"சமையல் டிப்ஸ்"
* வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. வாரம் 2 தினங்களாவது வெல்லம் சேர்த்த உணவு வகைகளைக் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
* ஒரு தேக்கரண்டி தனியா, 6 மிளகு இவற்றை அரை தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து வறுத்துப் பொடி செய்து, புளிக்கரைசலில் சேர்க்காமல் தனியாக சாதம் பிசையும்போது தேவையான அளவு சேர்த்து, புளிக்கரைசலுடன் கலந்து பிசைந்தால் ருசியான பெருமாள் கோயில் புளியோதரை ரெடி.
* ஒரு கரண்டி பச்சை வேப்பம்பூ, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, மூன்று மிளகாய் வற்றல், சிறிது பெருங்காயம் இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக்கொண்டு, அவற்றுடன் தேவையான அளவு தேங்காய், புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து சாதத்துடன் சாப்பிட்டால் பித்தத்திற்கு நல்லது.
* வறுத்த தேங்காய்த் துருவல், ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் தூளாக்கி அத்துடன் நன்கு வறுத்த சேமியாவைப் பொடியாக நொறுக்கிப்போட்டு, வறுத்த முந்திரியையும் போட்டு கலந்து வைக்க வேண்டும். இது போன்று செய்து வைத்துக் கொண்டால் விருந்தினர் வந்ததும் கொதிநீரில் இதை ஒரு கரண்டி எடுத்துப்போட்டுக் கிளறி சூடான பாலும் ஒரு தேக்கரண்டி நெய்யும் கலந்து கொடுத்தால், நிமிடத்தில் பாயாசம் தயார்.
• வாழை இலையின் நடுவே உள்ள காம்பை நறுக்கி இட்லி மாவில் போட்டு வைத்தால் மாவு பொங்காது.
* வெங்காய பக்கோடா செய்ய பாதி வெங்காயத்தையும், இஞ்சியையும் மிக்ஸியில் அரைத்து எடுத்து அந்த விழுதை மாவில் கலந்து செய்தால் பக்கோடா "கம கம'வென்று வரும். பூண்டு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
* காலையில் வடித்த சாதத்தைச் சூடுபடுத்த சாதத்தைச் சுத்தமான வெள்ளைத்துணியில் வைத்து மூட்டையாக இட்லித் தட்டில் சிறிது நேரம் வைத்துவிடுங்கள். உதிரி உதிரியாக சுடச் சுட சாதம் தயார்.
* துவையல் அரைக்கும்போது சின்னக் கிண்ணத்தில் புளியைத் தண்ணீர் தெளித்துச் சூடாக இருக்கும் குக்கர் மீது 5 நிமிடங்கள் வைத்து, அரைக்க, நன்றாக மசியும்.
* மிக்ஸியில் இட்லி மாவு அரைப்பவர்கள் அரிசி மாவையும், உளுந்து மாவையும் தனித்தனிப் பாத்திரத்தில் வழித்து, அரைமணி நேரத்திற்குப் பிறகு குளிர்ந்த நீரில் வைக்க வேண்டும். மாவில் உள்ள சூடு ஆறிய பின் உப்பு போட்டு இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்தால், மறுநாள் இட்லி, மல்லிகைப் பூ போல வரும்.
* விருந்துகளின்போது தலை வாழை இலையை எப்படி போடுவது என்று பல பேருக்குத் தெரியாது. தலைவாழை இலையின் வெட்டப்பட்ட பகுதி வலது பக்கம் இருக்குமாறு இலையைப் போடவேண்டும்.
* ஊறுகாய் பாட்டில்களில் சில சமயம் பூஞ்சைக் காளான் படிந்திருக்கும். இது கொடிய நச்சுத்தன்மை உள்ளது. எனவே பூஞ்சைக் காளான் படிந்த எதையும் சாப்பிடக்கூடாது.
....
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment