Monday 10 June 2013

அன்று (1940) டாக்டர் குருசாமி முதலியாரைப் பார்த்தது இறைவனையே கண்டது போன்ற உணர்வு

" }
Google+



அன்று (1940) டாக்டர் குருசாமி முதலியாரைப் பார்த்தது இறைவனையே கண்டது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. இறைவன் குருவாகவும் எழுந்தருளுவான் என்று சொல்வதுண்டு. டாக்டர் குருசாமி முதலியாரைப் பார்த்தபோது அங்கு ஒரு நோயாளியுடன் துணையாக வந்த ஒரு பெரியவரிடம் உரையாடியபோது அவர் சொன்ன ஒரு நிகழ்ச்சியை ஈண்டு குறிப்பிடுவது பொருத்தமாகும்.

மேட்டுக்குடியைச் சார்ந்த ஒரு வைணவப் பெண்மணி தாங்க முடியாத தலைவலியுடன் டாக்டர் குருசாமி முதலியாரிடம் வந்தார், தன் தந்தையாருடன். அவர் மூக்கிலும் காதிலும் முறையே உயர்ந்த வைரத்திலானான மூக்குத்தியையும் காதணியையும் அணிந்திருந்தார். டாக்டர் குருசாமி முதலியார் அப்பெண்மணியின் முகத்தை உற்று நோக்கினார். உடலைப் பொருத்த மட்டிலும் எந்தவிதமான நோய்க்குறிகளும் இல்லை. அவர் சிந்தனை செயற்படத் தொடங்கியது. அந்தப் பெண்மணியை நோக்கி,""அம்மா,உங்கள் மூக்குத்தி மிகவும் நன்றாக இருக்கிறது. காதணிகளும் அற்புதம். என் பேத்தி திருமணத்திற்கு தயாராய் இருக்கிறாள். காதிற்கு தோடுகள் தயாராகிவிட்டன. மூக்குத்தி பற்றி இன்னும் எந்த மாதிரி செய்யலாம் என்பது தெரியாததால் இன்னும் எந்தக் கடைக்கு கட்டளை தருவது என்பதை அறுதியிடவில்லை. உங்கள் மூக்குத்தி அழகாக உள்ளது. அதைக் கழற்றிக் கொடுங்கள். என் பேத்திக்கு பிடித்திருந்தால் பாபாலால் கம்பெனியில் செய்யவேண்டியிருக்கும். ஒரு வாரத்தில் திருப்பித் தந்துவிடலாம்'' என்று கூறி மூக்குத்தியைக் கழற்றி வாங்கிக் கொண்டார்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தன்னை வந்து காணுமாறு பணித்தார். அப்படியே அந்தப் பெண்மணியும் வந்து போனாள். ""இப்போது வலி குறைந்து வருகிறது'' என்று சொல்லிச் சொல்லித் திரும்பினாள். டாக்டர் முதலியாருக்கும் தாம் கருதியது சரி என்றேபட்டது. பத்து நாட்களுக்குள் தலைவலி முற்றிலும் நீங்கியதாகத் தெரிவித்தார் அந்தப் பெண்மணி. டாக்டர் முதலியார்,""அம்மா இந்தச் சனியன் மூக்குத்தியைக் கழற்றி எறியுங்கள். இதன் பிரகாசம்தான் உங்கள் கண்களில் தாக்கித் தலைவலியை விளைவித்தது. இனி சாதாரண புஷ்பராகத்தில் நல்லதொன்றை அணிந்து கொள்ளுங்கள். காதில் இருப்பது அப்படியே இருக்கலாம்'' என்று சொல்லி மூக்குத்தியைத் திருப்பிக் கொடுத்தார்!

டாக்டர் முதலியாரின் நோயின் அணுகுமுறையைக் கண்டு என் மனம் வியப்பில் ஆழ்ந்தது. சிறந்த மருத்துவராக இருந்ததால் தம் அனுபவத்தைக் கொண்டு "நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செய்தல் வேண்டும்' என்பது தெரிந்தது. இந்த நிகழ்ச்சி இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது. டாக்டர் முதலியார் இன்றும் என் மனதில் உபநிடதமுனிவர் போல் நீங்காத இடம் பெற்றுத் திகழ்கின்றார்.

("நினைவுக் குமிழிகள்' (பகுதி-1) என்ற சுயசரிதை நூலில் பேராசிரியர் டாக்டர் ந.சுப்பு ரெட்டியார்)
http://www.facebook.com/pages/Khariharan/115524648579725




Ranjani Geethalaya(Regd.) (Registered under Societies Registration Act XXI of 1860. Regn No S/28043 of 1995) A society for promotion of traditional values through,  Music, Dance, Art , Culture, Education and Social service. REGD OFFICE A-73 Inderpuri, New Delhi-110012, INDIA Email: ranjanigeethalaya@gmail.com  web: http://ranjanigeethalaya.webs.com (M)9868369793 all donations/contributions may be sent to Ranjani Geethalaya ( Regd) A/c no 3063000100374737, Punjab National Bank, ER 14, Inder Puri, New Delhi-110012, MICR CODE 110024135  IFSC CODE PUNB00306300

power by BLOGSPOT-PING






No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator