Thursday 8 May 2014

வாழை இலையை ஒரு வருடம் பாதுகாக்கும் டெக்னாலஜி

வாழை இலையை ஒரு வருடம் பாதுகாக்கும் டெக்னாலஜியை கண்டுபிடித்த தமிழக மாணவன்!

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கப், பிளேட், கேரிபேக் போன்றவைகளுக்கு மாற்றாக வாழை இலையிலான கப், பிளேட், பை போன்றவைகளை தயார் செய்வதற்கு வாழை இலையை பதப்படுத்தி பல ஆண்டு உபயோகிக்கும் தொழில்நுட்பத்தை தமிழக மாணவன் ஒருவன் கண்டுபிடித்து அசத்தியதையடுத்து அவனுக்கு அமெரிக்க நாடு தங்கப்பதக்கத்தை வழங்கி உள்ளது.இந்த மாணவன் டெனித் ஆதித்யா வாழை இலையை எந்தவித ரசாயன கலவையும் பயன்படுத்தாமல் புதிய தொழில் நுட்பத்தில் ஒரு வருடம் கெட்டுப் போகாமல் பயன்படுத்துவதை கண்டுபிடித்துள்ளான் என்பதும் அதற்கான காப்புரிமைக்காக அவர் விண்ணப்பித்துள்ளதால் வாழை இலை கெட்டுப்போகாமல் எப்படி வைக்க முடியும் என்ற ரகசியத்தை சொல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தான்.(இது பற்றி நம் ரிப்போர்ட்டரில் முன்னரே வந்த செய்தியின் லிங்க்:http://www.aanthaireporter.com/வாழை-இலையை-பதப்படுத்தி-ப/

இந்திய அறிவியல் கழகம் வருடந்தோறும் இந்தியாவில் பல பகுதிகளில் அறிவியல் கண்காட்சியை நடத்தி அதில் சிறந்த படைப்புகள், கண்டுபிடிப்புகள் அடிப்படையில் சிறந்த இளம் விஞ்ஞானிகளாக தேர்ந்து எடுத்து அவர்களை போட்டிக்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வருகிறது.

இந்த வருடம் இந்திய அறிவியல் கழகமும் அக்னி தொழில்நுட்ப கல்லூரியும் சேர்ந்து இந்தியா முழுவதும் அறிவியல் கண்காட்சியை நடத்தியது. வட்டார அளவில் கண்காட்சி நடத்தப்பட்டு அதில் சிறந்த மாணவ–மாணவிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.பின்னர் அவர்கள் அமெரிக்காவில் உள்ள 'சர்வதேச உலக எரிசக்தி, பொறியியல், சுற்றுச்சூழல் திட்ட ஒலிம்பியாடு' (1sweep) என்ற அமைப்பு நடத்தும் போட்டிக்கு அனுப்பப்பட்டனர்.

அவர்களில் இந்திய மாணவர்கள் 4 பேர்கள் விருது பெற்றுள்ளனர். அதில் தமிழகத்தைசேர்ந்த மாணவர் டெனித் ஆதித்யாவுக்கு தங்கப்பதக்கமும் ரூ.45 ஆயிரம் ரொக்கமும் (750 டாலர்கள்) கொடுத்து கவுரவித்துள்ளது. அவர் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த இந்து மேல்நிலைப்பள்ளி பிளஸ்–1 மாணவர் ஆவார்.

மாணவர் டெனித் ஆதித்யா வாழை இலையை ரசாயன கலவை எதையும் பயன்படுத்தாமல் புதிய தொழில் நுட்பத்தில் ஒருவருடம் கெட்டுப் போகாமல் பயன்படுத்துவதை கண்டுபிடித்துள்ளான். அதற்கான காப்புரிமைக்காக அவர் விண்ணப்பித்துள்ளதால் வாழை இலை கெட்டுப்போகாமல் எப்படி வைக்கமுடியும் என்ற ரகசியத்தை சொல்ல முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்தான்.இதற்கிடையில் தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

#நாம் எல்லோரும் நமது வீடுகளில் தோட்டம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழக்கம் . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றொரு பயன் -நமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் என்பதில் தொடங்கி வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.
Tec banana-leaves pagging
நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம்.

# வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

# வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

#அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது.

# கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு. வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம்
# தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

அமெரிக்காவில் உள்ள 'சர்வதேச உலக எரிசக்தி, பொறியியல், சுற்றுச்சூழல் திட்ட ஒலிம்பியாடு' (1sweep) என்ற அமைப்பு நடத்தும் போட்டியில் மேலும் 3 பேர் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளனர்.

அவர்கள் பெயர் விவரம் இதோ:;

பயோ டீசல்

1. டி.அஞ்சானி, சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி 12–வது வகுப்பு மாணவர். கண்டுபிடிப்பு விவரம் வருமாறு:–

இவர் தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகையில் உள்ள நச்சுத்தன்மையை தடுக்க ஆல்கே என்ற கடல் தாவரத்தை பயன்படுத்தி, அதனால் புகையில் உள்ள கார்பன்டைஆக்ஸைடுவை ஆல்கே உறிஞ்சுகிறது. உறிஞ்சிய கார்பன் டை ஆக்ஸைடுவை கொண்டு அதில் இருந்து பயோ டீசல் தயாரிக்கலாம் என்றும் கண்டுபிடித்துள்ளார். தயாரித்த பயோ டீசலை பாட்டிலில் காண்பித்தார். இவருக்கு வெள்ளிப்பதக்கமும் ரூ.24 ஆயிரமும் (400 டாலர்கள்) வழங்கப்பட்டுள்ளது.

செங்கற்கள்

2. மான்சி டல்சான், 3 கை ரவி ரட்சதியா இவர்கள் இருவரும் குஜராத் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஜி.கே.டோலக்கியா பள்ளி 9–வது வகுப்பு மாணவிகள்.

இந்த 2 மாணவிகளும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி 3 வகையான செங்கற்களை உருவாக்கி உள்ளனர். ஒரு வகையான செங்கல் மிகக்குறைந்த ஈரத்தை உறிஞ்சக்கூடியவை. அந்த வகை செங்கற்களை நீச்சல் குளம் போன்றவற்றில் பயன்படுத்தலாம். அதனால் அந்த தரைநீண்ட நாட்கள் உழைக்கும். மற்றொரு வகை வீடு கட்ட பயன்படுத்தலாம். வேறு ஒரு வகை செங்கல் வறட்சியான பகுதிகளில் பயன்படுத்தலாம்.

இந்த கண்டுபிடிப்புகளுக்கு வெள்ளிப்பதக்கமும் ரூ 24ஆயிரமும்(200 டாலர்கள்) கொடுக்கப்பட்டுள்ளது. அதை இரு மாணவிகளும் பெற்றுக்கொண்டனர்.

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator