Saturday 6 September 2014

தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்

தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்


 
தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்
சந்தான பிராப்தி இந்த மந்திரத்தின் குறிக்கோளாகும். புத்திர தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்து வைக்கலாம். உபதேசம் செய்து வைப்பவர் இந்த மந்திரத்தை பாராயணம் செய்திருக்க வேண்டும். தனுர் ராசி உபாசகர்களுக்கு மிக்க பலன் தரும் மந்திரம். 

முதலில் 18 முறை வீதம் 18 நாட்கள் ஜெபம் செய்ய வேண்டும். பின் 54 நாட்கள், 54 முறை வீதமும், பின் 108 நாட்கள் வரை 54 முறை வீதமும் ஜெபம் செய்ய வேண்டும். முழு ஜெபத்தையும் தோஷ பரிகாரமாகத் தர்ப்பணம் செய்துவிட வேண்டும். 

அதன்பின் 108 வீதம் தொடர் ஜெபம் செய்து அதன்பின் சங்கல்ப சங்கியை அல்லது அக்ஷரலக்ஷம் நிறைந்ததும் பாராயணம் செய்ய வேண்டும். இதனை புன்னை மரத்தடியில் ஜெபம் செய்வது சிறப்பு. கோமடம், துளசி வனம் போன்ற இடங்களும் ஜெபம் செய்ய ஏற்ற தலமாகும். 

ஜெபம் செய்ய கிழக்கு, வடக்கு திசைகள் சிறப்பு. காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் வடக்கு திசை நோக்கியும் ஜெபம் செய்ய சித்தி கிடைக்கும். பிரம்ம முகூர்த்தம் முதல் சூரியோதயம் வரை ஜெபம் செய்ய ஏற்ற காலம். 

அஸ்ய ஸ்ரீ ஸந்தான கோபாலகிருஷ்ண மஹா 
மந்த்ரஸ்ய பகவான் நாரத ருஷி: அனுஷ்டுப் 
சந்த: ஸ்ரீதேவகீஸுதோ தேவதா 
க்லாம்-பீஜம், க்லீம்: சக்தி : க்லூம் கீலகம் 
மம ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண-ப்ரஸாத- 
த்வாரா ஸத்சந்தான-ஸித்தயர்த்தே ஜபே விநியோக: 
க்லாம்-க்லீம்-க்லூம்-க்லைம்-க்லௌம் க்ல: இதி கரந்யாஸ: அங்க ந்யாஸச்ச பூர்ப்பு வஸ்ஸுவரோமிதி திக்பந்த: த்யானம் 
த்யாயாமி பாலகம் கிருஷ்ணம் மாத்ரங்கே ஸ்தன்ய பாயினம் 
ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் காந்தம் நீலோத் பல - தலச்சவிம் 
லம்-இத்யாதி பஞ்சபூஜா

ஒரு சமயம் பார்வதி தேவியார் பரமசிவனைப் பார்த்து, 'புத்திரதோஷம் நீங்குவதற்குரிய வழிமுறைகள் யாது' எனக் கேட்டார். அதற்கு பரமசிவன் ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரத்தைக் கூறி விளக்கமும் அளித்தார்.
சிவபிரான் திருவாய் மலர்ந்தருளிய ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்:


க்லாம் - க்லீம் - க்லூம்
தேவகிஸுத கோவிந்த வாஸுதேவ 
ஜகத்பதே
தேஹிமே தனயம் க்ருஷ்ணத்வாம 
ஹம் சரணம் கத:
தேவ தேவ ஜகன்னாத கோத்ர 
விருத்திகா ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் 
யஸஸ்வினம்


பொருள்:


தேவகியின் மைந்தனே! பசுக்களுக்கு பரம சந்தோஷத்தை அளிப்பவனே! வாசுதேவனின் புத்திரனே! 


இவ்வுலகுக்கெல்லாம் தலைவனாகிய கிருஷ்ணா! உன்னைச் சரணடைந்தேன். உத்தம புத்திரன் உண்டாகும்படி அருள்செய். தேவர்களுக்கெல்லாம் தேவனே! ஜகன்னாதா! நான் பிறந்துள்ள கோத்திரத்தின் சந்ததியை விருத்தி செய்கின்ற அருளைத் தருகின்ற தயாளா! நீண்ட ஆயுளைக் கொண்டுள்ள குழந்தையை உடனே எனக்கு தந்தருள்வாயாக!


மக்கட்பேறு வேண்டிக் காத்திருப்பவர்கள், மேற்படி ஸ்லோகத்தை ஆழ்ந்த ஆத்மார்த்தமான நம்பிக்கையுடன் கூடிய பக்தியுடன், காலையில் தினமும் 11 தடவைக்கும் குறையாமல் சொல்லி வந்தால், கட்டாயம் புத்திரப்பேறு உண்டாகும்.


10 வருடம் குழந்தையில்லாமல் இருந்த பக்கத்து வீட்டில் குடியிருந்த, பெண்ணுக்கு இந்த ஸ்லோகத்தை எழுதிக் கொடுத்தேன். முதலில் ஆண் குழந்தையும், அடுத்து பெண்ணும் பிறந்துள்ளனர்.


ஒரு பலகையில் விளக்கை ஏற்றி வைத்து, பக்கத்தில் ஒரு கிருஷ்ணர் படத்தை வைத்து இந்த ஸ்லோகத்தைச் சொல்லச் சொன்னேன். இதைச் சொன்ன பலரும் குழந்தைப் பேறு அடைந்துள்ளனர். 


- லெஷ்மி ஸந்தானம்






Om Devaki Sudha Govinda 
Vasudeva Jagath Pathe
Dehimey Thanayam
Krishna Thwamaham
Saranam
Kadhahaa Deva Deva
Jagannatha
Gothra Vridhi Karap Prabho
Dehimey Thanayam Sheegram
Ayushmandham Yashashreenam


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator