ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட ஜாமீன், பறிக்கப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்
இன்று நடந்து வந்த ஜெயலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையில், தொடக்கம் முதலே ஜெயலிதாவிற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தார் அரசு தரப்பு வழக்கறிஞர் பவனிசிங். ஜெயலிதாவிற்கு ஜாமீன் கொடுத்தால், சாட்சிகளை களைத்து விடுவார், வெளிநாடு சென்று விடுவார் எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என பவானிசிங் வாதிட்டார்.
ஆனால் ஜெயலலிதா அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட மாட்டார் என ராம்ஜெத்மாலானி தெரிவித்ததை அடுத்து, பவனிசிங் நிபந்தனை ஜாமீன் கொடுத்தால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தார். இதனால் ஜெயலலிதாவிற்கு நிபந்தனை ஜாமீன் கொடுப்பதாக நிதிபதி அறிவித்தார்.
அதன் பிறகு சசிகலா,இளவரசி,சுதாகர் மீதான ஜாமீன் பற்றி விவாதம் நடந்தபோது ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கொடுக்கப்பட்டதால், இவர்களுக்கு கொடுப்பதாக நீதிபதி கூறினார். ஆனால் பவானி சிங் ஜெயலலிதாவிற்கு மட்டும் தான் நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, மற்றவர்களுக்கு கண்டிப்பாக ஜாமீன் கொடுக்ககூடாது, அவர்களுக்கு ஜாமீன் கொடுத்தால் மீண்டும் அவர்களை பிடிப்பது கடினம் என பவானி சிங் கூறினார்.
இதனால் ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட ஜாமீன் மனு உட்பட அனைத்து மனுவையும் நிராகரித்தார் நீதிபதி. இதனால் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
இன்று மாலை ஒரு அவசமனு தாக்கல் செய்யப்படுகின்றது. அதன் பின்பு தான் உறுதியாக ஜாமீன் கிடைத்ததா என தெரியவரும்.
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment