Friday 19 February 2016

கிருபானந்த வாரியார்

கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை
தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும்
வந்திருந்தார்.
-
இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண
பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான
கிண்டலுடன், "சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ,
ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.?
கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன்
வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள்.
-
வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக்
கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து
அவர்களிடம் கேட்டார், "நேத்து தூங்கினீங்களா?"
-
அவர்கள் இருவரும் "இன்னைக்குக் கல்யாணத்தை
வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது" என்றார்கள்.
வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.
-
ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச
இவங்களுக்கேத் தூக்கம் வரவில்லை… உலக மக்கள்
அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள்.
அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு
நேரம் ஏது?" என்றார்.

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator