Monday 6 October 2014

முதல் ஸ்தானம்!

முதல் ஸ்தானம்!

'ராமநாடகம்' பாட்டைப் போட்டவர் அருணாசலக்கவிராயர். ராமர் விஷயமான இலக்கியம் என்று தமிழ்நாட்டில் எடுத்துக் கொண்டால் கம்பராமாயணத்துக்கு அடுத்தபடியாக அவருடைய 'ராமநாடகம்'தான் பிரஸித்தம்.

பிரஸித்தம் என்று புகழ் பெற்றிருப்பதில் இப்படி இரண்டாவது ஸ்தானம் என்றால், ஜனங்களின் வாயிலே புரண்டு வருகிறதிலேயோ அதற்கே கம்பராமாயணத்தை விடவும் முன் ஸ்தானம், முதல் ஸ்தானம். ஏனென்றால் கம்பராமாயணம் எல்லாப் பொதுமக்களுக்கும் புரியாததாகக் கால வித்தியாஸத்தால் ஆகி, இப்போது புலவர் மொழிக் காவியம் என்பதாக ஆகிவிட்டது.

அருணாசலக்கவிராயர் இரண்டே நூற்றாண்டு முன்னாடிதான் இருந்தவர் என்பதாலும் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தில் பிறந்து எழுபது, எண்பது வயசு ஜீவித்தவர் (1711-1788) அவர். அதனாலும் அவர் பேச்சு மொழி, முக்கியமாக ராக, தாளங்கள் போட்டுப் பாடும்படியான கீர்த்தனங்களாக, மொத்தத்தில் ஸர்வ ஜனரஞ்ஜகமாக ஜனங்களின் வாய்ப் புழக்கத்துக்கு ஜாஸ்தியாக வந்துவிட்டது.

'ராம நாடகம்' என்பதாக அது இருப்பதும் ஸர்வ ஜன வசீகரத்துக்கு இன்னொரு காரணம். அதிலே ராமாயணக் கதை முழுவதையும் சொல்லிக் கொண்டு போகும்போது கவி தன் வாய்மொழியாக மட்டும் அவசியமான அளவுக்கே விருத்தமாகவும் பாட்டாகவும் பாத்திரங்களின் வசனங்களாகவே பாட்டுக்களின் மூலம் சொல்வது, அதைவிட ஜாஸ்தியாக அதிலே வருகிற பாத்திரங்களின் வசனங்களாகவே பாட்டுக்களின் மூலம் சொல்வது என்று ரூபம் பண்ணியிருக்கிறதால் அது நாடகமாகவே நடிப்பதற்கு ஏற்றதாக இருக்கிறது. அதிலும் Opera என்கிற ஸங்கீத நாடகமாக மாத்திரமில்லாமல் நாட்டிய நாடகம், Dance-Drama என்று சொல்கிறார்களே அப்படி! அந்தப் பாட்டுக்களை நாட்டியத்துக்கு ஏற்ற மாதிரியே அவர் உசிதமான வார்த்தைகளையும் ரஸபாவங்களையும் கலந்து பண்ணியிருக்கிறார்.

இப்படியெல்லாம் அந்த நூல் இருப்பதால் பொது ஜனங்களிலிருந்து ஸங்கீத வித்வான்கள் வரை பல பேரும் பாடியும், கதாகாலகே்ஷபக்காரர்கள் கையாண்டும், ஸதிர்க் கச்சேரி ஸ்திரீகள் ஆடியும், நாட்டிய- நாடகமாக அப்படிப் பல பெண்டுகள் சேர்ந்து நடித்துக் காட்டியும் பல தினுஸிலே அது பரவிவிட்டது. கீர்த்தனை என்று அந்தப் பாட்டுக்களைச் சொன்னாலும் 'ராம நாடகக் கீர்த்தனைகள்' என்றே அந்த 'ஒர்க்'குக்குப் பெயர் சொல்வதுண்டு.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator