Pages

Wednesday, 1 October 2014

படியுங்கள் : அம்மா/மனைவி யிடம் சொல்லுங்கள் : பின்பற்றுங்கள்: ஆரோக்கியமான வாழ்க்கையை கையாளுங்கள் :


படியுங்கள் : அம்மா/மனைவி யிடம் சொல்லுங்கள் : பின்பற்றுங்கள்:  ஆரோக்கியமான வாழ்க்கையை கையாளுங்கள் :    *சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால்  கையில் சிறிதளவு உப்பைத்  தடவிக் கொண்டால் கையில்  சப்பாத்தி மாவு ஒட்டாது.    *உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில்  பாத்திரங்களை கழுவினால்  பாத்திரங்கள் பளபளப்பாக  இருக்கும்.    *அரிசி மற்றும் காய்கறிகள்  கழுவிய தண்ணீரை வீணாக்காமல்  செடிகளுக்கு ஊற்றினால்  செடிகள் செழிப்பாக இருக்கும்.    *வெயில் காலத்தில் பெருங்காயம்  கட்டியாகி விடும்.  அப்படி ஆகாமலிருக்க  பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல்  பெருங்காய டப்பாவில் போட்டால்  பஞ்சு போல் மிருதுவாக  இருக்கும்.    *ரவா,மைதா உள்ள டப்பாவில்  பூச்சி, புழுக்கள் வராமல்  இருப்பதற்கு கொஞ்சம்  வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி,  புழுக்கள் வராது.  தயிர் நீண்ட நேரம் புளிக்காமல்  இருக்க இஞ்சியின்  தோலை சீவி விட்டு கொஞ்சம்  தட்டி தயிரில் போட்டால்  புளிக்கவே புளிக்காது.    *காய்கறிகளை வேகவைக்கும்போது  அதிக தண்ணீர் வைத்து வேக  வைக்க கூடாது. ஏன் என்றால்  காய்கறிகளில் உள்ள வைட்டமின்  சத்துகள் போய்விடும். அதில்  உள்ள மனமும் போய்விடும்.  காய்ந்த  மிளகாயை வறுக்கும்போது நெடி வரும்.  அவை வராமல்  இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால்  நெடி வராது.    *பச்சை மிளகாயை காம்புடன்  வைக்காமல்  காம்பை எடுத்து விட்டு நிழலான  இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.    *நெய் ப்ரெஷ்ஷாக  இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால்  ப்ரெஷ்ஷாக இருக்கும்.    *காபி டிகாஷன்  போடுவதற்கு முன்  சுடு தண்ணீரில் டிகாஷன்  பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன்  போட்டால் சீக்கிரம் காப்பித்தூள்  இறங்கிவிடும்.    *சீடை செய்யும்போது அது வெடிக்காமல்  இருப்பதற்காக சீடையை ஊசியால்  குத்திய பிறகு எண்ணெய்யில்  போட்டால் வெடிக்காது.    *சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும்  கட்டையில் முதலில்  உருண்டையாக  போட்டுவிட்டு பின்பு அதனை நாலாக  மடித்து உருட்டி போட்டால்  சப்பாத்தி மிருதுவாக  இருக்கும்.    *முட்டைகோசில் உள்ள  தண்டை வீணாக்காமல் சாம்பாரில்  போட்டு சாப்பிட்டால் மிகவும்  சுவையாக இருக்கும்.  கொழுக்கட்டை மாவு பிசையும்  போது ஒரு கரண்டி பால்  சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால்  விரிந்து போகாமல் இருக்கும்.    *எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில்  வைக்கும்போது உப்பைத்  துணியில் முடிந்து வைத்தால்  காரல் வாடை வராது.  இட்லி சாம்பாரில் கடைசியாக  மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய்,  கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில்  போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில்  அரைத்து சாம்பாரில் போட்டால்  கூடுதல் சுவையாக இருக்கும்.    *சமையலில் உப்பு அதிகமாக  போய்விட்டால்  உருளைகிழங்கை அதில்  அறிந்து போட்டால்  உப்பை எடுத்துவிடும்.    *தோசை சுடும்போது தோசைக்கல்லில்  மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல்  இருந்தால் அதற்கு கொஞ்சம்  புளியை ஒரு வெள்ளைத்துணியில்  கட்டி, அதை எண்ணெய்யில்  தொட்டு கல்லில்  தேய்த்துவிட்டு தோசை சுட்டால்  நன்றாக வரும்.    Relaxplzz

படியுங்கள் : அம்மா/மனைவி யிடம் சொல்லுங்கள் : பின்பற்றுங்கள்:
ஆரோக்கியமான வாழ்க்கையை கையாளுங்கள் :

*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால்
கையில் சிறிதளவு உப்பைத
தடவிக் கொண்டால் கையில்
சப்பாத்தி மாவு ஒட்டாது.

*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில்
பாத்திரங்களை கழுவினால்
பாத்திரங்கள் பளபளப்பாக
இருக்கும்.

*அரிசி மற்றும் காய்கறிகள்
கழுவிய தண்ணீரை வீணாக்காமல்
செடிகளுக்கு ஊற்றினால்
செடிகள் செழிப்பாக இருக்கும்.

*வெயில் காலத்தில் பெருங்காயம்
கட்டியாகி விடும்.
அப்படி ஆகாமலிருக்க
பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல்
பெருங்காய டப்பாவில் போட்டால்
பஞ்சு போல் மிருதுவாக
இருக்கும்.

*ரவா,மைதா உள்ள டப்பாவில்
பூச்சி, புழுக்கள் வராமல்
இருப்பதற்கு கொஞ்சம்
வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி,
புழுக்கள் வராது.
தயிர் நீண்ட நேரம் புளிக்காமல்
இருக்க இஞ்சியின்
தோலை சீவி விட்டு கொஞ்சம்
தட்டி தயிரில் போட்டால்
புளிக்கவே புளிக்காது.

*காய்கறிகளை வேகவைக்கும்போது
அதிக தண்ணீர் வைத்து வேக
வைக்க கூடாது. ஏன் என்றால்
காய்கறிகளில் உள்ள வைட்டமின்
சத்துகள் போய்விடும். அதில்
உள்ள மனமும் போய்விடும்.
காய்ந்த
மிளகாயை வறுக்கும்போது நெடி வரும்.
அவை வராமல்
இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால்
நெடி வராது.

*பச்சை மிளகாயை காம்புடன்
வைக்காமல்
காம்பை எடுத்து விட்டு நிழலான
இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

*நெய் ப்ரெஷ்ஷாக
இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால்
ப்ரெஷ்ஷாக இருக்கும்.

*காபி டிகாஷன்
போடுவதற்கு முன்
சுடு தண்ணீரில் டிகாஷன்
பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன்
போட்டால் சீக்கிரம் காப்பித்தூள்
இறங்கிவிடும்.

*சீடை செய்யும்போது அது வெடிக்காமல்
இருப்பதற்காக சீடையை ஊசியால்
குத்திய பிறகு எண்ணெய்யில்
போட்டால் வெடிக்காது.

*சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும்
கட்டையில் முதலில்
உருண்டையாக
போட்டுவிட்டு பின்பு அதனை நாலாக
மடித்து உருட்டி போட்டால்
சப்பாத்தி மிருதுவாக
இருக்கும்.

*முட்டைகோசில் உள்ள
தண்டை வீணாக்காமல் சாம்பாரில்
போட்டு சாப்பிட்டால் மிகவும்
சுவையாக இருக்கும்.
கொழுக்கட்டை மாவு பிசையும்
போது ஒரு கரண்டி பால்
சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால்
விரிந்து போகாமல் இருக்கும்.

*எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில்
வைக்கும்போது உப்பைத்
துணியில் முடிந்து வைத்தால்
காரல் வாடை வராது.
இட்லி சாம்பாரில் கடைசியாக
மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய்,
கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில்
போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில்
அரைத்து சாம்பாரில் போட்டால்
கூடுதல் சுவையாக இருக்கும்.

*சமையலில் உப்பு அதிகமாக
போய்விட்டால்
உருளைகிழங்கை அதில்
அறிந்து போட்டால்
உப்பை எடுத்துவிடும்.

*தோசை சுடும்போது தோசைக்கல்லில்
மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல்
இருந்தால் அதற்கு கொஞ்சம்
புளியை ஒரு வெள்ளைத்துணியில்
கட்டி, அதை எண்ணெய்யில்
தொட்டு கல்லில்
தேய்த்துவிட்டு தோசை சுட்டால்
நன்றாக வரும்.




 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment