Sunday 30 March 2014

சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

.
காமம்:

பற்று உண்டானால் பாசம்,மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம் :

கோபம் குடியைக் கெடுத்து ,கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் அடைய முடியாது.

மதம்: 

யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும்.அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா.அது போல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்து விடுவான்.

மாத்ஸர்யம்: 

மனதில் பொறாமையை நிலை நிருத்தி வாழ்பவனுக்கு வேறு பகையே வேண்டாம்.அதுவே அவனை அழித்துவிடும்.

வீண் பெருமை:

அசுர குணமானது நாமகள் இருக்க கூடாது.

அகந்தை :

தான் என்ற அகந்தை கொண்டவன் ஒருபோதும் வாழ்வில் முன்னேற முடியாது.அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம் :

விருப்பு வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்:

அகங்காரத்தோடு கருமம் செய்தல்.

தாமஸம்:

அற்ப புத்தியை பற்றி நிற்பது..மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம் :

எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்:

நம்மனம் கெடாது.பிறர் மனம் வருந்தாது வாழ வேண்டும்.எப்போது ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்:

உண்மைப் பொருளை அறிய மட்டது மூடி நிற்கும் இருள்.

கண் :

ஆண்டவனைப் பார்க்கவும்,ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமெ ஏற்பட்டது.

காது:

ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு,அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும் .

மூக்கு:

ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு:

இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும்.கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும்.உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்த பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும் ,தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச் சென்றதால் இறைவன் அருள் நமக்கு கிடைக்கும் .

இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

18 படி தெய்வங்கள்:

ஐயப்பன் கோவிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள் பாலிப்பது சிறப்பு:

1.விநாயகர்

2.சிவன்

3.பார்வதி

4.முருகன்

5.பிரம்மா

6.விஷ்ணு

7.ரெங்கநாதர்

8.காளி

9.எமன்

10.சூரியன்

11.சந்திரன்

12.செவ்வாய்

13.புதன்

14.குரு(வியாழன் )

15.சுக்கிரன்

16.சனி

17.ராகு

18.கேது

...


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator