Saturday 19 October 2013

ச்ராத்தம்

mobile casino Who links to my website? 
" Google+"



ச்ராத்தம் :
(சர்மா சாஸ்திரிகளின் ‘வேதமும் பண்பாடும்’ நூலிலிருந்து ஒரு சிறிய பகுதி):
பரலோகம், பித்ருலோகம், பித்ரு கர்மா:
நாம் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பரலோகம் உண்டு, பித்ரு லோகம் உண்டு, அங்கு பித்ருக்கள் வசிக்கின்றனர். நம் முன்னோர்கள் உடல் அழிந்ததும் ப்ரேத நிலையில் சில காலம் இருந்து தாங்கள் செய்த நற் கர்மங்களின் பயனாகவும், பின்&சந்ததிகள் செய்யும் பித்ரு காரியங்களின் பயனாகவும் பிரேத நிலை நீங்கியவராய் பித்ரு லோகத்தில் இடம் பெற்றவராக விளங்குகின்றனர்.

பித்ருக்களை உத்தேசித்து செய்யும் கர்மாவே ச்ராத்தம்.
நாம் செய்யும் முக்கியமான கர்மாக்களில் ச்ராத்தமும் ஒன்று. நமது முன்னோர்கள் தெய்வங்களுக்கு செய்யும் பூஜைகளை விட ச்ராத்தத்தை மிக பயபக்தியுடனும் ஆசாரத்
துடனும் செய்து வந்திருக்கிறார்கள். மஞ்சள் துணியில் ஒரு ரூபாயை முடிந்து வைத்து விட்டு பிறகு நிதானமாக முடிந்த போது தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றலாம். ஆனால் ச்ராத்தம் அவ்வாறல்ல என்று எனது தகப்பனார் ப்ருஹ்மஸ்ரீ ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் அடிக்கடி குறிப்பிடுவார். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டபடி ச்ராத்தம் செய்தே ஆக வேண்டும்.

யாருக்கெல்லாம் திருப்தி? ச்ராத்தம் செய்வதினால் :
1. எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்கள்,
2. அவர்களுக்கு துணை வருகின்ற விஸ்வே&தேவர்கள் என்ற தேவப்பிரிவினர்,
3. ஹோமத்தில் பாகம் பெறுகின்ற அக்னி பகவான்,
4. எந்த இடத்தில் ப்ராம்ஹண போஜனம் நடந்தாலும் அதன் மூலம் திருப்தி அடைகின்ற தேவர்கள்,
5. பிண்டப்ரதானத்தினாலும், விகிரான்னத்தினாலும் வேறு வழியில் திருப்தி பெற வாய்ப்பில்லாத நரகத்தில் இருப்பவர்
களுக்கும்,
6. பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவரும்,
இவ்வாறாக நாம் அறிந்திராத பித்ருக்கள் என பலர் நாம் செய்யும் ச்ராத்தத்தில் பல கட்டங்களில் பல மந்திரங்களின் மூலம் திருப்தி அடைகின்றனர்.

பித்ருக்களின் அனுக்ரஹம்:
நமது பித்ருக்கள் இருந்தார்கள். செத்து விட்டார்கள், இப்பொழுது இல்லை என்று முடித்து விடாமல் அவர்கள் இப்போதும் இருக்கின்றனர் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும். அவர்கள் தெய்வாம்சம் உடையவர்களாக இருப்பதால் நம்மைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். தேவர்களைப் போலவே அவர்கள் நமக்கு அனுக்ரஹம் செய்வார்கள். அவர்கள் எப்போதும் இனிமையானவர்கள். க்ரூரமானவர்கள் அல்ல. தனது கோத்ரத்தில் வந்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். பித்ருக்கள் திருப்தி அடைவதன் பயனாக ச்ராத்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம், வம்சவிருத்தி, ஆரோக்யம், ஞானம், இம்மை&மறுமையில் மேன்மை கிடைக்கின்றன.

பித்ரு சாபம்:
நாம் கடமையிலிருந்து தவறக்கூடாது. வாத்தியாரை குறை சொல்லுவதும், சாக்குபோக்குகளை தேடி கண்டுபிடிப்பதும் இப்போது அதிகமாகி வருகின்றது. இதை கைவிட வேண்டும். யாரிடம்தான் குறையில்லை? ச்ராத்தத்தை எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்பதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும். ச்ராத்தத்தை செய்யாதவன் நன்றி கெட்டவன். இதில் சந்தேகமே வேண்டாம். குதர்க்க வாதம் கூடாது. ச்ராத்தம் செய்யாமல் விட்டவர்கள் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்று விபரமாக இங்கு எடுத்துக்கூற அபிப்ராயமில்லை. சுருக்கமாக பித்ருசாபத்திற்கு அப்பேர்பட்டவர்கள் ஆளாகலாம் என்பதை மட்டுமாவது ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் நல்லது.

பித்ருக்கள் சாபமிடுவார்களா என்று நினைக்கவேண்டாம். பித்ருக்கள் கஷ்டத்தினால் பெருமூச்சு விட்டாலே நமக்கு தோஷம் ஏற்படும். பெற்ற சீரையும் செல்வத்தையும் இழந்து துன்புறவும் நேரலாம். வம்சவிருத்தி பாதிக்கலாம்.

மந்திரங்கள்:
ச்ராத்தம் செய்யும்போது மந்திரங்களை சாஸ்திரிகள் அக்ஷர சுத்தத்துடனும், ஸ்வரத்துடனும் சொல்லி வைப்பது முக்கியம். அதே மாதிரி கர்த்தா கூடியமான வரையில், அப்யாசம் இல்லா விட்டாலும், சரியாக திருப்பி சொல்ல முயற்சி செய்வதும் மிகவும் அவசியம். சிரத்தையுடன் ச்ராத்தம் செய்வதை முக்கிய கர்மாவாக வைதிக கர்மாக்களில் குறிப்பிட்டுள்ளது.

ச்ராத்த இறுதி கட்டத்தில் சிராத்த பிராஹ்மணர்களிடம் கர்த்தா மந்திர ரூபமாக வேண்டுவது என்னத் தெரியுமா? “நாங்கள் ஒருவரையும் யாசியோம். யாசிப்பவர்களுக்கு நிறைய நாங்கள் தரவேண்டும். எங்களது ச்ரத்தை எங்களிட
மிருந்து விலகக் கூடாது. வேதமும், குலமும் எப்போதும் அறுபடாமல் பெருகட்டும். உணவு நிறையக் கிடைக்க வேண்டும். அதிதிகளும் நிறைய எங்கள் வீட்டிற்கு வர வேண்டும்” என்று அவர்களிடம் கோரி ஆசி பெறுகின்றோம்.

இந்த மாதிரி அர்த்த புஷ்டியுள்ள மந்திரங்களை நாம் சரியாக உச்சரிப்பதால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்க வாய்ப்புண்டு, நினைத்து பாருங்கள்.




http://www.facebook.com/pages/Khariharan/115524648579725


Ranjani Geethalaya(Regd.) (Registered under Societies Registration Act XXI of 1860. Regn No S/28043 of 1995) A society for promotion of traditional values through,  Music, Dance, Art , Culture, Education and Social service. REGD OFFICE A-73 Inderpuri, New Delhi-110012, INDIA Email: ranjanigeethalaya@gmail.com  web: http://ranjanigeethalaya.webs.com (M)9868369793 all donations/contributions may be sent to Ranjani Geethalaya ( Regd) A/c no 3063000100374737, Punjab National Bank, ER 14, Inder Puri, New Delhi-110012, MICR CODE 110024135  IFSC CODE PUNB00306300

power by BLOGSPOT-PING






No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator