தெய்வம் பேசுமா? ஆம்! தெய்வம் பேசும்!. ஆம்! பேசியது ஆம்! தெய்வம் பேசிக்கொண்டிருக்கிறது – இன்னும் பலருக்கு சூக்ஷ்ம வடிவில்.
காஞ்சி மஹாஸ்வாமிகள் என்னும் அந்த ஒரு நடமாடும் தெய்வம் நமக்காகவே வாழ்ந்தது . நம் துயர் களைவதற்காகவே வாழ்ந்தது. இவர் நமக்கு ஆச்சார்யராக வந்தது . அது அவரது கருணையே தவிர நாமோ நம் முன்னோர்களோ செய்த புண்ணியம் அல்ல. சிவனை நாம் பார்த்தது இல்லை; அம்பாளை நாம் பார்த்தது இல்லை; நாம் நாராயணனைப் பார்த்தது இல்லை –
தேவை இல்லை; நாம் நம் காஞ்சி மஹாஸ்வாமி குருவைப் பார்த்து விட்டோம்.
காஞ்சி ஆச்சார்ய சுவாமிகளின் அன்பு மொழிகளில் அருள் கனிகிறது. புராணங்களையோ – இதிகாசங்களையோ – வேதங்களையோ – தர்ம சாஸ்திரங்களையோ அனைவராலும் முழுதும் படிக்க முடியாது. பெரியவர்கள் அவற்றை எல்லாம் முழுதும் படித்து நமக்கு சாறு பிழிந்து தருவது போல் நமக்கு தந்துள்ளார்கள். அத்தனையும் அருட்கனிச்சாறுகள்.
இந்து மதத்தின் பெருமையையும், நமது பண்பாட்டின் அருமையையும், கடவுளின் வடிவங்களையும், வேத சாரங்களையும், வாழ்வியலின் இலக்கணங்களையும், சகல துறைச் சாஸ்திரங்களையும், தத்துவ உண்மைகளையும், பாமரரும் புரிந்துகொள்ளும் வண்ணம் நமக்கு தந்துள்ளார்கள்.
ஒரே ஒரு சூரியன் தான் உள்ளது. கையிலே கொஞ்சம் ஜலத்தை எடுத்துக் கொண்டு நல்ல வழுவழுப்பான தரையில் அதைத் தெளித்தால் ஒவ்வொரு முத்து ஜலத்திலும் பிரதி ரூபமாக ஒரு சூரியன் தெரிகிறது. அவையெல்லாம் பிரிந்து பிரிந்து காணப்பட்டாலும் அனேக சூரியங்கள் இருப்பதாக ஆகாது. சூரியன் ஒன்று தான்; அவ்வாறே உலகில் காணும் இத்தனை ஜீவராசிகளுக்குள் சிறியதாக மினுமினுக்கிற அறவோளி அனைத்தும் ஒரே ப்ரம்மத்தின் ப்ரதிபலிப்புதான்.
இதனைச் சொன்னவர் மஹாஸ்வாமி!
அந்த ப்ரம்மத்தை அறிய குருவானவரைச் சரண்புகுந்து போற்றுவோமாக! மொத்தத்தில் காஞ்சி மஹாஸ்வாமி ஒரு அருட்பெரும் அறிவுக் களஞ்சியம்; ஞானக் களஞ்சியம். மகா பெரியவாளின் பாதார விந்தத்தில் நமஸ்கரித்து இந்த தெய்வத்தின் அருள் உண்மைகளை அடுத்த சந்ததியினர்க்கும் காட்டுவோம்.
காஞ்சி மஹாஸ்வாமிகள் என்னும் அந்த ஒரு நடமாடும் தெய்வம் நமக்காகவே வாழ்ந்தது . நம் துயர் களைவதற்காகவே வாழ்ந்தது. இவர் நமக்கு ஆச்சார்யராக வந்தது . அது அவரது கருணையே தவிர நாமோ நம் முன்னோர்களோ செய்த புண்ணியம் அல்ல. சிவனை நாம் பார்த்தது இல்லை; அம்பாளை நாம் பார்த்தது இல்லை; நாம் நாராயணனைப் பார்த்தது இல்லை –
தேவை இல்லை; நாம் நம் காஞ்சி மஹாஸ்வாமி குருவைப் பார்த்து விட்டோம்.
காஞ்சி ஆச்சார்ய சுவாமிகளின் அன்பு மொழிகளில் அருள் கனிகிறது. புராணங்களையோ – இதிகாசங்களையோ – வேதங்களையோ – தர்ம சாஸ்திரங்களையோ அனைவராலும் முழுதும் படிக்க முடியாது. பெரியவர்கள் அவற்றை எல்லாம் முழுதும் படித்து நமக்கு சாறு பிழிந்து தருவது போல் நமக்கு தந்துள்ளார்கள். அத்தனையும் அருட்கனிச்சாறுகள்.
இந்து மதத்தின் பெருமையையும், நமது பண்பாட்டின் அருமையையும், கடவுளின் வடிவங்களையும், வேத சாரங்களையும், வாழ்வியலின் இலக்கணங்களையும், சகல துறைச் சாஸ்திரங்களையும், தத்துவ உண்மைகளையும், பாமரரும் புரிந்துகொள்ளும் வண்ணம் நமக்கு தந்துள்ளார்கள்.
ஒரே ஒரு சூரியன் தான் உள்ளது. கையிலே கொஞ்சம் ஜலத்தை எடுத்துக் கொண்டு நல்ல வழுவழுப்பான தரையில் அதைத் தெளித்தால் ஒவ்வொரு முத்து ஜலத்திலும் பிரதி ரூபமாக ஒரு சூரியன் தெரிகிறது. அவையெல்லாம் பிரிந்து பிரிந்து காணப்பட்டாலும் அனேக சூரியங்கள் இருப்பதாக ஆகாது. சூரியன் ஒன்று தான்; அவ்வாறே உலகில் காணும் இத்தனை ஜீவராசிகளுக்குள் சிறியதாக மினுமினுக்கிற அறவோளி அனைத்தும் ஒரே ப்ரம்மத்தின் ப்ரதிபலிப்புதான்.
இதனைச் சொன்னவர் மஹாஸ்வாமி!
அந்த ப்ரம்மத்தை அறிய குருவானவரைச் சரண்புகுந்து போற்றுவோமாக! மொத்தத்தில் காஞ்சி மஹாஸ்வாமி ஒரு அருட்பெரும் அறிவுக் களஞ்சியம்; ஞானக் களஞ்சியம். மகா பெரியவாளின் பாதார விந்தத்தில் நமஸ்கரித்து இந்த தெய்வத்தின் அருள் உண்மைகளை அடுத்த சந்ததியினர்க்கும் காட்டுவோம்.
परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment