரிந்துக் கொண்டானோ, என்று ஆச்சர்யப் பட்டேன்.. 

சிறிது நேரத்தில் அந்த நாய் அமைதியாக தன உயிரை விட்டது...

அந்தப் பையன் ஒரு குழப்பமும், சிரமமும் இல்லாமல் அந்த நாயின் இறப்பை ஏற்றுக் கொண்டான் என்று எனக்குத் தோன்றியது.. 

நாங்கள் அனைவரும் அந்த நாய் இறந்த பிறகு, ஒன்றாக சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தோம்.. 

மிருங்கங்களின் வாழ்க்கை, மனித வாழ்க்கையை விட குறைவாக இருப்பதை பற்றி நாங்கள் உரக்க ஆச்சர்யமாகப் பேசிக் கொண்டோம்.. 

அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஷான்,"ஏன் என்று எனக்குத் தெரியும்" என்றான்..

நாங்கள் அனைவரும் அவன் பக்கம் திரும்பினோம்..

அவனிடமிருந்து அடுத்த வரி வந்தது என்னை அப்படியே பிரமிக்க வைத்தது.. 

இவ்வளவு ஆறுதலான விளக்கம் இதுவரை நான் கேட்டதே இல்லை..

அது என் வாழ்க்கைப் பாதையையே மாற்றியமைத்தது என்றால் மிகையாகாது..

அந்தச் சிறுவன்,"மனிதர்கள் பிறந்து, பிறகு வளர்கையில்—எப்போதும் வாழ்நாள் முழுவதும் அனைவரிடமும் அன்பு செலுத்தவேண்டும் என்று கற்றுக் கொண்டு நல்ல வாழ்க்கையை வாழ்கிறார்கள்..

சரியா"...மேலும் அவன் தொடர்ந்தான்," 

நல்லது...நாய்களுக்கு(மிருகங்களுக்கு) பிறக்கும் முன்பே எப்படி அனைவரிடமும் அன்பு செலுத்தவேண்டும் என்று தெரிந்திருக்கிறது.....

அதனால் அவைகள் அதிகம் நாட்கள் உயிர் வாழ்வதில்லை" என்றான்..

ஞாபகம் வையுங்கள்..

ஒரு நாயிடமிருந்து நாம் கற்க வேண்டியது:: 

நம் அன்புக்குரியவர் வீட்டுக்கு வந்தால், நாம் ஓடோடிச் சென்று அவர்களை வரவேற்கவேண்டும்..

வெளியே ஜாலியாக செல்லும் வாய்ப்பு வந்தால் எப்போதும் தவறவிடக் கூடாது..

சுத்தமான காற்று மற்றும் தென்றல் போன்று, எப்போதும் பெருமகிழ்ச்சியைத் நம் முகம் பிரதிபலிக்க வேண்டும்..

அவ்வபோது சிறுதுயில் கொள்ளுதல்..

காலையில் எழுவதற்கு முன் கை கால்களை நன்றாக நீட்டி மடக்கவேண்டும்..

தினமும் ஓடி ஆடி சுறுசுறுப்பாக இருக்கவேண்டும்.

எப்போதும் விழிப்புடன் இருந்து மனிதர்கள் அன்போடு தொட அனுமதிப்பது..

சிறு குறைப்பே போதும் என்ற நிலையில் கடிப்பதை தவிர்க்க வேண்டும்..

வெது வெதுப்பான நாட்களில் அமைதியாக புல் தரையில் மல்லாந்து படுத்திருத்தல்..

உஷ்ணமான நாட்களில், நிறைய நீர் பருகி, மரநிழலில் ஓய்வெடுத்தல்..
வெளியே நீண்ட தூரம் நடப்பதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளுதல்
விசுவாசமாக இருத்தல் 

நீ வேறு எதோ ஒன்றைப் போல் பாவனை செய்யாதிருத்தல்....

எதோ உனக்கு தேவையான ஒன்று புதைந்து கிடந்ததால், அதனை இறுதிவரை தோண்டி வெளியே எடுத்துவிடு..(இறுதி வரை முயன்று ஒரு செயலில் வெற்றி பெறும்வரை உழைக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது)

வீட்டில் யாருக்காவது துன்பம் ஏற்ப்பட்டால், அமைதியாக இரு..

அவர் அருகில் உட்கார்ந்து உன் மிருதுவான அன்பால் சாந்தப் படுத்து..

நீ, உன்னை மகிழ்விப்பவர்களை உன்னைச்சுற்றி இருக்க வைத்துக் கொள்.. 

தவறுகளை, கெட்டவைகளை மறந்துவிட்டு, நல்லவற்றையே நாடு..

உன்னை நல்லவிதமாக நடத்தும் மக்களை நேசி..

உனக்கு கெடுதல்நினைப்பவர்கள் பற்றியும் நல்லதே நினை..

வாழ்க்கை மிகவும் குறுகியது..

அதனால் எப்போதும் மகிழ்ச்சியாக இரு.

கீழே விழுவது வாழ்க்கையின் ஒரு கட்டம்...

மீண்டு எழுவது தான் வாழுவதற்கான அர்த்தம்..

வயதாவதைப் பற்றி வருத்தப் படாதீர்கள்..

வெகு சிலருக்கே அந்த சிறப்பு கிடைக்கிறது..

நன்றி Jeyachar Raaghav அய்யா


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator