இன்று "குரு உத்ஸவ்". நம்முடைய குருமார்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நம் நன்றியை செலுத்தும் நாளாக இதை எடுத்துக் கொள்ளலாம். நம்மை இருளில் இருந்து, வெளிச்சத்திற்கும், அறியாமையிலிருந்து, விழிப்புணர்வுக்கும் எடுத்து செல்லும் ஒவ்வொருவரும், ஒவ்வொன்றும், நம் குருதான். குருமார்கள் நேரில் வந்து நமக்கு அருள வேண்டும் என்று அவசியமில்லை. அவர்களின் எண்ணங்களும், உபதேசங்களும் எழுத்து வடிவில் கூட நம்மை வழிகாட்டுகின்றன.
அவ்விதமே, ஸ்ரீமத் ராமானுஜர், ஆதிசங்கரர், ராகவேந்திரர் ஆகியோரின் உபதேசங்கள், விவேகானந்தர், ரமணர், ஓஷோ, ப்ரபுபாதா, யோகாநந்தர், சாணக்கியன் என பலருடைய எண்ணங்கள், நவீன காலத்து எழுத்தாளர்களான சுஜாதா, சாண்டில்யன், பாலகுமாரன், ஜாவர் சீதாராமன், எண்டமூரி விரேந்திரநாத், பால் பர்ட்டன், ஹெர்மென் ஹெஸ்ஸி, அயன் ரேன்ட், பௌலொ கோல்ஹோ ஆகியோரின் எழுத்துக்கள், ஒப்பற்ற கவிஞர்களான காளிதாஸன், கம்பன் மற்றும் பாரதியின் அசுரக் கவிதைகளின் தாக்கங்கள், புலவர் கீரன், வேலுக்குடி கிருஷ்ணன் போன்றோரின் சொற்பொழிவுகள் மற்றும் இங்கே நான் குறிப்பிட விரும்பாத சில உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என இந்த பட்டியல் மிக நீளமானது. இதில் விட்டுப் போனவர்கள் ஏராளம்.
இன்று கடுகளவேனும் சுயமாய் சிந்திக்க, எழுத என்னால் இயல்கிறது என்றால் அதற்கு மேற்சொன்னவர்களே மூல முதல் காரணம். அவர்களுக்கு என் பணிவான, சிரம் தாழ்ந்த வணக்கமும், நன்றியும்.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment