Monday 31 March 2014

விமானம் பறப்பது எப்படி?

விமானம் பறப்பது எப்படி?

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறதுஎன்பதுதான்.

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பிபறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்
சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது

இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டி இருக்கிறது.

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு.

A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் - Thrust

C கீழ்நோக்கி இழுக்கும் எடை - Weight

D பின்னோக்கி இழுக்கும் டிராக் - Drag

ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்கவேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

விமானத்தின் எடை 'லிப்ட்' விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம்கீழிறங்கும்

விமானத்தின் 'லிப்ட்' விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போதுவிமானம் மேல் எழும்பும்

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கானவிசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையைகொடுப்பது இஞ்சின்,

அதே போல விமானத்தில் 'டிராக் விசையை கொடுப்பது' காற்றினால் விமானத்தில்ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம்மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்).

ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம்மெதுவாக முடியாது.
(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும்,

ஏன் விமானம் மேலே எழும்பியவுடன்சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்னகெட்டுவிட்டது என்று.

இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும்உராய்வை தடுப்பதுதான்.

அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவுஇருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவிஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்திஆகிறது என்பதுதான்.

இது சற்று சுவாரஸ்யமானது

எலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர்சொல்லிவிடுவார்கள்,

விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலேஎப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்றுமறைமுகமாக
விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் .

இந்த மூன்றில் ஒன்றுஇல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது ,

விமானம் பறக்காது.

அதாவது இறக்கைஇல்லாவிட்டாலும் பறக்க முடியாது,

விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்கமுடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்கவேண்டும்).

விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கிவளைந்திருக்கும்.

கீழ்பாகம் தட்டையாக இருக்கும்.

இதை சாதாரணமாக இறக்கையைபார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது,

அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக?

இங்குதான் விஷயம் உள்ளது

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின்இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது,

கீழ்புறம்காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம்குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள்ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்தகாற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ்வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்

அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிகபரப்பளவுள்லதாக இருக்கும்
இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது?

சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின்எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பதுதெளிவாகிறது அல்லவா? 
,
அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது.

(எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அதுஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம்எலிகாப்டருக்கு வராது)

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது
விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்தவேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூடவிமானம் தூக்கப்பட்டுவிடும்.

கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள்பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றேஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது,

அப்போதுதான் அதன் இறக்கையில்மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும்.

அந்த வேகத்திலிருந்துகுறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும்.

மெதுவாக போவது, சாவகாசமாகபோவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது.

ஒரு டெயில் பீஸ்,

இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில்மட்டும்தான்.

பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கைதேவைப்படாது

....


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

வசந்த நவராத்திரி The 9 Holy Nights of Spring - From March 31, 2014 to April 8, 2014.

வசந்த நவராத்திரி 

The 9 Holy Nights of Spring - 

From March 31, 2014 to April 8, 2014.

Goddess Durga is worshipped during Navaratri

தேவி வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறையாகும். 

தேவி வழிபாட்டின், பண்டி கைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள்தான். 

குளிர்கால (புரட்டாசி மாதம்) ஆரம்பமும் கோடை கால (பங்குனி மாதம்) ஆரம்பமும் எமனின் இரு தாடைகளாக விளங்குவதாக அக்கினி புராணம் கூறுகிறது. 

அந்த இரு தாடை களிலும் படாமல், அந்த இரு மாதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நீண்ட நல்வாழ்வு வாழ அருளக் கூடியவள் அம்பிகை மட்டுமே. 

புரட்டாசி மாதம், குளிர் காலத்தின் ஆரம்பம். 

பங்குனி மாதம், கோடையின் துவக்கம். 

இந்த இரு காலங்களுக்குள் அமையும் நவராத்திரிகளை அனுசரித்தால் நன்மை பயக்கும்.

பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள். 

அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமா னவை நான்கு. 

பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி ; 

ஆடி மாதத்தில், ஆஷாட நவராத்திரி; 

புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரி; 

தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. 

சக்தி வழிபாடு செய்யும் ஸ்ரீவித்யா உபாசகர்கள் இந்த நான்கு நவராத்திரி களையும் கொண்டாடுவது வழக்கம். 

வருடத்தை ஆறு ருதுக்களாக ஆன்றோர்கள் பிரித்துள்ளார்கள். 

ஒரு ருதுவுக்கு இரண்டு மாதங்கள். 

அந்த ருதுக்களில் 'ரிதூநாம் குஸுமாகர:' என்று ஸ்ரீ கிருஷ்ண பகவானால் சொல்லப்படுவது வஸந்தருது.

பருவங்களில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வஸந்தருது. 

இந்த வஸந்த ருதுவே வசந்த காலம். 

அதாவது, வாழ்வில் வசந்தம் தொடங்கக் கூடிய காலம். 

வயல்களில் அறுவடை முடிந்து, வளம் பொங்கக் கூடிய காலம். 

மக்களின் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும் காலம். 

வசந்த நவராத்திரி, பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்படும். 

மறுநாள், தெலுங்கு வருடப் பிறப்பாகிய யுகாதிப் பண் டிகை அமையும். 

இந்த நவராத்திரி ஸ்ரீராம நவமியுடன் முடியும் (நவராத்திரி நிர்ணயம் எனும் புத்தகத்தில், வசந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடி னால் உலகம் க்ஷேமம் அடையும் என்றும் ஒரு பட்சம் அதாவது, 15 நாட்கள் (அமாவாசை முதல் பௌர்ணமி வரை) கொண்டாடினால் வேண்டும் வரங்கள் கிட்டும் என்றும் ஒரு மண்டலம், அதாவது, பங்குனி அமாவாசை முதல் சித்ரா பௌர்ணமி வரை 45 நாட்கள் கொண்டாடுவது சகல கார்யங் களிலும் வெற்றியைத் தரும் என்றும் கூறுகின்றது.)

பொதுவாக வட இந்தியாவிலும் தென் இந்தியாவில் சில கோயில்களிலும் மட்டுமே கொண்டாடப்படுகிறது இந்த வசந்த நவராத்திரி. 

வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது. 

மேரு எனும் ஸ்ரீசக்ரம் அமைந்திருக்கும் ஆலயங்களில் வசந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும். 

ஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப் பெறும். 

ஒன்பது தினங்களிலும் அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். 

மாலை வேளையில் அம்பி கைக்கு உகந்த, சாக்தத்தின் மிக உயர்நிலை பூஜையான ஸ்ரீநவாவரண பூஜையும் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையும் கன்யா பூஜையும் ஸுவாஸினி பூஜையும் நடைபெறும். 

வசந்த நவராத்திரி வழிபாட்டால், பெண் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

கன்னியர்கள் திருமணம் நிறைவேறப் பெறுவார்கள். 

சுமங்கலிகள் மாங்கல்ய பலம் பெறுவார்கள். 

வசந்த நவராத்திரியை அனுஷ்டிக்கிறவர்களுக்கு கடன் தொல்லைகள் தீர்வதோடு, கணவன்-மனைவி உறவு பலப்படும்; 

அன்யோன்யம் உண்டாகும். 

அக்கினி புராணத்தில் ஒரு வருடத்தில் 4 நவராத்திரிகளையும் கொண்டாட முடியாதவர்கள் சாரதா நவராத்திரி மற்றும் வசந்த நவராத்திரியையாவது விர தம் அனுஷ்டித்து கொண்டாடுவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. 

ஆகவே பங்குனி மாதம் அனுஷ்டிக்கப்படும் வசந்த நவராத்திரியை சக்தி வழிபாடாகச் செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். புரட்டாசி நவராத்திரி மாதிரி கோலாகலமாகக் கொண்டாடாவிட்டாலும், அவரவர் இல்லத்தில் எளிய முறையில் கொண்டாடலாம். 

அருகில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சென்றும் வசந்த நவராத்திரி விழாவில் பங்கேற்கலாம். 

வசந்த நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் பெண்களை சக்திகளாக நினைத்து கௌரவிக்க வேண்டும். 

அவர்களுக்கு தாம்பூலம், மஞ்சள், கண் ணாடி, சீப்பு, குங்குமச் சிமிழ், தேங்காய், பழம், புத்தகங்கள், ரவிக்கைத் துணி கொடுத்து அனுப்ப வேண்டும். 

நவராத்திரி 9 நாட்களும் 9 கன்னியரை சக்தியாக பூஜிப்பது குடும்பத்துக்கு நல்லது. 

அம்பிகை சங்கீதப் பிரியை. 

எனவே வசந்த நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாடலாவது பாட வேண்டும். 

முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. 

வசந்த நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும். 

வசந்த நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

வசந்த நவராத்திரி தொடர்பான சுலோகம், மந்திரம் தெரியவில்லையா? 

கவலைப் படாதீர்கள். 

'ஓம் ஸ்ரீ லலிதா தேவ்யை நமஹ' என்பதை 108 தடவை சொன்னால் போதும், உரிய பலன் கிடைக்கும். 

சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும் வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் வசந்த நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும். 

தர்மபுரி கல்யாணகா மாட்சி ஆலயத்தில் வசந்த நவராத்திரி விரதத்தை ஸ்ரீராமன் கடைப்பிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது. 

தேவியை இந்த வசந்த நவராத்திரி நாட்களில் கட்கமாலா துதி, லலிதா த்ரிசதி, லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தர்யலஹரி, ஆச்ரேய அஷ்டோத்திரம் போன்ற துதிகளால் அர்ச்சித்து வளங்கள் பெறலாம்.

Vasanta Navaratri

The 9 Holy Nights of Spring - From March 31, 2014 to April 8, 2014.
Goddess Durga is worshipped during Navaratri

Navaratri ("nava" + "ratri") literally means "nine nights." This ritual is observed twice a year, in spring and in autumn. "Vasanta Navaratri" or Spring Navaratri is nine days of fast and worship that Hindus undertake during spring every year. Swami Sivananda retells the legend behind this 9-day springtime ritual during which the devout Hindu seeks the blessings of the Mother Goddess.

"The Divine Mother or Devi is worshipped during the Vasanta Navaratri. This occurs during the spring. She is worshipped by Her own command. You will find this in the following episode in the Devi Bhagavata.
The Story Behind the Origin of Vasanta Navaratri
In days long gone by, King Dhruvasindu was killed by a lion when he went out hunting. Preparations were made to crown the prince Sudarsana. But, King Yudhajit of Ujjain, the father of Queen Lilavati, and King Virasena of Kalinga, the father of Queen Manorama, were each desirous of securing the Kosala throne for their respective grandsons. They fought with each other. King Virasena was killed in the battle. Manorama fled to the forest with Prince Sudarsana and a eunuch. They took refuge in the hermitage of Rishi Bharadwaja.

The victor, King Yudhajit, thereupon crowned his grandson, Satrujit, at Ayodhya, the capital of Kosala. He then went out in search of Manorama and her son. The Rishi said that he would not give up those who had sought protection under him. Yudhajit became furious. He wanted to attack the Rishi. But, his minister told him about the truth of the Rishi's statement. Yudhajit returned to his capital.

Fortune smiled on Prince Sudarsana. A hermit's son came one day and called the eunuch by his Sanskrit name Kleeba. The prince caught the first syllable Kli and began to pronounce it as Kleem. This syllable happened to be a powerful, sacred Mantra. It is the Bija Akshara (root syllable) of the Divine Mother. The Prince obtained peace of mind and the Grace of the Divine Mother by the repeated utterance of this syllable. Devi appeared to him, blessed him and granted him divine weapons and an inexhaustible quiver.

The emissaries of the king of Benares passed through the Ashram of the Rishi and, when they saw the noble prince Sudarsana, they recommended him to Princess Sashikala, the daughter of the king of Benares.
The ceremony at which the princess was to choose her spouse was arranged. Sashikala at once chose Sudarsana. They were duly wedded. King Yudhajit, who had been present at the function, began to fight with the king of Benares. Devi helped Sudarsana and his father-in-law. Yudhajit mocked Her, upon which Devi promptly reduced Yudhajit and his army to ashes.

Thus Sudarsana, with his wife and his father-in-law, praised Devi. She was highly pleased and ordered them to perform Her worship with havan and other means during the Vasanta Navaratri. Then She disappeared.
Prince Sudarsana and Sashikala returned to the Ashram of Rishi Bharadwaja. The great Rishi blessed them and crowned Sudarsana as the king of Kosala. Sudarsana and Sashikala and the king of Benares implicitly carried out the commands of the Divine Mother and performed worship in a splendid manner during the Vasanta Navaratri.

Sudarsana's descendants, namely, Sri Rama and Lakshmana, also performed worship of Devi during the Vasanta Navaratri and were blessed with Her assistance in the recovery of Sita.

Why Celebrate Vasanta Navaratri?
It is the duty of the devout Hindus to worship the Devi (Mother Goddess) for both material and spiritual welfare during the Vasanta Navaratri and follow the noble example set by Sudarsana and Sri Rama. He cannot achieve anything without the Divine Mother's blessings. So, sing Her praise and repeat Her Mantra and Name. Meditate on Her form. Pray and obtain Her eternal Grace and blessings. May the Divine Mother bless you with all divine wealth!"
Vasant Navratri March - April 2014
Vasant Navratri, also known as Vasant Navratras, begins on March 31, 2014. This festival of nine nights in Hinduism is dedicated to Goddess Durga, Lakshmi and Saraswati. It is also known as Chaitra Navratras or Spring Navratri or Basant Navratri. As this Navratra coincides with Ram Navami, it also referred as Ram Navratri. The dates are from March 31, 2014 to April 8, 2014.

Vasant Navratri is observed in the Hindu month of Chaitra (March – April). It is believed that Goddess Durga was originally worshipped (Durga Puja) in the Chaitra month and was also referred as Basanti Puja. It was Lord Ram who changed the period of Durga Puja.

Vasant Navratri 2014 dates
• Ghatsthapana – Navratri Day 1 – March 31, 2014
• Sindhara Dooj, Dwitiya - April 1, 2014
• Gaur Teej, Saubhagya Teej, Tritiya - April 2, 2014
• Varadvinayak Chaturthi - April 3, 2014
• Sri Laxmi Panchami Vrat, Naag Vrat Pujan - April 4, 2014
• Skand Shashthi, Yamuna Jayanti - April 5, 2014
• Mahasaptami Vrat, Chaiti Chath, Vijaya Saptami - April 6, 2014
• Sri Durga Mahaashtami, Annapurna Ashtami - April 7, 2014
• Vasant Navratri ends – Ram Navratri Day 9 – April 8, 2014

Lord Ram wanted to get the blessings of Goddess Durga before beginning the war with Ravana. Therefore he invoked Goddess Durga during Ashwin (October – November). This is why the Durga Puja during October is also known as Akal Bodhon or untimely invocation.

The Vasant or Spring Navratri is widely observed in Himachal Pradesh, Uttarakhand (Uttaranchal), Haryana, Punjab and Jammu and Kashmir. Most Hindu devotees in this part of India undertake Navratri Vrat or fasting. The festival occurs during the beginning of summer season. And it is said that the fasting helps in adapting the body to the changing climate.

Some of the important Temple fairs in Himachal Pradesh and Uttarakhand are organized during this period.

Almost all the rituals observed during Navratri (held in October-November) are also observed during Vasant Navrati.

One of the important events in Haryana and Punjab is the worshipping of little girls. These little girls symbolically represent Goddess Durga and are known as 'kanjaks.' It is performed on the eight day or the Ashtami day.

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள்.

கன்னட , மற்றும் தெலுங்கு நண்பர்கள் அனைவருக்கும் யுகாதி தின நல் வாழ்த்துகள்.

யுகாதி ஒரு சிறப்புப் பார்வை 

இது ஆந்திர கர்நாடக மராட்டிய மாநிலங்களில் கொண்டாடப்படும் புத்தாண்டு நாள்.

யுகாதி என்றால் யுகத்தின் ஆதி அதாவது ஆரம்பம் என்று பொருள். 

இப்பொழுது நடப்பது கலியுகம். 

அப்படியானால் இது கலியுகம் ஆரம்பித்த தினத்தின் வருட ஆரம்பத்தைக் குறிக்கிறதா?

கலியுகம் கிருஷ்ண அவதாரம் முடிந்ததிலிருந்து துவங்கியதாகக் கருதப்படுகிறது. 

இது, ஆங்கில வருடம் (சரியாகச் சொன்னால் ரோம வருடங்கள்) கி.மு.3102-ல் – க்ரெகேரிய நாட்காட்டியில் ஜனவரி 23-ம் தேதியிலும், ஜூலியன் நாட்காட்டியில் (தற்போது நடைமுறையில் உள்ளது) 

ஃபெப்ரவரி 18-ம் தேதியிலும் - துவங்கியதாகக் கூறுவர். யுக ஆரம்பத்தில் அணைத்து கிரகங்களும் ஒரே இடத்தில் ஆரம்பம் ஆவதாகக் கொண்டு கணக்கிடுவர். 

இதை கருத்தில் கொண்டு ஆர்யபட்டர் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கணக்கிட்டதை அடிப்படையாகக் கொண்டு இந்த தேதியைக் கூறுவர். 

பின்னர், பல்வேறு வானியல் நிபுணர்கள் கெப்லரின் முறையைக் கையாண்டும் தற்போதைய கருவிகளைக் கொண்டும் ஆர்யபட்டரின் இந்தக் கணக்கை உறுதிப் படு்த்தியுள்ளனர். 

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 20.02.2012 அன்று கலி பிறந்த 5113-ஆண்டு தினம் வந்து சென்று விட்டது.

பின் இப்பொழுது இன்று யுகாதி என்று ஏன் கொண்டாடுகிறார்கள்?

வட மொழியில் யுக்மம் என்றால் இரண்டு; இந்த வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த்து தான் யோகம் என்ற சொல். 

யோகம் என்றால் இணைப்பு அல்லது இணைவது; யோக சாஸ்த்ரம் என்பது உடலும் உள்ளமும் இணைந்து கட்டுப்படுவது. 

அதே வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தது தான் யுகம். இதற்கும் சதுர் யுகம் என்பதற்கும் 'யுகம்' என்ற வார்த்தையைத் தவிர வேறு சம்பந்தம் இல்லை. 

அதனால் இந்த யுகாதியை சதுர்யுகங்களின் ஆதி (ஆரம்பம்) என்று கொள்ளக் கூடாது.

சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் 0 டிகிரி புள்ளியில் இணைவதைத் தான் இங்கு 'யுகம்' என்று குறிக்கின்றனர். 

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் அதே ஆரம்ப இடத்தில் இணையும். 

ஆனால் சூரிய, சந்திர சுழற்சி நாட்காட்டியை பயன்படுத்துபவர்கள் முறையே சூரியன், சந்திரன் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் அந்த 0 டிகிரியைத் தொடும் தினங்களை அவரவர் வருடப் பிறப்பாகக் கொண்டாடுவர்.

பொதுவாக நாட்காட்டிகள் மூன்று வகைப்படும். 

அவை,

1. சௌர (அ) சூரிய நாட்காட்டிகள் (Solar calendars);

2. சந்திர நாட்காட்டிகள் (Lunar calendars) ;

3. சந்த்ர-சௌர நாட்காட்டிகள் (luni-solar calendars)

சூரிய ஆண்டு என்பது பூமி சூரியனைச் சுற்ற எடுத்துக் கொள்ளும் ஆண்டு. 

இதில் சந்திரன் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. 

உதாரணம்: 

க்ரெகாரிய ஜூலியன் நாட்காட்டிகள்; இந்தியாவில் தமிழக கேரள நாட்காட்டிகள் – இவை, சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு செல்வதை (வடமொழியில் சங்கராந்தி என்பர்) மாதமாகக் கொள்வர். 

இந்தியாவில் இந்த சௌர மாதத்தில் நான்கு வெவ்வேறு வகைகள் உள்ளன. (அவற்றைப் பற்றி வெறு ஒரு சமயத்தில் பார்க்கலாம்).

சந்திர ஆண்டு என்பது புதுச் சந்திரன் வளர்ந்து பின் தேய்ந்து மறைந்து பின் புதுச் சந்திரனாக ஆரம்பிக்கும் காலத்தை (அல்லது) பௌர்ணமி சந்திரன் தேய்ந்து பின் வளர்ந்து பின் பௌர்ணமியாக மாறும் காலமான, சுமார் 30 நாட்களை (மாதாமாதம் இது 29.45 முதல் 31.45 நாட்கள் வரை வேறுபடும்) ஒரு மாதமாகக் கணக்கிட்டு 12 மாதங்களை ஒரு ஆண்டாக (30 X 12 = சுமார் 360 நாட்கள்) கணக்கிடப்படும் நாட்காட்டி. 

இதில் சூரியனை பூமி சுற்றுவது கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. 

12 மாதங்கள் முடிந்தவுடன் அடுத்த ஆண்டு துவங்கிவிடும். 

உதாரணம் : 

இஸ்லாமிய நாட்காட்டி; இதில் அமாவாசை முடிந்து அடுத்து பிறைத் தெரியும் நாளிலிருந்து மாதம் ஆரம்பிக்கும். 

இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது சந்திர மாதம் சராசரியாக 30 நாட்களைக் கொண்டது (சராசரி என்பதை கவனிக்கவும் – அதாவது சில மாதங்கள் 30 தினத்திற்குக் குறைவாகவும் சில மாதங்களில் 30 தினத்திற்கு அதிகமாகவும் இருக்கலாம்).

மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்ட சந்தர-சௌர நாட்காட்டி என்பது, சந்திர ஆண்டுபடி மாதங்களைக் கொண்டிருந்தாலும் சூரியனைச் சுற்ற பூமி எடுத்துக் கொள்ளும் 365.2564 நாட்களின் மீதமுள்ள சுமார் 5/6 நாட்களைச் சேர்த்து சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை "அதிக" மாதமாக கொள்வது ஆகும். 

இந்த முறை இந்தியாவில் ஆரம்பி்க்கப்பட்டது (தற்போது நேபால், பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற பிற நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது). 

சீன நாட்காட்டியும் சந்திர-சௌர நாட்காட்டியே.

இந்த சந்தர-சௌர நாட்காட்டிக் கணக்கிடுவதில் பலவித வழிமுறைகளும் பலவித நாட்காட்டிகளும் வழக்கத்தில் உள்ளன. 

பொதுவாக வழக்கத்தில் உள்ள முக்கிய இரண்டு வகைகளைப் பார்க்கலாம். அவை,

1. அமந்த நாட்காட்டி (அ) முக்ய மன முறை;

2. பூர்ணிமந்த நாட்காட்டி (அ) கௌன மன முறை

அமந்த நாட்காட்டி என்பது, அமாவாசைக்கு அடுத்து புது நிலவு வளரத் துவங்கி வளர்ந்து பின் முழுவதுமாகத் தேய்வதை ஒரு மாதமாகக் கொள்வது. 

யுகாதி என்று இன்று கொண்டாடப்படும் வருடமும் இந்த அமந்த நாட்காட்டியின் அடிப்படையில் அமைந்த ஆண்டின் துவக்கமே. 

இந்த வகை நாட்காட்டியில் மாதங்களின் பெயர்கள் நடுவில் வரும் சூரியமாதங்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு இருக்கும். 

உதாரணத்திற்கு 23.3.2014-ல் துவங்கும் இந்த மாதம் அடுத்த அமாவாசை அதாவது 21.04.2014 வரை இருக்கும். 

இதன் நடுவில் 14.04.2014 அன்று துவங்கும் சூரியமாதம் (தமிழ் புத்தாண்டு) சித்திரை மாதம். எனவே, இந்த அமந்த மாதமும் சித்திரை என்றே அழைக்கப்படும். 

ஆனால், சில வேளைகளில் இது மாறவும் செய்யும். உதாரணத்திற்கு, இந்த வருட தமிழ் மாதமான புரட்டாசியில் இரண்டு அமாவாசைகள் (1, 30 தேதிகளில்) வருகின்றன. 

1-ம் தேதி முடியும் மாதம் பாத்ரபாதம் (இதன் தமிழ் மரூஉ தான் புரட்டாசி) என்றும் 30-தேதி முடியும் மாதம் ஆச்வினம் (அஸ்வினி அல்லது ஐப்பசி) என்றும் குறிப்பிடப்படுகின்றன. 

சில சந்திர மாதங்களி்ன் நடு்வில் சங்கராந்தி எதுவும் வராமல் இருந்துவிடும். 

அச்சமயங்களில் முதலில் வரும் மாதம் பின் வரும் மாதத்தின் 'அதிக' மாதமாகக் கொள்ளப்படும்; 

பின்னால் வரும் மாதம் அந்த மாதத்தின் 'நிஜ' மாதம் என்று அழைக்கப்படும். 

பண்டிகைகள் 'நிஜ' மாதங்களை அடிப்படையாகக் கொண்டே கொண்டாடப்படும்.

இதைத் தவிர 'க்ஷய' (அதாவது குறை) மாதம் என்று ஒன்று உண்டு. இதில், ஒரு சந்திர மாதத்தில் இரண்டு சங்கராந்தி வரும். 

க்ஷய ஆண்டுகள் 19, 46, 65, 76, 122, 141 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு விதங்களில் வரும்.

'குறை' மாதமும் 'அதிக' மாதமும் அடுத்தடுது வருவது மிகமிக அபூர்வம். இது கடைசியாக 1315-ல் அக்டோபர் 18 – நவம்பர் 15 வரை 'அதிக' கார்த்திகை மாதமாகவும் நவம்பர் 16 – டிசம்பர் 15 வரை (விருச்சிக-தனுர் சங்கராந்திகள் நிகழ்ந்ததால்) கார்த்திகை-மார்கசீர்ஷ 'குறை' மாதமாகவும் இருந்தன. டிசம்பர் 16 இலிருந்து (அடுத்த ஜனவரி 15க்குள் மகர சங்கராந்தி வந்துவிடுவதால்) புஷ்ய மாதம் ஆரம்பித்தது.

மற்ற நாட்காட்டிகளைப் பற்றி வேறு ஒரு சமயத்தில் பார்ப்போம்...

இந்த அமந்த நாட்காட்டிகளை ஆந்திரம், கர்நாடகம், மராட்டிய மாநில மக்கள் பின்பற்றுகின்றனர். 

அதை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் இன்று இந்த நாளை 'யுகாதி'யாக அதாவது வருடப் பிறப்பாக்க் கொண்டாடுகின்றனர்.

அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள்.

......

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

Sunday 30 March 2014

“பழங்களின் தமிழ்ப்பெயர்களை தெரிந்து கொள்வோமா?”

"பழங்களின் தமிழ்ப்பெயர்களை தெரிந்து கொள்வோமா?"

.
தமிழ் பழம் அருஞ்சொற்பொருள்/ TAMIL FRUITS GLOSSARY

APPLE – அரத்திப்பழம், குமளிப்பழம் 

APRICOT – சர்க்கரை பாதாமி 

AVOCADO – வெண்ணைப் பழம் 

BANANA – வாழைப்பழம் 

BELL FRUIT – பஞ்சலிப்பழம் 

BILBERRY – அவுரிநெல்லி 

BLACK CURRANT – கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி 

BLACKBERRY – நாகப்பழம் 

BLUEBERRY – அவுரிநெல்லி 

BITTER WATERMELON – கெச்சி 

BREADFRUIT – சீமைப்பலா, ஈரப்பலா 

CANTALOUPE – மஞ்சள் முலாம்பழம் 

CARAMBOLA – விளிம்பிப்பழம் 

CASHEWFRUIT – முந்திரிப்பழம் 

CHERRY – சேலா(ப்பழம்) 

CHICKOO – சீமையிலுப்பை 

CITRON – கடாரநாரத்தை 

CITRUS AURANTIFOLIA – நாரத்தை 

CITRUS AURANTIUM – கிச்சிலிப்பழம் 

CITRUS MEDICA – கடரநாரத்தை 

CITRUS RETICULATA – கமலாப்பழம் 

CITRUS SINENSIS – சாத்துக்கொடி 

CRANBERRY – குருதிநெல்லி 

CUCUMUS TRIGONUS – கெச்சி 

CUSTARD APPLE – சீத்தாப்பழம் 

DEVIL FIG – பேயத்தி

DURIAN – முள்நாரிப்பழம்

EUGENIA RUBICUNDA – சிறுநாவல் 

GOOSEBERRY – நெல்லிக்காய் 

GRAPE – கொடிமுந்திரி, திராட்சைப்பழம் 

GRAPEFRUIT – பம்பரமாசு 

GUAVA – கொய்யாப்பழம் 

HANEPOOT – அரபுக் கொடிமுந்திரி 

HARFAROWRIE – அரைநெல்லி 

JACKFRUIT – பலாப்பழம் 

JAMUN FRUIT – நாவல்பழம் 

KIWI – பசலிப்பழம்

LYCHEE – விளச்சிப்பழம் 

MANGO FRUIT – மாம்பழம் 

MANGOSTEEN – கடார முருகல் 

MELON – வெள்ளரிப்பழம் 

MULBERRY – முசுக்கட்டைப்பழம் 

MUSCAT GRAPE – அரபுக் கொடிமுந்திரி 

ORANGE – தோடைப்பழம், நரந்தம்பழம் 

ORANGE (SWEET) – சாத்துக்கொடி 

ORANGE (LOOSE JACKET) – கமலாப்பழம் 

PAIR – பேரிக்காய் 

PAPAYA – பப்பாளி 

PASSIONFRUIT – கொடித்தோடைப்பழம் 

PEACH – குழிப்பேரி 

PERSIMMON – சீமைப் பனிச்சை 

PHYLLANTHUS DISTICHUS – அரைநெல்லி 

PLUM – ஆல்பக்கோடா 

POMELO – பம்பரமாசு 

PRUNE – உலர்த்தியப் பழம் 

QUINCE – சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம் 

RAISIN – உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை 

RASPBERRY – புற்றுப்பழம் 

RED BANANA – செவ்வாழைப்பழம் 

RED CURRANT – செந்திராட்சை, செங்கொடிமுந்திரி 

SAPODILLA – சீமையிலுப்பை 

STAR-FRUIT – விளிம்பிப்பழம் 

STRAWBERRY – செம்புற்றுப்பழம் 

SWEET SOP – சீத்தாப்பழம் 

TAMARILLO – குறுந்தக்காளி 

TANGERINE – தேனரந்தம்பழம் 

UGLI FRUIT – முரட்டுத் தோடை 

WATERMELON – குமட்டிப்பழம், தர்பூசணி 

WOOD APPLE – விளாம்பழம் 

....

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator