Monday 15 September 2014

ராம நாமத்தின் பெருமை: நன்றி: பால ஹனுமான் பிளாக்

ராம நாமத்தின் பெருமை:
நன்றி: பால ஹனுமான் பிளாக்

நாராயண எனும் நாமத்தைப் போலவே ராம நாமத்தின் பெருமையும் அலாதியானதுதான்.

கபீர்தாசரின் மீது அன்பும் பக்தியும் கொண்ட பத்மபாதர் என்பவர் கபீர்தாசரின் சீடராக இருந்தார். சகல சாஸ்திரங்களிலும் வல்லவர். ராமபிரான் மீது மிகுந்த பற்று கொண்டவர். ஒரு முறை தொழு நோயாளி ஒருவனை அவர் சந்தித்தார்.

உடல் முழுவதும் புண்ணாகி, அழுகி, ரத்தம் சொட்டச் சொட்ட நின்ற அந்தத் தொழுநோயாளியை அவனது உறவினர்கள் கங்கைக்கரைக்கு எடுத்து வந்தனர். எந்த மருத்துவத்தினாலும் அவன் நோய் குணமாகாத காரணத்தினால், வாழ்க்கையை வெறுத்த அந்த நோயாளி தன் உயிரை விடத் துணிந்தான்.

அவன் உடல் கங்கை நீரில் அமிழ்ந்து போகாமல் மிதக்கும் பொருட்டு அவன் கால்களிலும், கைகளிலும் குடங்களைக் கட்டும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த நேரத்தில் பத்மபாதர் அங்கே வந்தார். நடப்பதைக் கண்டு, என்ன விஷயம் என்று விசாரித்தார்.

சுற்றி நிற்பவர்கள் அவரிடம் தொழுநோயாளியைப் பற்றி எடுத்துரைத்தனர். அவன் ஒரு வியாபாரி என்பதை அறிந்த அவர் அவனைப் பார்த்து, "நோயாளியே, நீ வியாபாரியாக வாழ்ந்து உடலுக்குத் தேவையான அத்தனை சௌகரியங்களையும் குறைவில்லாமல் தேடிக் கொண்டாய். ஆனால் ஆத்மாவின் நலனுக்காக என்ன செய்தாய்?" என்று கேட்டார்.

அவன் மௌனமாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான். உடனே பத்மபாதர், "கவலைப்படாதே மனத்தூய்மையோடு, நீயும் உன் நலனில் அக்கறை வைத்திருப்பவர்களும் ஒரே சிந்தனையோடு ராம நாமத்தை மூன்று முறை தொடர்ந்து உச்சரியுங்கள். உன்னைப் பிடித்திருக்கும் தொழு நோய் ஓடிப் போய்விடும்" என்று உபதேசித்தார்.

அவர் பேச்சில் நம்பிக்கை வைத்த தொழுநோயாளியும், அவனது உறவினர்களும் மூன்று முறை மனத்தூய்மையோடு ராம நாமத்தை உச்சரித்தனர். ஆச்சரியப்படும் விதமாக இதுநாள் வரையில் வியாபாரியைப் பிடித்திருந்த நோய் அப்போதே மறைந்தது. அவன் உடல் தங்கம்போல ஜொலித்தது. இந்த அதிசயத்தை நிகழ்த்திய பத்மபாதரை அந்த வியாபாரி பல முறை தொழுது கண்ணீர் அஞ்சலி செய்து தன் நன்றிக்கடனைச் செலுத்தினான். சுற்றியிருந்த மக்கள் கூட்டமும் அவரைத் தொழுதது.

இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டார் கபீர்தாசர். தனது சீடர் பத்மபாதரை அழைத்தார். குருவின் அழைப்பைக் கேட்டு, பத்மபாதர் விரைந்து சென்று கபீர்தாசரை சந்தித்து வணங்கினார்.

"ஒரு தொழுநோயாளியின் நோயை ராம நாமத்தை உச்சரிப்பதன் மூலம் நீ போக்கியதை அறிந்தேன். அவனை எத்தனை முறை ராம நாமத்தை உச்சரிக்கச் சொன்னாய் ?" என்று கேட்டார் கபீர்தாசர்.

"மூன்று முறை குருவே" என்றார் பத்மபாதர் பணிவோடு.

"இத்தனை சிறிய பலனுக்காக ராமநாமத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டுமா? நகத்தினால் கிள்ளி எறியக் கூடிய இலையை கோடாரியால் வெட்டலாமா? மனம், மெய், வாக்கு மூன்றினாலும் சுத்தமாக இருந்து ராம என்ற மந்திரத்தை ஒரே ஒரு முறை சொன்னாலே நாம் பல ஜென்மங்களில் செய்த பாவம் அத்தனையும் அந்த நிமிடத்திலேயே எரிந்து சாம்பலாகி விடுமே! வேத புருஷனாலும் அளவிட்டுச் சொல்ல முடியாத பெருமை உடைய ராம நாமத்தை அல்ப விஷயத்தின் பொருட்டாக மூன்று முறை உச்சரிக்கச் செய்தது தவறாயிற்றே" என்று கடிந்து கொண்டாராம். திருமந்திரத்தின் பெருமையை கபீர் தாசரைப் போல இதை விட அருமையாக விளக்க முடியாது.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator